search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vivaciousness"

    • திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது.
    • த்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மேற்கு மாட வீதியில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பொரு ட்செலவில் பக்தர்களின் பங்களிப்புடன் மகா மண்டபம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்காக நேற்று காலை பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு ஜீவசமாதி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ஜீவசமாதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.

    ஏராளமான சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இங்கு சுப்ரமணிய தேசிகர் சமாதியும், அதே வளாகத்தில் திருவதிகை குமாரசாமி தம்பிரான் எனும் சடைச்சாமியார் ஜீவசமாதியும் உள்ளது. மேலும் சிவஞான தம்பிரான் சுவாமிகள், குண்டலபரதேசி சுவாமி ஆகிய சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இங்கு உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு ஜீவசமாதி இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த ஜீவசமாதி எந்த காலத்தை சேர்ந்தது. இங்கு ஜீவ சமாதி நிலையில் உள்ள சித்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஜீவசமாதிக்கு கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ய கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளது.

    ×