search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vignesh sivan"

    • 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது.
    • இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது.

    2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் மூலம் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார், இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது. காதலர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே இன்றும் இருக்கிறது.

    நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தது அப்படத்தில் மட்டுமே. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆனால் அது இதுவரை நடக்கவே இல்லை.

    ஆனால் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக நஸ்ரியா மற்றும் நயன்தாரா 10 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஃபஹத் பாசில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

    அப்புகைப்படத்திற்கு 'இறுதியாக... இந்த நாளுக்காக' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவும் இப்படத்தை பகிர்ந்து யூ கய்ஸ் ஆர் தி ஸ்வீட்டஸ்ட், க்யூட்டஸ் அண்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் பதிவிட்டார்.

     

    பல வருடங்களுக்கு பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்
    • வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

     

    அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
    • கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை கண்டது இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். நானும் ரவுடி தான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாரா சமீப காலமாக படத்தில் நடித்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடியுள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்கள் அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

    அதில் இரண்டு குழந்தைகளுடன் படகில் போவது, அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் க்யூட்டாக இருக்கின்றனர். மேலும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் அதில் நயன் தாராவை தூக்கி விலையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவில் வெட்டிங் ஆனிவர்சரி வாழ்த்து தெரிவித்து

    'உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என் உயிர் உலகம் நீயே. லவ் யூ லாட்ஸ் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். . எப்பொழுதும் எங்களுடன் நின்று நம்மைப் பாதுகாத்து, நமது பெரிய பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ளச் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது உயிர் & உலகம் உடன்." என்று பதிவிட்டுள்ளார்.

    சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 , டெஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா.
    • நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ.1200 கோடி வசூலிலும் சாதனை படைத்தது.

    தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் சொந்த ஊரான கொச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங் நாட்டுக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.

    ஹாங்காங் கடற்கரையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஜாலியாக வலம் வந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் நயன்தாரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.
    • அட்லீ இயக்கிய ஜவான் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

    சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருமணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

     

    நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.

    கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன்தாரா.

    நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "சமூகத்தில் பெண்கள் மீது உள்ள பல கட்டுப்பாடுகளை உடைத்து வருவது மிகப்பெரிய விஷயம். அதை செய்பவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதையும் தாண்டி குரல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் சேர்த்தே தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருப்பு உடை புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் ,விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.
    • மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

    தமிழ் பட உலகில் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்கிறார். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் 'அன்னபூரணி' படத்தில் நடித்தார். அந்தப் படம் 75- வது படமாகும்.

    'அன்னபூரணி' படம் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை தரவில்லை. மேலும் தமிழில் 'மண்ணாங்கட்டி' மலையாளத்தில் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.



    இந்நிலையில் தமிழ், மற்றும் மலையாள புத்தாண்டு தினத்தை யொட்டி நேற்று நயன்தாரா தனது வீட்டில் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.

    நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் அணிந்து இருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.

    தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் சேர்ந்து புத்தாண்டை உற்சாக மகிழ்ச்சியுடன்கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.




    மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டெல்லி கணேஷ் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த அப்பா லாக் என்ற குறும்படம் யுடியூபில் வைரலானது
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்

    டெல்லி கணேஷ் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த அப்பா லாக் என்ற குறும்படம் யூ டியூபில் வைரலானது . பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

    கோமாளி படம் ஜெயம் ரவிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. கோமாளி படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு மிகப் பெரிய வரவேற்பும், ரசிகர் பட்டாளமும் உருவாகியது.

    பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி மற்றும் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, மக்களிடம் இந்த திரைப்படம் மிகவும் ரசிக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் மிக பெரிய அளவில் குவித்தது.

    தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிருதி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கவுரி ஜி கிஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸிடம் சம்பளம் 10 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
    • பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

    சென்ஷேசன், குட்டி ஸ்டார் ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் யூடியுபில் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க பிரபலமானவர் குட்டி ஸ்டார் ஷோபா பாய். கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய ஷோபா விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

    பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீன இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் பீ-ரெடி மியூசிக் நிறுவனம், ஷோபா பாய் நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

    தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், முதல் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.

    முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
    • அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

    தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது. படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவர்களின் ஜோடி மிக அழகாக திரையில் பிரதிபலித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

    கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அனீருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக விக்னேஷ் சிவன், அவரின் மகனான உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்
    • விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் பகிர்ந்துள்ளார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்"தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்"

    என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு உள்ளார்.

    நயன்தாரா அடுத்ததாக 'டெஸ்ட்' மற்றும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்களில் நடிக்கிறார்.அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அவர் கடைசியாக 'அன்னபூரணி' படத்தில் நடித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
    • அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.

    நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.

    மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×