search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளூர் ரக பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்
    X

    கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த உள்ளூர் பயிர் ரகங்களை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்ட காட்சி.

    உள்ளூர் ரக பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்

    • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
    • திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் அறி வியல் மையம் இணைந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களை யுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வு களில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரக ங்களை உருவாக்க முடியும்.

    இதனால் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆண்டுக்கு மூன்று முறை இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்கள் வேளாண் விஞ்ஞானிகளுக்கு எடுத்து ரைக்கப்பட்டது.

    மேலும், குமரி மாவட்ட த்தில் பல்வேறு ரக வாழை இனங்கள் கண்டறியப்பட்டு, வாழை இனங்கள் நடவு செய்யப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளில் பல்வேறு ரகங்களை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்த கண்காட்சியில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ளூர் பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பல்வேறு பயிர்களின் உயர்தர உள்ளூர் ரகங்களின் விளைபொருட்க ளையும், இதர விளைபொருட்களையும் காட்சிப்படுத்தினர்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் காட்சிப் படுத்தப்பட்டது. மேலும் வேளாண் துறையின் மூலம் வேளாண் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான சுரேஷ், லதா, கவிதா, செல்வராணி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.

    இதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அங்கக வேளாண்மை வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் சொர்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா,

    தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண்மை துணை இயக்குனர் ஊமைத்துரை, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தர் டேணியல் பாலஸ், வேளாண்மை உதவி இயக்குனர் (தோவாளை) சுரேஷ், விதைச்சான்று உதவி இயக்குனர் ஷீபா, உதவி செயற்பொறியாளர் வர்கீஸ், வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) பொன்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×