search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்
    X

    வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய போது எடுத்தப் படம்.

    தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்

    • கொரோனா பரவல் எதிரொலி
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதையடுத்து மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.

    இதைத் தொடர்ந்து தமிழ கம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்க ளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களிலும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வந்தது. முதல் மற்றும் 2-ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்தினார்கள்.

    குமரி மாவட்டத்தை பொருத்த வரை 14 லட்சத்து 1650 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 11 லட்சத்து 87 ஆயிரத்து 764 பேர் 2-ம் கட்ட தடுப்பூசியும், 2 லட்சத்து 96 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியிருந்தார்கள். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனா பரவல் குறைந்ததால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகா தார நிலையங்களில் புதன்கிழமை மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதன் கிழமை தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்தி வந்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் மற்ற நாடுகளில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து தமிழகத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

    இதையடுத்து இன்று நாகர்கோவில் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொது மக்கள் வந்திருந்தனர். மேலும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி னார்கள்.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வமாக வந்திருந்தனர்.

    Next Story
    ×