search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவ மழை"

    • இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
    • பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,

    மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.

    தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.

    தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் ஆகி யோர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க உத்தர விட்டனர். அதன்படி கொசு புழு ஒழிப்பு பணியா ளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வார்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலை யில் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இதில் சேலம் மெயின் ரோடு, பஸ் நிலையம், திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூண்டி ஏரி பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் பிரபு சங்கர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி கேட்டறிந்தார். முன்னதாக அவர் பூண்டி ஏரியிலிருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். மேலும் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் சத்ய நாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் உடன் இருந்தனர்.

    • பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருகி வாடுகிறது.
    • விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை ஊராட்சியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவ சாயம் நடந்து வருகிறது.

    இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பருவ மழையை நம்பி பெரியகாரை பகுதி விவசாயிகள் ஏக்க ருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் களை பயிரிட்டனர்.

    ஆனால் காலம் கடந்த பின்பும் பருவ மழை கைகொடுக்கவில்லை. இதனால் வயல்கள் வறண்டு விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் போதிய தண்ணீர் பாய்ச்சாததால் நெற்பயிர் கள் கருகி வாடும் நிலையில் உள்ளன. கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினா லும் போதவில்லை. இதனால் பயிர்கள் கருகி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தேவகோட்டை வட்டத்தில் ஒரு சில நபர்களை தவிர பெரும்பாலான விவசாயிக ளுக்கு பயிர் காப்பீட்டு நிவா ரணம் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ள னர். மாவட்ட கலெக்டர் இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டை செய்யலாம் என அறிவித்துள்ள நிலையி லும் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பு பணிகளை இதுவரை அதி காரிகள் மேற்கொள்ள வில்லை.

    எனவே வாடும் பயிர்க ளின் நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
    • இயக்குனர் ரவி ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்: 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடங்கி உள்ளது. இந்த பருவமழையானது பல இடங்களில் கொட்டி தீர்த்து வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இந்த பருவ மழையில் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் மரக்காணம் பகுதியிலும் பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யப் போகிறேம். இவ்வாறு கூறினார். அப்பொழுது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்கள் உடன் இருந்தனர்.

    • நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தும்போதோ கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவிவிடுகிறது.
    • குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    திருப்பூர் :

    மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் பஞ்சம் இல்லாமல் தொற்றிக்கொள்ளும். இதில் முதன்மையாக திகழ்வது வைரஸ் காய்ச்சல். குறிப்பாக புளு காய்ச்சல் அதிக அளவில் ஏற்படுகிறது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தும்போதோ கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவிவிடுகிறது.

    தும்மல், மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால் வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

    இது குறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகையில், காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் மாத்திரை உதவும். ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். இருப்பினும் மருத்துவர்களைக் கலந்தாலோசித்து மருந்து உட்கொள்வதே சிறந்தது.குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. காய்ச்சலைத் தணிக்க நடவடிக்கை தேவை. வழக்கமாக காய்ச்சல் நோயாளிகள், திட உணவு உட்கொள்வதற்கு பதிலாக திரவ உணவுகளை உட்கொள்வது சிறந்தது. எளிதில் ஜீரணிக்க உதவும். தூய்மையான குடிநீரைக் காய்ச்சி பருகுவதும் அவசியம். கொரோனா தொற்று பரவல் பொதுமக்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியது. அதேசமயம் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சுகாதாரம் குறித்த அக்கறை மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. இது நோய்களில் இருந்து காக்கும் என்றனர்.

    ஊட்டச்சத்து வல்லுனர்கள் கூறுகையில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்களுக்கு எளிதாக நோய் தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து ஆகாரங்களை உட்கொள்வது முக்கியம். மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் மட்டுமின்றி, வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்றவையும் பரவுகின்றன. கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமே பிரதானம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்குவதிலும் கவனம் தேவை. முடிந்தவரை, நோயில் இருந்து விடுபடும் வரை பள்ளி செல்வதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரலுடன் கூடிய மழை நீடித்து வருகிறது.
    • பருவமழை துவங்கியதால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரலுடன் கூடிய மழை நீடித்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான தளி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதிகளில் மழை நீடிப்பதால், இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. பருவமழை துவங்கியதால் வனப்பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் ,குட்டைகள் , தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருமூர்த்தி மலையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அமணலிங்கேஸ்வரர் கோவில் ,பஞ்சலிங்க அருவி பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    ×