search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebration"

    • நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் ,விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.
    • மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

    தமிழ் பட உலகில் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்கிறார். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் 'அன்னபூரணி' படத்தில் நடித்தார். அந்தப் படம் 75- வது படமாகும்.

    'அன்னபூரணி' படம் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை தரவில்லை. மேலும் தமிழில் 'மண்ணாங்கட்டி' மலையாளத்தில் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.



    இந்நிலையில் தமிழ், மற்றும் மலையாள புத்தாண்டு தினத்தை யொட்டி நேற்று நயன்தாரா தனது வீட்டில் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.

    நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் அணிந்து இருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.

    தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் சேர்ந்து புத்தாண்டை உற்சாக மகிழ்ச்சியுடன்கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.




    மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.

    • ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
    • சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.




    'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார். 

    1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். 




    ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.

    இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    திருப்பூர்:

    வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணி யாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரெயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்று ள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநில த்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர். 

    அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    நீர் இன்றி அமையாது உலகு..என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

    இன்று 'உலக தண்ணீர் தினம்'

    உயிர்களின் அடிப்படை தேவையாக தண்ணீர் அமைந்து உள்ளது.உணவு தயாரிப்பது, குளிப்பது, குடிப்பது மற்றும் விவசாய உற்பத்தி, தொழிற்சாலை உற்பத்தி என மனிதனின் அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறதுஒரு நபருக்கு தினமும்  80 லிட்டர் தண்ணீர் சராசரியாக தேவைப்படுகிறது.

    மக்கள் தொகை பெருக்கம்,தொழிற்சாலைகள் அதிகரிப்பு,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.உலகில் பல நாடுகளில் பல லட்சம் மக்கள் சுகாதாரமான குடிநீர், தண்ணீர் இல்லாமல் உள்ளனர்.




    பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையும் 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீரும் உள்ளது.டெல்லி, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உளிட்ட பல்வேறு நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    பருவநிலை மாற்றம், மழைப் பொழிவு குறைவு மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.




    1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா சபை மாநாட்டில் ' உலக தண்ணீர் தினம்' முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 - ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த. தினத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.

    தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்...நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    • தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
    • சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள்.

    2024 புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், லாட்ஜ்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தனியார் அமைப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் இருந்தது. ஓட்டல்கள், லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    இன்னிசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், அறுசுவை உணவு என புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலாபயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது.

    இன்று காலையும் ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் கம்பளி ஆடை மற்றும் குல்லா அணிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

    சுற்றுலாபயணிகள் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை அனுபவிக்கவும் மற்றும் புத்தாண்டை கொண்டாடவும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை மகிழ்விக்க விதவிதமான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதவிதமான சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவையும் கொண்டாட்டத்தில் இடம்பெற உள்ளன. இது தவிர புத்தாண்டு தினத்தில் இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் சாக்லேட்டுகள் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை சாக்லேட்டுகள் தங்களது சொந்த தயாரிப்பில் தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த ஆண்டு புது புது வண்ணமயமான சாக்லேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் குறிப்பாக பாதாம் பிஸ்தா உள்ளிட்டவைகளை வைத்து சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் புது விதமாக பிரௌனி வித் சாக்லேட் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் . இதில் எந்தவித ரசாயனமும் கலக்காமல் சுத்தமாக செய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். சாக்லேட் என்றாலே குழந்தைகளை கவரும் என்பார்கள். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சாக்லேட்டுகள் வண்ணமயமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வகையான சாக்லேட்களை சுற்றுலா பயணிகள் அன்பளிப்பாகவும் வழங்கி வருகின்றனர்.

    • தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
    • சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது.

    சேலம்:

    ஜனவரி மாதம் 1-ந் தேதி வந்துவிட்டால் போதும். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட சூழலில் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அப்படித் தான் இன்றைய தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு-2024 இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால் மலைப் பகுதியில் நிலவும் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றின் மத்தியில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    கோவில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மால்களில் குவிவது ஒரு ரகம். சுற்றுலா தலங்களை தேடி தேடி சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது மற்றொரு ரகம்.

    அந்த வகையில் "ஏழைகளின் ஊட்டி" என்று பாசமாக அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம், கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி , ஆந்திரா உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது தமிழத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காட்டில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் திருவிழா கோலம் போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள பூங்காக்கள், ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

    இதற்காக முன்கூட்டியே அதாவது நேற்று இரவு முதலே பக்காவாக திட்டம் தீட்டி வைத்து பஸ்கள், மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சாரை, சாரையாக ஏற்காட்டிற்கு வருகின்றனர்.

    இன்று ஒருநாள் ஏற்காட்டில் தான் என்று. ஏற்காட்டின் மையப் பகுதியான ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், அதன் இயற்கை அழகை ரசித்தும் வருகின்றனர். ஆங்காங்கே உள்ள திடீர் கடைகளில் கிடைக்கும் சுட சுட சோளக்கதிர், நிலக்கடலை, மிளகாய் பஜ்ஜி போன்றவற்றை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர்.

    சேலம் மாவட்டத்தின் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காலநிலை குளிர்ச்சியாக இருக்கும். இது டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 16.7 செல்சியஸ் வரை தொடும். அந்த வகையில் 4,969 அடி உயர்த்தில் உள்ள ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி படர்ந்து காணப்படுகிறது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மற்றும் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்காட்டில் வெப்பநிலை மனதிற்கு இதமாகவும், சில்லென்ற காற்றோடு அம்மண்ணின் வாசத்தையும் அள்ளித் தருவதால் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

    இந்த புத்தாண்டையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறியுள்ளோம்.

    விடுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படால் இருக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மது அருந்திவிட்டு எவரும் வாகனங்களை இயக்கக் கூடாது.

    சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சியாளர்கள், நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப்பகுதிகள் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    சோழிங்கநல்லூர்:

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

    இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

    இதையொட்டி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன் னேற்பா டுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீ சார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு ளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

    • நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதும் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகமின்றி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவா லயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் பிஷப்கள், பங்கு தந்தையர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிஷப் குமாரராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோல் பேட்ரிக் தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் அமலி நகர், மணப்பாடு, நாசரேத், சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடை பெற்றது. நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விண்ணில் இருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகரம்சீகூர் பகுதியில் 46 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
    • பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீ கூர் கிராமத்தில் வேப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பாக இளைஞர் அணி மாநில செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 46 கிலோ கேக் மற்றும் லட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வ கித்தார். முன்னதாக வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் மருவத்தூர் சி.ராஜேந்திரன் தலை மையில் தி.மு.க. கொடி யேற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சன் சம்பத், அவைத்தலைவர் கருணாநிதி, லப்பைக் குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன், மா வட்ட பிரதிநிதிகள் செல்வ ராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் ஒன்றிய துணை செயலாளர் கௌதமன், ஒகளூர் பால் பண்ணை செக்ரட்டரி சக்திவேல், இளைஞர் அணி விக்னேஷ், சுப்ரியா வெங்கடேசன், நாகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • திரண்டிருந்த யிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக படுகரின மக்களின் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமம் விளங்குகிறது.

    இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடபட்ட நிலையில் பவுர்ணமி நாளன்று நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகரின மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் நஞ்சநாடு கிராமத்திற்கு வந்து குவிந்தனர்.

    இதனையடுத்து மாலை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய உடையான வெண்மை நிற ஆடைகளை பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அணிந்து தொட்டமனை எனப்படும் தங்களது மூததையர்கள் வசித்த வீட்டின் முன் குவிந்தனர்.

    அந்த இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து சிறிய கொடி மரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இளைஞர்கள் நடனமாடியவாறு ஊர் பெரியவர்கள் மற்றும் பூஜாரி ஆகியோரை தொட்டமனையிலிருந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் அமர்ந்து இருந்த நிலையில் சிறப்பு அலங்காரத்துடன் இருந்த பிரமாண்ட கொடி மரத்திற்கு பூஜை செய்து 60 அடி உயரத்தில் தீபம் ஏற்றபட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.

    அதனை தொடர்ந்து பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடி கம்பத்தை சுற்றி பெரிய வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.

    ×