search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடங்கள்"

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
    • தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.

    இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.
    • 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது.

    ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல. தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநி லங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
    • இது தவிர மினி லாரிகள், டெம்போக் கள், தனியார் பஸ்கள், கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

    சேலம்:

    Salem District News,

    ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்

    டிரைவர்கள் லைசென்ஸ் எடுப்பது, புதுப்பிப்பது, வாகனங்க ளுக்கு அனுமதி வாங்குவது, வாகனங்களை பதிவு செய்வது, புதிய நம்பர் வாங்குவது, எப்.சி. காட்டுவது உள்பட பல்வேறு பணிகளும் ஆர்.டி.ஓ. அலு வலகங்களில் நடைபெறு கிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, தெற்கு, கிழக்கு, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 6 இடங்களில் ஆர்.டி.ஒ. அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவல கங்களில் மேட்டூர், சேலம் கிழக்கு, தெற்கு, மேற்கு அலுவலகங்க ளில் பணி புரிந்த ஆர்.டி.,ஓ.க்கள் அடுத் தடுத்து கடந்த சில மாதங்க ளில் ஓய்வு பெற்றனர்.

    4 பணி இடங்கள் காலி

    இதனால் இந்த பணி யிடங்கள் தற்போது காலி யாக உள்ளது. மேலும் ஆத்தூர் ஆர்.டி.ஓ. சேலம் மேற்கு அலுவலக பொறுப் பையும், சங்ககிரி ஆர்.டி.ஓ. மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவல கத்தையும், தர்மபுரி ஆர்.டி.ஓ. சேலம் கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தையும் கூடுதலாக கவனித்து வரு கிறார்கள். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆர்.டி.ஓ.க்கள் நிரந்தரமாக இல்லாததால் ஒவ்வொரு பணிகளும் கால தாமதமா கிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு பணிக்கும் பல முறை அலை யும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவு, அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது.

    கோரிக்கை

    எனவே வாகன உரிமை யாளர்களின் நலனை கருத் தில் கொண்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 4 ஆர்.டி.ஓ. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பாதுகாப்பு பிரிவில் 1.70 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது.
    • ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் அனுப்பியுள்ள ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே துறையில் 2.74 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இதில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் மட்டுமே 1.70 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே அனுப்பியுள்ள பதிலில், '2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி இந்திய ரெயில்வேயில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று கூறியுள்ளது.2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 9,82,037 ஆகும் என கூறியுள்ள ரெயில்வே அமைச்சகம், இதில் 8,04,113 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும், 1,77,924 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    முன்னதாக ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • கல்வித்தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடந்தது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர்.

    இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலை பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆக மொத்தம் 64 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றதே இதற்குக் காரணமாகும்.

    தற்போது இந்த 64 பள்ளிகளில் மூத்த ஆசிரியர் கள் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவால் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. அதனால் தலைமை யாசிரியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை.

    நிரந்தர தலைமையாசிரியர் இல்லாமல் பள்ளிகள் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியர் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் 10-ம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஆனால்

    கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்தது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு பின் தங்கியது. கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்தி ருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே கல்வித்தரத்தில் பின்தங்கி வரும் நிலையில், 64 பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக கல்வி அமைச்சர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எழுத்தர், சீட்டு விற்பனையாளர், தட்டச்சர், காவலர், தோட்டக்காரர், உதவி மின் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    • இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வழக்கு எழுத்தர்-1, சீட்டு விற்பனை யாளர் -2, தட்டச்சர் -1, காவலர் -4, தோட்டக்காரர் -1, திருவலகு -2, கூர்க்கா-1, உதவி மின் பணியாளர் -1 என 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர், எழுத படிக்க தெரிந்தவர்கள், மின் கம்பி பணியாளர் பயிற்சி பெற்றவர்கள், மின்வாரிய த்தில் 'எச்' சான்று பெற்றவ ர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம், தகுதி உள்ளிட்ட விவரங்களை, https://sivanmalaimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் அல்லது நேரில் வழங்கலாம். பணிகளின் பெயரை தபால் கவர் மீது எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, தகுதியான விண்ணப்பதாரர் மே 17 ந் தேதி மாலை 5:45 மணிக்குள் கோவிலுக்கு கிடைக்கும் வகையில் ஆவண நகல்கள் மற்றும் சுய விலாசமிட்ட தபால் உறையு டன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மயிலாடுதுறையில் மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், உட்பட 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்சன் கமிசன் பல்வகை பணியாளர் பணிக்கு ஆபரேட்டர், பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், தோட்டக்காரர் ஹவல்தார் உட்பட 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் 17.2.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மேற்கண்ட மத்திய அரசு பணி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், படிக்க வேண்டிய பாடங்கள், இலவச பயிற்சி வகுப்புகள், பாடக்குறிப்புகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகர் 2-வது குறுக்குதெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    • பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் முத ற்கட்டமாக 9 போலீஸ் நிலையங்களுக்கு வரவே ற்பாளர்களை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டு அவர்க ளுக்கான பணியிடங்களை வழங்கினார்.

    இந்த வரவேற்பாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவி புரியும் வகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் திருவாரூர் தாலுக்கா, கூத்தாநல்லூர், நன்னிலம், வலங்கைமான், அரித்துவாரமங்கலம், பரவாக்கோட்டை, நீடாம ங்கலம், வடுவூர் மற்றும் திருத்துறைப்பூண்டி என 9 போலீஸ் நிலையங்களுக்கு இந்த வரவேற்பாளர்களை நியமனம்
    செய்யப்பட்டுள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.

    இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.

    இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 37 ஆகும்.

    தாராபுரம்:

    தாராபுரம் வட்டாரத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனத் தோ்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபா்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் ஜெகஜோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் வட்டாரத்தில் தாராபுரம் தெற்கு, கிளாங்குண்டல், பொன்னிவாடி, நஞ்சைத் தலையூா், அரிக்காரன்வலசு, புதுப்பை ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 6 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வயது வரம்பு அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 21 ஆகும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 37 ஆகும். மாற்றுத் திறனாளிகள் நிா்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குமேல் 10 ஆண்டுகள் வரை வயது வரம்புக்கு மேல் சலுகை உடையவா் ஆவா்.விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தாராபுரம் தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.தகுதியான நபா்கள் இணையதள முகவரியில் நவம்பா் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
    • ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    உடுமலை:

    தமிழகத்திலுள்ள உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி, வணிகவியல், கணக்கியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தனியார் கல்லூரிகள் போன்று அரசு கல்லூரிகளிலும், பல்வேறு தொழில் அமைப்பினர் 'கேம்பஸ் இன்டர்வியூ' வாயிலாக, மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் பல இடங்களில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போதியளவில் விரிவுரையாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை.இதனால் கல்வி போதிப்பு பணியில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, உடனே காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்ட ப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்ப டும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×