search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகத்தில்  கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
    X

    கொசு மருந்து அடிக்கும் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

    தியாகதுருகத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் ஆகி யோர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க உத்தர விட்டனர். அதன்படி கொசு புழு ஒழிப்பு பணியா ளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வார்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலை யில் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆட்டோ மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இதில் சேலம் மெயின் ரோடு, பஸ் நிலையம், திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    Next Story
    ×