search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி கிடந்த முதியவர் சாவு
    X

    மயங்கி கிடந்த முதியவர் சாவு

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார் அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×