search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி- 200 வாகனங்களில் மாம்பழம் விற்பனைக்கு குவிகிறது
    X

    வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி- 200 வாகனங்களில் மாம்பழம் விற்பனைக்கு குவிகிறது

    • கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது தினசரி 100 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது.
    • வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினசரி 500 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    மாம்பழம் சீசன் காரணமாக தற்போது சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலையோரங்களில் ஏராளமான பழக்கடைகள் முளைத்து உள்ளது.

    மேலும் வீடு தேடி தெருக்களில் மூன்று சக்கர தள்ளுவண்டிகளில் மாம்பழங்களை வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது தினசரி 100 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினசரி 500 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இதனால் மாம்பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கனப்பள்ளி ரூ.35-க்கும், ஜவாரி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் பொதுமக்கள் அதிக அளவு மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:- பங்கனப்பள்ளி-ரூ.25 முதல் ரூ.35 வரை, இமாம்பசந்த்-ரூ.80 முதல் ரூ.100 வரை, செந்தூரா-ரூ.20 முதல் ரூ.30 வரை, மல்கோவா-ரூ.60 முதல் ரூ.70 வரை, அல்போன்சா-ரூ.40 முதல் ரூ.60 வரை, ஜவாரி-ரூ.40 முதல் ரூ.50-வரையும் விற்கப்படுகிறது.

    Next Story
    ×