search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள்"

    • அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
    • விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் அதிக மொழிகள் சேர்க்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விர்ச்சுவல் கீபோர்டில் 12 புதிய மொழிகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் ஆங்கிலம் (அமெரிக்க) மொழி மற்றும் எமோஜி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஷன் ப்ரோ சாதனம் அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையை மாற்றும் வகையில், ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ சாதனத்தை அதிக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அதிக மொழிகளை சேர்க்க இருக்கிறது. அதன்படி கான்டோனீஸ் (டிரேடிஷனல்), சைனீஸ் (சிம்ப்லிஃபைடு), இங்லீஷ் (ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன்), ஃபிரென்ச் (கனடா, ஃபிரான்ஸ்), ஜெர்மன் (ஜெர்மனி), ஜேப்பனீஸ் மற்றும் கொரியன் போன்ற மொழிகள் விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் சேர்க்கப்பட இருக்கிறது.

     


    புதிய மொழிகள் சேர்க்கப்பட இருப்பதால், விஷன் ப்ரோ மாடல் விரைவில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோன்று ஹாங்காங் மற்றும் தாய்வானிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யபப்டலாம் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டிற்குள் மேலும் அதிக நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங்-சி-கியூ ஆப்பிள் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன்பே அதிக நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
    • விலை மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி போன் மாடல்களை தங்கம் அல்லது வைரம் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக வெளியிடுவதில் புகழ்பெற்ற நிறுவனம் கேவியர். ஏற்கனவே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு அலங்கரித்து அவற்றின் விலையை கேவியர் மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

    இந்த வரிசையில், கேவியர் நிறுவனம் ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புது வெர்ஷன் ஆப்பிள் விஷன் ப்ரோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ விசேஷ எடிஷனில் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் குறிப்பிட்ட பாகங்கள் இடம்பெற்று இருக்கும். இதன் விலை கேவியரின் மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

     


    ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் வட்ட வடிவ வென்ட்கள் மற்றும் ஆரஞ்சு அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ்புறத்தில் விஷன் ப்ரோ முன்புற டிசைனை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இந்த டிசைன் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என இரு மாடல்களிலும் கிடைக்கிறது.

    விலையை பொருத்தவரை கேவியர் வடிவமைத்த ஆப்பிள் விஷன் ப்ரோ தழுவிய ஐபோன் 15 ப்ரோ 8 ஆயிரத்து 060 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் ஃபியூச்சர் கலெக்ஷன் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் புதிய ஐபோனுடன் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டெஸ்லா சைபர் டிரக் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

     


    கேலக்ஸி S24 அல்ட்ரா சைபர் டிரக் எடிஷனில் டெஸ்லாவின் சைபர் டிரக் மாடலை தழுவிய டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சைபர் டிரக் தோற்றம் கொண்டிருக்கிறது. மேலும் சைபர் டிரக் ஹெட்லைட் நிறம், சைபர் டிரக்-இல் பயன்படுத்தப்பட்ட மெட்டல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இவை தவிர எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடலை வாங்க நீண்ட காலம் திட்டமிடுவோர் தற்போது அதனை வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதன்படி ஆப்பிளின் ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஐபோன் 15 என்ட்ரி லெவல் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி கிடக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14-க்கு மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரதது 900 விலையில் அறிமுகம் செய்யப்ட்ட ஐபோன் 15 விலை ரூ. 66 ஆயிரத்து 499 என மாறியுள்ளது.

    வங்கி சலுகைகளாக ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 9 ஆயிரத்து 901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 3 ஆயிரத்து 325 வரை குறைந்துள்ளது. இவை தவிர பயனர்கள் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.

    • இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
    • இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

     


    பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.

    மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்.
    • திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஊழியர்களுடன் நிறுவனத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுதாக அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் வில்லியம்ஸ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் போது திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 2 ஆயிரத்திற்கும் அதிக டெக்னிஷியன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்படுவர் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும். புதிய தகவல் குறித்து ஆப்பிள் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், சந்தையில் தற்போது ஆப்பிள் சாதனங்கள் ஈட்டி வரும் லாபத்தை புதிய கார் ஈட்டுமா என்பதும், காரை வெளியிடுவதற்கு மட்டுமே இன்னமும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் தான் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஒருவேளை ஆப்பிள் கார் வெளியாகும் பட்சத்தில் அதன் விலை நிச்சயம் 1 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் வரையிலான விலையை கொண்டிருக்கும். இத்தனை விலை கொடுத்து காரை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் சந்தையில் இது எதிர்பார்த்த லாபத்தை ஈட்டும் வாய்ப்புகள் குறைவு தான் என ஆப்பிள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • ஆப்பிள் "தானியங்கி கார்கள்" தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிட்டது
    • சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு மாற்றப்பட்டனர்

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உலகம் முழுவதும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இதில், ஐபோன் (iPhone) எனும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும்  களம் இறங்கியது.

    "அட்டானமஸ் வெஹிகிள்" (autonomous vehicle) எனப்படும் ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஆப்பிள் ஈடுபட்டு பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது.

    சுமார் 2 ஆயிரம் வல்லுனர்கள் இதில் பணியாற்றி வந்தனர்.

    இத்தகைய வாகனங்களில் பிற கார்களில் உள்ளதை போல் "ஸ்டியரிங் வீல்" மற்றும் "பிரேக்", "கிளட்ச்", "ஆக்சிலரேட்டர்" போன்ற பெடல்கள் இருக்காது. இதன் இயக்கம் "குரல்" மூலம் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வந்தது.

    ஆனால், இதுவரை இத்திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. தானியங்கி காரை உருவாக்க மேலும் பல வருடங்கள் ஆகலாம் என தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, இந்த தானியங்கி கார் உருவாக்க திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை வளர்ச்சி அடைந்து வருவதால், அதில் முதலீடுகளை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கவில்லை.

    அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்களுக்கு சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனம் போட்டியாக உள்ளதால், டெஸ்லா, மின்சார கார்களின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    அதிகரிக்கும் உற்பத்தி செலவு மற்றும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காத தேவை ஆகிய காரணங்களால் மின்சார கார் சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆப்பிள் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
    • வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.

    காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

     1. வாழைப்பழம்:

    வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

     2. தர்பூசணி:

    தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

     3. பப்பாளி:

    பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

     4. ஆரஞ்சு:

    வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

     5. ஆப்பிள்:

    ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

     6. அன்னாசி:

    அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

     7. மாம்பழம்:

    வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

     8. பெர்ரி:

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

     9. கிவி:

    கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

     10. திராட்சை:

    திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.

    • செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது.
    • பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் பேட்டரி ஆயுள் அதிகளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஐபோன் 15 சீரிசில் உள்ள பேட்டரி திறன் அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இருமடங்கு அதிகமுறை சார்ஜ் செய்யும் போதும் ஆயுளை தக்கவைத்துக் கொள்ளும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐ.ஒ.எஸ். 17.4 அப்டேட் மூலம் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அதன் செட்டிங்ஸ்-இல் போன் பேட்டரி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை டிஸ்ப்ளே செய்கிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

     


    "ஐபோன் 15 மாடல்களின் பேட்டரிகள் ஆயிரம் முறை சார்ஜ் செய்த பிறகும் 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது," என பேட்டரி குறித்த தரவுகளில் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்களின் பேட்டரிகள் 500 முறை சார்ஜ் செய்த பிறகு 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன.

    குறிப்பிட்ட நிலைகளில் ஐபோன் 15 சீரிசை சார்ஜிங் மற்றும் பயன்பாடுகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோனின் பேட்டரி பாகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு சிஸ்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்கலாம்.
    • எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஐபோன் 13 மாடலின் பேஸ் வேரியன்டில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 50 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

    முன்னதாக ஐபோன் 13 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51 ஆயிரத்து 790 என மாறி இருக்கிறது. இதன் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்கார்டு கிரெடிட் கார்டு மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ட்ரூ டோன், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி, ஐ.ஒ.எஸ். 17 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5, என்.எஃப்.சி. மற்றும் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    • காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஐபோன் 14 சீரிசின் மேம்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேண்ட், 48MP கேமரா, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

     


    ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 79 ஆயிரத்து 900-க்கும், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் விலை முறையே ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டன. ப்ளிப்கார்ட் காதலர் தின சலுகையாக இதன் பேஸ் மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 900 குறைவு ஆகும்.

    விலை குறைப்பு மட்டுமின்றி பேங்க் ஆஃப் பரோடா, சிட்டி, டி.பி.எஸ். மற்றும் எச்.எஸ்.பி.சி. கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அல்லது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி பெற முடியும். ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 15 விலையை ரூ. 63 ஆயிரத்து 999 என மாற்றுகிறது.

    ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரத்து 300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 15 மாடல் - கிரீன், புளூ, எல்லோ, பின்க் மற்றும் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடல் தொடர்பான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் SE 4 மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலின் டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடலில் நாட்ச் நீக்கப்பட்டு டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டைனமிக் ஐலேண்ட் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தியது.

     


    பிறகு, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட்டது. புதிய ஐபோன் SE 4 குறித்து டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள தகவல்களில், "புதிய ஐபோன் SE 4 மாடலின் டிசைன் தற்போது உருவாக்கப்படும் ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்," என தெரிவித்தார்.

    இத்துடன் ஐபோன் SE நான்காம் தலைமுறை மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அளவீடுகளை பொருத்தவரை ஐபோன் SE 4 ஆப்பிள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஐபோன் XR போன்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், ஆப்பிளின் 5ஜி சிப்செட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்கியது.

    ×