என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "election officer"
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
- தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.
இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தபோது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர்.
- அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர். இந்நிலையில் பிரசாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இது பற்றி தெரிய வந்ததும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் நாங்கள் அனுமதி பெற்று தான் பிரசாரம் செய்கிறோம்.
ஆனால் போலீசார் எங்கள் தொண்டர்களை அனுமதி இல்லை என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி அனுமதி இன்றி பிரசாரம் செய்தால் என்னிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் அனுமதி வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.
- திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர்.
திருப்பூர் :
கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியான வாக்காளர் பட்டியல் விவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர். ஆண்கள் - 11,76, 924, பெண்கள் -12, 12, 381, திருநங்கைகள்- 309 பேர் உள்ளனர்.ஏறத்தாழ 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் நிறைந்த மாவட்டம் என்பதால் அடிக்கடி குடிபெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். வாடகை வீடு என்பதால் மாறிக்கொண்டே இருக்கின்றனர். அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர். தாங்களாக முன்வந்து பெயர் நீக்க விண்ணப்பித்தும் பெயர் நீக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைக்கப்பட்டதும் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டன.
அதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைத்தால் மட்டுமே செம்மையான பட்டியல் தயாரிக்க முடியும். தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதமும், துல்லியமாக இருக்கும்.ஒருவழியாக, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க இந்திய தேர்தல் கமிஷன் தயாராகிவிட்டது. இன்று முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்பணி தொடர்ச்சியாக டிசம்பர் மாத இறுதி வரை நடக்க உள்ளது. அடுத்து வெளியாகும் வாக்காளர் இறுதி பட்டியல், ஆதார் விவரத்துடன் இணைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முறையாக அறிவிப்பு வெளியிட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், படிவம் -6 பி பூர்த்தி செய்து, ஆதார் விவரங்களை இணைக்கலாம். ஆன்லைனில் இணைக்க முடியாதவர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் அறிவிப்பு செய்யும் என்றனர்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க தேர்தல் கமிஷன் வசதி செய்துள்ளது. 'ஆன்லைன்' மூலமாக படிவம் - 6பி' யை பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலே போதும். https://www.nvsp.in, voterhelpline - மொபைல் ஆப் வழியாக படிவம் - 6பி'யை பூர்த்தி செய்து எளிய முறையில் ஆதார் விவரத்தை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
7-வது கட்ட தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வருகிற 19-ந் தேதி மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முறை விவிபாட் என்று சொல்லக்கூடிய ஒப்புகை சீட்டு முறை அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபாட்டில் பதிவான ஓட்டுகளும் சமமாக இருக்க வேண்டும். இதில் வேறுபாடு ஏற்பட்டால் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதாக கருதப்படும்.
எனவே வாக்குப்பதிவு எந்திரம்-விவிபாட் எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகள் ஒரே எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்கா ஆகியோர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் துணை கமிஷனர்கள் பாலாஜி, ராஜதுரை, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, இயக்குனர் நிகில்குமார், டைரக்டர்ஜெனரல் திலீப் சர்மா மற்றும் புதுச்சேரி, குஜராத், லட்சத்தீவுகள் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 38 தொகுதிகளை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும், 18 தொகுதி இடைத்தேர்தல்களை நடத்திய தேர்தல் அதிகாரிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணும் போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் மின்னணு எந்திரங்களையும், விவிபாட் எந்திரங்களையும் முறையாக கையாள வேண்டும். விவிபாட் எந்திரத்தில் வித்தியாசம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு துணை ஆணையர்கள் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள், நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தியது.
இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டமும் இயற்றப்பட்டது.
சென்னையில் மட்டும் 35 ஆயிரம் கடைகளில் சோதனை நடத்தி 165 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு சார்புடைய நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் அரசு தடை காரணமாக பிளாஸ்டிக் பைகளை பெரும்பாலும் தவிர்த்து விட்டன.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அதிகாரிகள் கவனம் திசை மாறியது. எல்லோரும் தேர்தல் பணிக்கு சென்றதால் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்காணிக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் சர்வசதாரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழங்குகின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகளை மீண்டும் உற்பத்தி செய்யவும் தொடங்கி விட்டனர். இதனால் மீண்டும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிய தொடங்கி உள்ளது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வில்லை.
அதே நேரம் பிளாஸ்டிக் சமூகத்துக்கு தீங்கு விளை விப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்” என்றார்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #plasticban #electionofficer
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.
அவரது பெயர் எப்படி பட்டியலில் இல்லாமல் போனது என்பது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அவரை எப்படி ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது பற்றியும் அறிக்கை கேட்டு இருக்கிறோம்.
இதில் யார் தவறு செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்கு அளித்த விவரத்தை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம்.
ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க ஒரு ஓட்டு தேவை என்ற நிலை வந்தால் இவருடைய ஓட்டு கணக்கில் எடுக்கப்படாது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு அளித்த விவகாரம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.
மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கை தந்துள்ளார். அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை இருக்குமா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும்.
கரூர் தொகுதியிலும் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விசாரித்து அறிக்கை தர சிறப்பு தேர்தல் அதிகாரி ராஜாராம் சென்றுள்ளார். அவர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் இன்னும் பறக்கும் படை கண்காணிப்பு குழு தொகுதிக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகளும், கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #sivakarthikeyan
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அரியலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
மேலும் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைப்பது மற்றும் பணப்பட்டு வாடாவை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி, உரிய அனுமதியின்றி எடுத்து செல்லும் பணம், நகை மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹேமந்த் ஹல்க் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.
இன்று காலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி 9 முறை சுட்டதாக பரபரப்பு தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் எஸ்.பி. (பொறுப்பு)திஷாமித்தல் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஹேமந்த் ஹல்க் இன்று அதிகாலை சுற்றுலா மாளிகை அறையில் இருந்து வெளியே வந்தததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை கேட்டுள்ளார். உயர் அதிகாரி என்பதால் போலீஸ்காரரும் தன்னிடமிருந்த துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிய ஹேமந்த் ஹல்க் திடீரென வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு ஹேமந்த் ஹல்க் துப்பாக்கியுடன் தனது அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார். அவர் எதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலைப்பளு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது மன ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணப்பட்டுவாடா புகார் எழுந்த தன் காரணமாக அதனை தடுப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுட்டாரா? என்றும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த் ஹல்க் குடிபோதையில் இருந்ததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் தேர்தல் பார்வையாளர் குடிபோதையில் துப்பாக்கியால் சுட்டது அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை முறைகளை பற்றி விவரிக்கும் சிறப்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
தாசில்தார் வில்சன் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர் பார்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிற கட்சிகள் மீது விமர்சனம் செய்யும் போது அக்கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் மட்டும் இருக்க வேண்டும்.
ஆனால் பிறகட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சொந்த வாழ்கை பற்றிய விமர்சனங்கள், நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகள், மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
மேலும் அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். வாக்குகளை பெறுவதற்காக இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக்கூடாது.
தேர்தல் பிரச்சார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோவில் போன்ற வழிபாடு தலங்கள் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாற்றம் செய்தல் போன்ற குற்றசெயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு உதவி தேர்தல் அலுவலர் பார்வதி தெரிவித்தார்.
இதில் துணை வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் அனுமந்த், மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentaryElection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்