search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர்"

    • சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    தக்கலை:

    தேவிகோடு செறுவ ல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசாமி (வயது81). இவர் கடந்த 30-ந்தேதி தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலில் நோக்கி கார் விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மகன் பால் வின்சிகர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் கார் டிரைவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் காசி ராமன் தெருவை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 57). இவர் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவதன்று இவர் வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.

    பின்னர் பூம்புகார்- கல்லணை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். கல்யாணபுரம் மெயின் ரோட்டில் வந்தபோது ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி கீழே இறங்கி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தொப்பையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை
    • 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட தோட்டியோட்டில் செயல்பட்டுவரும் பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதி மற்றும் அழகிய மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பிலாங்காலை முதியோர் இல்லம் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் நேரடியாக பேசிய அவர் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுவதார் கிரஹக் என்ற பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதியானது சுரக்க்ஷா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு, ஆலோசனை மையம் அதனுடன் சுயதொழில் என பெண்களுக்காக பல்வேறு உதவிகள் இம்மையம் ஏற்படுத்தி உள்ளது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களை 5 நாட்கள் வரை இங்கு தங்க வைக்கலாம். இருப்பினும், நீண்ட கால தங்கும் தேவைக்காக, அத்தகைய பெண்கள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது 18 வயதிற்கு குறைந்த துன்பப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்கள், சக்தி சதனுக்கு பரிந்துரைக்கப்படு வார்கள்.

    அங்கு அவர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தங்கலாம். சக்தி சதனில் தங்குவதற்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்படலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் தேவை அடிப்படையில் இருப்பினும், 55 வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கலாம். அதன் பிறகு அவர்கள் முதியோர் இல்லங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் இக்குறுகிய கால தங்கும் விடுதியில் இருந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. மாவட் டத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தொடர்பாக வரும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.

    மூத்த குடிமக்கள் உதவி எண் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழிதவறியவர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க உதவுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    முதியோர் உதவி எண்ணில் அழைக்கும் போது முதி யோர்களின் உடல்ரீதியான, பாதுகாப்பு, மனநல ஆலோ சனை, சுகாதார தேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் உறுதி செய்து கொடுக்கப்படு கிறது. மாவட்டத்தில் தற்போது 31 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பிள்ளைகளால் கைவிடப் படும் முதியோர்களை பாதுகாத்து அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டி மூத்த குடிமக்களை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். பிலாங்காலை மற்றும் மாத்தார் முதியோர் இல்லங்களில் 129 முதி யோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முதியோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றது.

    முதியோர் உதவி எண் 14567 ஆகும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மூத்த குடிமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அவர்களின் குறைகள் அறியப்பட்டு தீர்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் வழக்கு தொடர் பாக மாவட்ட ஆட்சியரின் தீர்ப்பே இறுதியானது ஆகும். எந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் ஆட்சியரின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.

    எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை சிறந்த முறையில் பராமரித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பிலாங்காலை முதியோர் இல்லத்தில் கொண்டாடப் பட்ட சர்வதேச முதியோர் தினவிழாவில், கலெக்டர் ஸ்ரீதர் முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குறுகிய கால தங்கும் விடுதி தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன், மாத்தார் மற்றும் பிலாங் காலை முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் முதி யோர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார் அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தக்கலை:

    தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தக்கலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    மேலும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முட்டைக்காடு குமாரபுரம் பகுதியில் ஒரு முதியவர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வர்கள் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை அதிகாரி ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முதியவரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் முதியவர் தீய ணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.

    • சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
    • மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது கதவு சாத்திய நிலையில கிடந்துள்ளது

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு புதுகாடு வெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 57). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தங்கபாய் (49). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு.

    மூத்த மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். செல்லப்பன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தங்கபாய் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்துவாங்க சென்று விட்டார். செல்லப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது கதவு சாத்திய நிலையில கிடந்துள்ளது. கதவை திறந்து உள்ளே சென்றபோது செல்லப்பன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்லப்பன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து தங்கபாய் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (63). சம்பவத்தன்று கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    அதிகாலை 4. 45 மணிக்கு தூங்கி கொண்டிருந்த போது அவரது இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.

    வாலியால் துடித்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மூலக் கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (61). இவர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந் தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெயர் முகவரி தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து கார்டை கொடுத்து பணம் ரூ.20,000 எடுத்து தருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    அந்த நபர் கார்டை மெசினில் சொருகி விட்டு பணத்தை டைப் செய்ததாகவும், சுப்பிரமணியன் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை எனக் கூறி அந்த நபர் ஏற்கனவே வைத்திருந்த ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்பு சுப்பிரமணியன் அரண்மனை பகுதியில் இருந்தபோது அவரது செல் போனிற்கு ரூ.42,000 பணம் எடுத்திருப்பதாக குறுந்தக வல் வந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

    காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த ஓமந்தூரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 60). இவரது காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தோட்டத்திற்கு சென்ற நாராயணசாமி, அங்கிருந்த வேப்பமரத்தில் வேட்டி யால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் போலீசார், நாராயணசாமி உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவன்கொல்லை தங்கத்தாய் காலனியைச் சேர்ந்தவர் நாகூர் பிச்சை (வயது 58).

    சம்பவத்தன்று இவர் சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த நாகூர் பிச்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×