search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபத் திருவிழா"

    • நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • திரண்டிருந்த யிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக படுகரின மக்களின் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமம் விளங்குகிறது.

    இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடபட்ட நிலையில் பவுர்ணமி நாளன்று நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகரின மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் நஞ்சநாடு கிராமத்திற்கு வந்து குவிந்தனர்.

    இதனையடுத்து மாலை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய உடையான வெண்மை நிற ஆடைகளை பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அணிந்து தொட்டமனை எனப்படும் தங்களது மூததையர்கள் வசித்த வீட்டின் முன் குவிந்தனர்.

    அந்த இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து சிறிய கொடி மரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இளைஞர்கள் நடனமாடியவாறு ஊர் பெரியவர்கள் மற்றும் பூஜாரி ஆகியோரை தொட்டமனையிலிருந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் அமர்ந்து இருந்த நிலையில் சிறப்பு அலங்காரத்துடன் இருந்த பிரமாண்ட கொடி மரத்திற்கு பூஜை செய்து 60 அடி உயரத்தில் தீபம் ஏற்றபட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.

    அதனை தொடர்ந்து பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடி கம்பத்தை சுற்றி பெரிய வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவ மலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணி அளவில் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்று.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி, கடலூர் விழுப்புரம் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் மயிலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
    • திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திரு விழாவின் முக்கிய அம்சமாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந் நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் குதிரை சந்தை தொடங்கியது.

    அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி சந்தைத் திடலில், குதிரை சந்தை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை சந்தைக்கு பல்வேறு வகையான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

    அதேபோல், குதிரை சந்தை அமைந்துள்ள பகுதிகளில் விதவிதமான ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த குதிரை வண்டிகளின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்துவிட்டது. ஆனாலும், திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
    • 2 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட உள்ளன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கார்த்திகை தீப தரிசனம் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விழாக்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பது என்பது சவாலான ஒன்று. பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவில் மற்றும் கிரிவலப்பாதை பகுதிகளுக்கு செல்ல 120 பள்ளி மற்றும் தனியார் பஸ்கள் இலவசமாக இயக்கப்படும்.

    ஆட்டோக்களில் செல்ல ஒரு நபருக்கு குறைந்த பட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ50 என மாவட்ட நிர்வாகத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஆட்டோவில் 3 நபர்களுக்கு மேல் பயணம் செய்ய கூடாது. பக்தர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெற்றாலோ அல்லது 3 நபர்களுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி யின்றி இயக்கப்படும் வெளி மாவட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படும் ஆட்டோக்கள் கண்காணிப்பு அலுவல ர்களால் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும். சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றக் கூடாது இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், விழுப்புரம் சரக போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ரஜினிகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடேசன், கண்காணி ப்பாளர்கள் சுப்பிரமணி, சுமதி, அமைப்புசாரா தொமுச மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள், தனியார் பஸ் மற்றும் வேன் டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
    • முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 24-ந் தேதி கோவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் இந்த முறை கட்டளைதாரர், உபயதாரர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சிப் பொருத்தி வழங்கப்பட உள்ளது.

    முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை தீபத் திருவிழா கொடியேற்றம்.
    • துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும்.

    அதன்படி இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    நவம்பர் 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2668 அடி உயரமுள்ள அருணாசலேஸ்வரர் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தீபத் திருவிழாவிற்குள் முடிக்க நடவடிக்கை
    • அமைச்சர் எ.வ.வேலு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் அருணாச லேஸ்வரர் தெப்பல் திருவிழா நடைபெறும் அய்யங்குளம் தூர்வாரப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குளத்தின் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். 320 அடி அகலம் மற்றும் 320 அடி நீளத்துடன் 3 ஏக்கரில் அய்யங்குளம் அமைந்துள்ளது தற்போது ஆயிரம் நபர்களைக் கொண்ட தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபத்தில் சிவனின் சின்னமான நந்தி சிலை நிறுவப்பட உள்ளது. குளத்தின் அழகை இரவிலும் ரசிக்கும் வண்ணம் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படஉள்ளது.

    குளத்தின் சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் மற்றும் திருப்பாவை எழுதப்படும்.

    சீரமைப்பு பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழா விற்குள் முடிக்கப்படும் என பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட ப்பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குணசேகரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×