சேலம் மாவட்டத்தில் 4 ஆர்.டி.ஓ. பணியிடங்கள் காலியானது

சேலம் மாவட்டத்தில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநி லங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர மினி லாரிகள், டெம்போக் கள், தனியார் பஸ்கள், கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 4 ஆர்.டி.ஓ. பணியிடங்கள் காலியானது
Published on

சேலம்:

Salem District News,

ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்

டிரைவர்கள் லைசென்ஸ் எடுப்பது, புதுப்பிப்பது, வாகனங்க ளுக்கு அனுமதி வாங்குவது, வாகனங்களை பதிவு செய்வது, புதிய நம்பர் வாங்குவது, எப்.சி. காட்டுவது உள்பட பல்வேறு பணிகளும் ஆர்.டி.ஓ. அலு வலகங்களில் நடைபெறு கிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, தெற்கு, கிழக்கு, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 6 இடங்களில் ஆர்.டி.ஒ. அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவல கங்களில் மேட்டூர், சேலம் கிழக்கு, தெற்கு, மேற்கு அலுவலகங்க ளில் பணி புரிந்த ஆர்.டி.,ஓ.க்கள் அடுத் தடுத்து கடந்த சில மாதங்க ளில் ஓய்வு பெற்றனர்.

4 பணி இடங்கள் காலி

இதனால் இந்த பணி யிடங்கள் தற்போது காலி யாக உள்ளது. மேலும் ஆத்தூர் ஆர்.டி.ஓ. சேலம் மேற்கு அலுவலக பொறுப் பையும், சங்ககிரி ஆர்.டி.ஓ. மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவல கத்தையும், தர்மபுரி ஆர்.டி.ஓ. சேலம் கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தையும் கூடுதலாக கவனித்து வரு கிறார்கள். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆர்.டி.ஓ.க்கள் நிரந்தரமாக இல்லாததால் ஒவ்வொரு பணிகளும் கால தாமதமா கிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு பணிக்கும் பல முறை அலை யும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவு, அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது.

கோரிக்கை

எனவே வாகன உரிமை யாளர்களின் நலனை கருத் தில் கொண்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 4 ஆர்.டி.ஓ. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com