search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு"

    • தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
    • சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது.

    சேலம்:

    ஜனவரி மாதம் 1-ந் தேதி வந்துவிட்டால் போதும். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட சூழலில் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அப்படித் தான் இன்றைய தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு-2024 இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால் மலைப் பகுதியில் நிலவும் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றின் மத்தியில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    கோவில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மால்களில் குவிவது ஒரு ரகம். சுற்றுலா தலங்களை தேடி தேடி சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது மற்றொரு ரகம்.

    அந்த வகையில் "ஏழைகளின் ஊட்டி" என்று பாசமாக அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம், கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி , ஆந்திரா உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது தமிழத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காட்டில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் திருவிழா கோலம் போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள பூங்காக்கள், ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

    இதற்காக முன்கூட்டியே அதாவது நேற்று இரவு முதலே பக்காவாக திட்டம் தீட்டி வைத்து பஸ்கள், மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சாரை, சாரையாக ஏற்காட்டிற்கு வருகின்றனர்.

    இன்று ஒருநாள் ஏற்காட்டில் தான் என்று. ஏற்காட்டின் மையப் பகுதியான ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், அதன் இயற்கை அழகை ரசித்தும் வருகின்றனர். ஆங்காங்கே உள்ள திடீர் கடைகளில் கிடைக்கும் சுட சுட சோளக்கதிர், நிலக்கடலை, மிளகாய் பஜ்ஜி போன்றவற்றை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர்.

    சேலம் மாவட்டத்தின் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காலநிலை குளிர்ச்சியாக இருக்கும். இது டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 16.7 செல்சியஸ் வரை தொடும். அந்த வகையில் 4,969 அடி உயர்த்தில் உள்ள ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி படர்ந்து காணப்படுகிறது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மற்றும் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்காட்டில் வெப்பநிலை மனதிற்கு இதமாகவும், சில்லென்ற காற்றோடு அம்மண்ணின் வாசத்தையும் அள்ளித் தருவதால் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

    இந்த புத்தாண்டையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறியுள்ளோம்.

    விடுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படால் இருக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மது அருந்திவிட்டு எவரும் வாகனங்களை இயக்கக் கூடாது.

    சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சியாளர்கள், நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப்பகுதிகள் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஏற்காட்டில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் ஏற்காடு மலை முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் புதிது, புதிதாக அருவிகளும் உருவானதால் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை முதல் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது. குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சாலையோரங்களில் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஜர்க்கின், குல்லா, சொட்டர், கம்பளி போன்ற உடைகள் விற்பனையாகி வருகிறது.

    பனிமூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் மலை பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. இந்த குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குளிர், சாரல் மழையை பொருட்படுத்தாமல் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தினம் என்பதால் குடும்பம், குடும்பமாக அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்த படி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுது போக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

    • குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது.
    • ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த காலங்களில் கோடை விழாவும் அரசு சார்பில் நடத்தப்படும். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காலமான கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலை பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சு ற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    மேலும் ஏற்காட்டில் தொடரும் பனியால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்த படியே செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டில் வசிக்கும் காபி மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் வெளியில் செல்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி செல்கிறார்கள். பகல் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது.
    • மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆனாலும் பகலிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்தபடி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேட்டூர் அணைக்கு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அணை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்குகளிலும் சிறுவர்கள் ஏறி உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

    அணை பவள விழா கோபுரத்தில் ஏறி அணையையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இதனால் கடைகளிலும் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் கன மைழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் முதல் தலைவாசல் வரை அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொது மக்கள் அதிக அளவில் திரண்டு பார்வையிட்டு செல்கிறார்கள்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்த படியே இருந்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து இரவில் கடும் குளிர் நிலவியது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் தொடங்கிய மழை இன்று அதிகாலை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 36.2 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 16.2, சேலம் 8.2, தலைவாசல் 7, வீரகனூர் 7, காடையாம்பட்டி 7,ஏற்காடு 4.4, ஓமலூர் 4, கரியகோவில் 4, ஆனைமடுவு 4, மேட்டூர் 3.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 1, ஆத்தூர் 1, பெத்தநாயக்கன்பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது.
    • ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    பின்னர் நள்ளிரவு 12 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிரால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளான தலைவாசல், காடையாம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 19, காடையாம்பட்டி 14, ஆனைமடுவு 13, ஆத்தூர் 5.2, மேட்டூர் 44, சங்ககிரி 4.3, கரியகோவில் 4, ஓமலூர் 2, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 101.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.

    அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஏற்காட்டில் தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கினார்கள். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகள், கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தப்படி உள்ளது. இதனால் பெரும்பாலான தங்கும் விடுதி அறைகள் முழுவதும் நிரம்பின. இதனால முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அவர்கள் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி அதில் உறங்கியதை காண முடிந்தது.

    • மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
    • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவும் ஏற்காட்டில் கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல முக்கிய சாலைகள் சேறும் சகதியுதாக காட்சியளிக்கிறது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பகல் நேரங்களிலும் குளிர் தாங்கும் ஆடைகளான சுவட்டர், ஜர்கின் உள்ளிட்டவற்றை அணிந்தே வெளியே வருகின்றனர்.

    மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் மலைப் பாதையில் ஆங்காங்கே உள்ள நீர் வீழ்ச்சிகள், கிளியூர் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    பொதுவாக வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் முகாமிட்டு பொழுதை கழித்து செல்வர். ஆனால் நேற்று மழை பொழிவு காரணமாக குறைந்தளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

    சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஏற்காட்டில் பெய்துவரும் மழை மற்றும் குடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

    ×