என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆேலாசனை கூட்டம் நடந்த காட்சி.
தீபத் திருவிழாவில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை

- 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
- 2 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட உள்ளன
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
கார்த்திகை தீப திருவிழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப தரிசனம் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விழாக்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பது என்பது சவாலான ஒன்று. பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவில் மற்றும் கிரிவலப்பாதை பகுதிகளுக்கு செல்ல 120 பள்ளி மற்றும் தனியார் பஸ்கள் இலவசமாக இயக்கப்படும்.
ஆட்டோக்களில் செல்ல ஒரு நபருக்கு குறைந்த பட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ50 என மாவட்ட நிர்வாகத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஆட்டோவில் 3 நபர்களுக்கு மேல் பயணம் செய்ய கூடாது. பக்தர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெற்றாலோ அல்லது 3 நபர்களுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி யின்றி இயக்கப்படும் வெளி மாவட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படும் ஆட்டோக்கள் கண்காணிப்பு அலுவல ர்களால் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும். சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றக் கூடாது இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் பா.முருகேஷ், விழுப்புரம் சரக போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ரஜினிகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடேசன், கண்காணி ப்பாளர்கள் சுப்பிரமணி, சுமதி, அமைப்புசாரா தொமுச மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள், தனியார் பஸ் மற்றும் வேன் டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
