search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யங்குளத்தில் நந்தி சிலை, திருக்குறள் எழுதப்படும்
    X

    அய்யங்குளத்தில் நந்தி சிலை, திருக்குறள் எழுதப்படும்

    • தீபத் திருவிழாவிற்குள் முடிக்க நடவடிக்கை
    • அமைச்சர் எ.வ.வேலு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் அருணாச லேஸ்வரர் தெப்பல் திருவிழா நடைபெறும் அய்யங்குளம் தூர்வாரப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குளத்தின் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். 320 அடி அகலம் மற்றும் 320 அடி நீளத்துடன் 3 ஏக்கரில் அய்யங்குளம் அமைந்துள்ளது தற்போது ஆயிரம் நபர்களைக் கொண்ட தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபத்தில் சிவனின் சின்னமான நந்தி சிலை நிறுவப்பட உள்ளது. குளத்தின் அழகை இரவிலும் ரசிக்கும் வண்ணம் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படஉள்ளது.

    குளத்தின் சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் மற்றும் திருப்பாவை எழுதப்படும்.

    சீரமைப்பு பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழா விற்குள் முடிக்கப்படும் என பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட ப்பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குணசேகரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×