search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் மாவட்டத்தில் 9 போலீஸ் நிலையங்களுக்கு வரவேற்பாளர்கள் நியமனம்
    X

    வரவேற்பாளர்களாக நியமனமிக்கபட்டவர்கள் எஸ்.பி. சுரேஷ்குமாருடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் 9 போலீஸ் நிலையங்களுக்கு வரவேற்பாளர்கள் நியமனம்

    • பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் முத ற்கட்டமாக 9 போலீஸ் நிலையங்களுக்கு வரவே ற்பாளர்களை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டு அவர்க ளுக்கான பணியிடங்களை வழங்கினார்.

    இந்த வரவேற்பாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவி புரியும் வகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் திருவாரூர் தாலுக்கா, கூத்தாநல்லூர், நன்னிலம், வலங்கைமான், அரித்துவாரமங்கலம், பரவாக்கோட்டை, நீடாம ங்கலம், வடுவூர் மற்றும் திருத்துறைப்பூண்டி என 9 போலீஸ் நிலையங்களுக்கு இந்த வரவேற்பாளர்களை நியமனம்
    செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×