search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் பண்டிகை"

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து.
    • பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள்.
    • நோன்புப் பெருநாள் தர்மத்தை முதலில் வழங்கிட வேண்டும்.

    உலக முஸ்லிம்கள் ஒரு மாத காலம் புனித ரமலானில் நோன்பு நோற்று, அதன் பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்புப்பெருநாள் ஆகும்.

    இறைவன் நமக்கு அளித்த பாக்கியங்களுக்கு நன்றி பாராட்டும் நன்னாள்தான் பெருநாள். அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஆனந்தமாகக் கொண்டாடும் ஆனந்தத் திருநாள் தான் ரம்ஜான் பெருநாள்.

    நோன்புப் பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நற்செயல்கள் என்னவெனில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அதிகாலை நேரத்தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். பிறகு, புத்தாடை அணிந்து, நறு மணம் பூசி, ஏதேனும் உணவு, பழங்களை ஒற்றைப்படையில் சாப்பிட வேண்டும்.

    சூரியன் உதயமாகி அதன் நிழல் மூன்று மீட்டர் அளவு சாயும் நேரம் வந்தவுடன் ஊர் மக்கள் ஒன்று கூடி, ஒற்றுமையாக திடல் நோக்கி செல்ல வேண்டும். அதற்கு முன்பு ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு, விளிம்பு நிலையில் வாழும் பொருள் இல்லாதோருக்கு நோன்புப் பெருநாள் தர்மத்தை முதலில் வழங்கிட வேண்டும்.

    பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் செல்லும் போது வழியில் தென்படும் ஏழைகளுக்கு ஈகையை அள்ளி வழங்கிட வேண்டும்.

    தொழுகை முடிந்ததும் அமைதியாக கலைந்து சென்று, இல்லம் திரும்பும்போது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில் தென்படும் ஏழை களுக்கும் ஈகைகளை வாரி வழங்கிட வேண்டும்.

    `சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    நோன்புப் பெருநாள் தொழுகை ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடமையான அதே ஆண்டில் கடமையாக்கப்பட்டது. முப்பது நாட்கள் நாம் நோன்பு வைப்பதற்கு உதவிய இறைவனுக்கு நன்றி பாராட்ட இறைவன் வகுத்துக் கொடுத்த தினம் தான் பெருநாள் தினம். வகுத்துக் கொடுத்த தொழுகைதான் நோன்புப் பெருநாள் தொழுகை. நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை முடிந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.

    `நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.' (அறிவிப் பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    `நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும்-பின்னும் எதையேனும் தொழவில்லை.

    பிறகு, பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) இருந்தார். தர்மம் செய்வதின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு விளக்கினார்கள். பெண்கள் தங்கள் பொருட்களைப் போட்டனர். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும், வளையல்களையும் போடலானார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    பெருநாள் தினத்தின் தொழுகையிலும் கூட இறைவனுக்கு அடுத்து ஏழைகளின் நலனை நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கான தர்மங்களை வசூல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து வைத்தார்கள்.

    நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்ததும் அனைவரும் ஒன்று கூடி, அறுசுவை விருந்து படைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்து பிறரையும் உண்டு மகிழச் செய்து, எல்லோரிடமும் இணங்கி பெருநாளைக் கொண்டாட வேண்டும்.

    இரண்டு பெருநாட்களிலும் விதவிதமான உணவு பண்டங்களை சமைத்து, வயிறார உண்டு பிறரின் பசியையும் போக்க வேண்டும். இரண்டு பெருநாட்களிலும் பட்டினியாக இருந்து நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

    `நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள், மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.' (ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

    1) பெருநாளில் இறைவனை வணங்கி வாழவேண்டும்,

    2) இல்லாதவருக்கு வழங்கி வாழ வேண்டும்,

    3) எல்லோரிடமும் இணங்கி வாழ வேண்டும்.

    இதுதான் இஸ்லாமிய இரு பெருநாட்களின் தத்துவமாக அமைந்துள்ளது. பெருநாள் அன்று இனிய மாலைப் பொழுதினிலே கேளிக்கை, நையாண்டி, ஆடல்-பாடல் வீண் விளையாட்டுகளில் ஈடுபடாமல் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் உறுதியுடனும், மன வலிமையுடனும் மனநிறைவாக மகிழ்ந்து கொண்டாடுவோம்.

    பெருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது. மார்க்கத்திற்கு முரணாக உள்ள அனாச்சாரங்களில் ஈடுபடக்கூடாது.

    • மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.

    • நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது. தொழு கையினை முனிபி மகளிர் அரபி கல்லூரியின் முதல்வர் அப்துல் சமது பிர்தவ்ஸி நடத்தி வைத்தார். இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    • மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள்.
    • தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.

    சென்னை:

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை-சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இஸ்லாமியர்களில் சிலர் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் கொண்டாடப்பட்டது.

    தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

    அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் கழக அரசு திகழ்ந்து வருகிறது. 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த தலைவர் கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

    அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, இனி 5 லட்சம் வரை கல்விக்கடன்.

    இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி, நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என எண்ணற்ற அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.

    இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித் தொகை, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.

    இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.

    மேலும் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா, திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
    • பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

    பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெருநாள் பரிசு வழங்கப்படும் இரவு.
    • நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேட்பது.

    பெருநாள் பரிசு வழங்கப்படும் இரவு

    ரமலான் பிறை முதல் நோன்புப் பெருநாள் முழுவதும் இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் இருந்து, இரவில் உறங்காமலும் இருந்து இறைவணக்கம் புரிந்து வந்தனர். மக்களிடம் ஈவு, இரக்கம் காட்டி வந்தனர். இல்லாதோருக்கு ஈகை (மனம் உவந்து வழங்கப்படும் கொடை, உதவி) அளித்து வந்தனர். எல்லோரிடமும் இணங்கி, நெருங்கி வாழ்ந்தனர். எங்கும் பொறுமை, எதிலும் பொறுமையை நிறைவாக கடைப்பிடித்து வந்தனர்.

    ஒரு மாத ரமலான் காலம் முழுவதும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையையும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமையையும் தொய்வில்லாமல் தொடராகச் செய்த நோன்பாளிகளுக்கு நோன்பின் பரிசு பெருநாளின் பிறை கண்ட ஷவ்வால் மாத முதல் இரவு (பெரு நாள் இரவு) அன்று வழங்கப்படுகிறது.

    இஸ்லாமியப் பார்வையில் இஸ்லாமிய ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு யாவும் சந்திரனை மையமாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், இஸ்லாமிய மாதக்கணக்கு முதல் பிறை தென்பட்டதில் இருந்து துவங்கி விடுகிறது. முதல் பிறைதான் இஸ்லாமிய மாதத்தின் முதல் இரவாகும். இதன் அடிப்படையில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இரவு முந்தி வருகிறது. பகல் பிந்தி வருகிறது.

    ஒரு பிறையில் இருந்து அடுத்த பிறை வரைக்கும் ஒரு நாள் ஆகும். இதே பாணியில் பெருநாள் பிறை பார்க்கப்பட்ட அன்றைய இரவுதான் பெருநாள் இரவாகும். மறுநாள் வருவது பெருநாள் பகலாகும். பெருநாள் பகலுடன் ஒருநாள் நிறைவு அடைந்துவிட்டது. மீதி அடுத்த நாளின் இரவு துவங்கி விடுகிறது.

    பெருநாள் இரவு அன்று நோன்பாளிகள் இறைவனிடம் தங்களுக்கு நோன்பு பரிசாக சொர்க்கத்தை கேட்க வேண்டும். மேலும், நரகத்தில் இருந்து பாதுகாப்புத்தேட வேண்டும். இந்த இரண்டும் நோன்பாளிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும் .

    நீங்கள் தேவையற்றிருக்க முடியாத இரண்டு விசயங்கள் உள்ளன.

    1) நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேட்பது.

    2) நீங்கள் இறைவனிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவது ஆகும். இதை ரமலானில் அதிகமாகச் செய்து வாருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸல் மான் பார்ஸீ (ரலி), நூல்: தர்வீப்)

    பிரார்த்தனை ஏற்கப்படும் ஐந்து இரவுகள்:

    1) வெள்ளிக்கிழமை இரவு

    2) நோன்புப் பெருநாள் இரவு

    3) ஹஜ்ஜூப் பெருநாள் இரவு

    4) ரஜப் மாத முதல் இரவு

    5) ஷஅபான் மாத பாதி இரவு

    இறைவணக்கம் புரிய சிறந்த ஐந்து இரவுகள்:

    1) துல்ஹஜ் மாதம் 8-ம் நாள் இரவு

    2) துல்ஹஜ் மாதம் ஒன்பதாவது தினமான அரபா நாள் இரவு

    3) ஹஜ்ஜூப் பெருநாள் இரவு

    4) நோன்புப் பெருநாள் இரவு

    5) ஷஅ பான் மாத 15-ம் நாள் இரவு ஆகிய ஐந்து இரவுகளாகும்.

    இந்த இரவுகளில் இறைவணக்கம் புரியலாம். இறைவனை துதிக்கலாம். இறைவனை நினைக்கலாம். இறைவனை பெருமைப்படுத்தலாம். இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டலாம். இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம்.

    இந்த இரவுகளுக்கென்று சிறப்புத் தொழுகைகளோ, சிறப்பு பிரார்த்தனைகளோ எதுவுமே கிடையாது. இந்த இரவுகளை உயிர்ப்பிக்க எளிய வழி ஒன்று உள்ளது. அது வளமையான வணக்க வழிபாட்டு முறையாகும். அதுயாதெனில், அன்றைய இரவுகளில் இஷா எனும் இரவுத் தொழுகையையும், பஜ்ர் எனும் அதிகாலைத் தொழுகையையும் இமாமுடன், ஜமாத்துடன் இணைந்து நிறைவேற்றினால் போதும். அன்றைய இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கிடைத்துவிடுகிறது.

    • சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், 13, 14-ந் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி புதன் கிழமை (இன்று) 315 பஸ்களும் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 290 பஸ்களும், 13-ந் தேதி (சனிக்கிழமை) 340 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 10 (40 பஸ்கள்), 12 (40 பஸ்கள்) மற்றும் 13-ந் தேதிகளில் (40 பஸ்கள்) என 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரமலானின் பாக்கியமிக்க கடைசி இரவு.
    • நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்

    ரமலானில் பாக்கியமிக்க கடைசி இரவு

    இஸ்லாமிய மாதங்கள் பெரும்பாலும் 30 'நாட்களில் நிறைவுபெறும். சில நேரங்களில் 29 நாட்களிலும் நிறைவடையும். அது ஆங்கில மாதங்களைப் போன்று 28 அல்லது 31 நாட்களிலோ நிறைவு பெறாது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    இதே விதத்தில் தான் ரமலான் நோன்பை நோற்க வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்ததும் பெருநாள் பிறையான ஷவ்வால் மாத பிறையைக் காண வேண்டும். மேகமூட்டம் இருந்து பிறை தென்படாமல் போனாலும், மேகமூட்டமே இல்லாமல் பிறை தெரியவில்லை யென்றாலும் ரமலானை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்த அன்று பிறை தென்பட்டால், அன்றைய ரமலான் மாத நாட்கள் 29 நாட்களாக கணிக்கப்படும்.

    ரமலானின் கடைசி இரவு என்பது 29-வது இரவாக இருக்கலாம். அல்லது அன்றைய ரமலான் மாதம் முப்பது நாட்களாக இருந்தால், முப்பதாம் பிறை ரமலானின் கடைசி இரவாக இருக்கலாம். ஷவ்வால் பிறையான பெருநாள் பிறைக்கு முன்பு வருவதுதான் ரமலானின் கடைசி பிறை. ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து வெகுமதிகள் வழங்கப்படுகிறது.

    அந்த வெகுமதிகளை பெற்றிட நோன்பாளிகள் ரமலானின் கடைசி பிறை இரவு அன்று அதிகமாக இரவு வணக்கம் புரியவேண்டும். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். அன்றைய இரவிலும் சரி, ரமலானின் ஒவ்வொரு இரவிலும் சரி எல்லாம் வல்ல அல்லாஹ் நரக கைதிகளை விடுதலை செய்கின்றான். எனவே, ரமலானின் கடைசி இரவில் முடிந்த அளவுக்கு நரகத்திலிருந்து விடுதலை பெற இறைவனிடம் இருகரமேந்தி அதிகமாக இறைஞ்ச வேண்டும்.

    'ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்தால், ஓர் அழைப்பாளர் இவ்வாறு அழைப்பு கொடுக்கிறார். 'நன்மையை தேடுபவனே! நன்மையின் பக்கம் முன்னேறிச் செல்! தீமையை தேடுபவனே! தீமையை குறைத்துக்கொள்! நரகத்தில் இருந்து கைதிகளை விடுதலை செய்ய இறைவனுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், இது ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நீடிக்கிறது என்கிறார். இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்காக அவர்களின் பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறியபோது, 'அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா? என நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறில்லை. ஒரு வேலையாளுக்கு அவரின் ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதெல்லாம் அவர் தம் வேலையை முடித்து கொடுத்த பிறகு தான்' என நபி (ஸல்) விளக்கம் அளித்தார்கள். (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ் மது)

    ரமலானின் கடைசி இரவு ஏன் பாக்கியம் நிறைந்ததாக அமைகிறது என்றால், அன்றைய இரவுதான் நரக விடுதலையின் கடைசி இரவாகும். அன்றைய இரவில் நரக கைதிகளுக்கு நரக விடுதலை கிடைக்கிறது. மேலும், அன்றைய இரவில் இறைவனின் கூலியாக பாவமன்னிப்பும் கிடைக்கிறது. இத்தகைய இரண்டு வாய்ப்புகளும் ரமலானின் கடைசி இரவில் வாய்ப்பதால் அந்த கடைசி இரவு பாக்கியம் நிறைந்ததாக ஆகி விடுகிறது. இந்த பாக்கியத்தை பாக்கியசாலிகள் தவிர வேறு எவரும் பெறமுடியாது.

    • நோன்புப் பெருநாளின் தானிய அறம்.
    • பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸாவு வீதம் வழங்கிடவேண்டும்.

    நோன்புப் பெருநாளின் தானிய அறம்

    இஸ்லாத்தில் பொருளாதாரக் கடமையும் உண்டு. பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன்வைத்த யோசனைதான் 'ஸதகா' எனும் தர்மநிதி வழங்கலும், 'ஜகாத்' எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும். இதுபோக பல்வேறு தர்மநிதி வழங்கல் ஆலோசனைகளை வழங்குகிறது.

    'ஸதகா ஜாரியா' எனும் நிலையான தர்மம் வழங்கல் குறித்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. ஸதகா எனும் தர்மநிதி ஆண்டாண்டு காலம் செய்யப்படுவது. ஜகாத் எனும் கட்டாய ஏழை வரி ஆண்டுக்கொருமுறை செய்யப்படுவது.

    ஸதகா ஜாரியா எனும் நிலையான தர்மம் நீண்ட நெடிய காலத்திற்காக செய்யப்படுவது. இதுபோக, ஜகாதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் அன்று வழங்கப்படும் தானிய தர்மமும் உண்டு. இது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமை யாக்கப்பட்டது.

    'நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி). நூல்:புகாரி)

    சிறியவர் - பெரியவர், சுதந்திரமானவர் - ' அடிமை அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது தீட்டாத கோதுமையையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி (ஸல்) அவர்கள் கடமையாக் கினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக்கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தது. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரி (ரலி), நூல்: புகாரி)

    'நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.' (அறி விப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    'பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் இந்த தர்மத்தைக் கொடுத்து வந்தார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    இந்த தர்மத்தை இஸ்லாம் கடமையாக்கியதற்கு இரண்டு காரணங்களாகும்.

    1) ஒரு நோன்பாளி நோன்பு சமயத்தில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து அவரை இந்த தர்மம் தூய்மைப்படுத்துகிறது,

    2) அதை வாங்கி சாப்பிடுவதினால் ஏழைகளின் பசியும் பறந்து விடுகிறது.

    பசியில்லாத உலகை கட்டமைக்கவும், பசியில்லாத பெருநாளை அனைவரும் சமமாக கொண்டாடவும் இத்தகைய தர்ம சிந்தனையை இஸ்லாம் விதைக்கிறது. நோன்புப் பெருநாள் தொழுகையை இஸ்லாம் தாமதமாக வைத்ததே. பெருநாள் தர்மத்தை ஏழை களுக்கு வழங்கிட சிறிய அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்காகத்தான். நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸாவு வீதம் வழங்கிடவேண்டும்.

    ஒரு ஸாவு என்பது 2 சதவீதம் முதல் 2 1/2 கிலோ வரை அளவாகும். ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் உண்டோ அதற்கு தகுந்தாற் போல் கணக்கிட்டு ஏழைகளுக்கு பெருநாள் தொழுகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே வழங்கிட வேண்டும்.

    'தூய்மையாக வாழ்பவன் வெற்றிபெற்றான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (திருக்குர் ஆன் 87:14,15)

    • ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
    • ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும்.

    காவேரிப்பட்டினம்:

    வருகிற 9-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை 11-ந் தேதி கொண்டாடப்படுகிறதையொட்டி காவேரிப்பட்டணம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக இருந்தது.

    காவேரிப்பட்டணம் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன ஆனால் தற்போது இப்பகுதியில் ஆடுகளை பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை. இதனால் ஆடுகளுக்கு இப்பகுதியில் விற்பனை அதிகமாய் உள்ளது. மேலும் ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்பட்டிருப்பது நன்மைக்கே!
    • உங்களுக்கிடையே ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள்.

    லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்பட்டிருப்பது நன்மைக்கே!

    அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானின் நடுப்பத்தில் இஃதிகாப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து, எங்களுக்கு உரைநிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர், அது எனக்கு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல்கத்ரில்) ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்வது போல் கனவு கண்டேன். எனவே, யார் என்னுடன் இஃதிகாப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!' என்றார்கள்.

    'நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தை பார்த்தேன். (நூல்: புகாரி)

    உபாதா இப்னுஸாமித் (ரலி) அறிவிக்கிறார். லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்.அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது பற்றிய விளக்கம் நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்.

    எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் தெரிய வருவது என்னவெனில் 'லைலத்துல் கத்ர்" எந்த இரவு என்று ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பிறகு, அது மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் இரண்டு நபித்தோழர்கள் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க நபி (ஸல்) அவர்களின் கவனம் திரும்பிய போது, எந்த இரவில் லைலத்துல் கத்ர் உள்ளது என்று தான் சொல்ல வந்த விளக்கத்தை மறந்துவிட்டார்கள்.

    'நபி (ஸல்) அவர்கள் 'தமது தோழர்களிடம் உங்களுக்குத் தொழுகை, நோன்பு, தானம் ஆகியவற்றை விட சிறந்த ஒரு செயலை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். 'அவசியம் அறிவியுங்கள்' என்று தோழர்கள் வேண்டிய போது, உங்களுக்கிடையே ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள். அது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாகும். உங்களுக்கிடையே சண்டை சச்சரவு, மார்க்கத்தை மொட்டையடிப்பதாகும்' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அபூதாவூத்)

    வணக்கத்தை விட இணக்கமாக வாழ்வது தான் சிறந்தது. அத்தகைய ஒற்றுமை உணர்வைத்தான் லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதின் அடிப்படை தத்துவம் சூளுரைக்கிறது. இதுவும் நன்மைக்கே! ஒருவேளை அந்த இரவு இந்த இரவு என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மற்ற இரவுகளுக்கு நாம் முக்கியத்துவம் தராமல் போயிருப்போம்.

    ரமலானின் பிந்தைய அனைத்து இரவுகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளிப்பதற்காக வேண்டி கூட இறைவன் அதை மறைத்திருக்கலாம். நபியும் மறந்து போயிருக்கலாம். நடப்பது யாவும் நமது நன்மைக்கே; நாம் நடப்போம் மார்க்க ஒற்றுமைக்கே!

    ×