search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது.
    • வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த வாரம் சென்னை வருகிறார்.

    சென்னை வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது. கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதால் உடன்பாடு ஏற்படவில்லை.

    டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    தொகுதி பிரச்சனையால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதிலும் அதே நேரம் தொகுதி எண்ணிக்கையில் பிடிவாதமாகவும் காங்கிரஸ் உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கார்கே கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான இடத்தேர்வு நடக்கிறது.

    வருகிற 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிக்குள் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    அதற்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

    வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள். கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்குகிறார்.

    • சாலை, ஏழை மக்கள், குடிநீர் குறித்து நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார்.
    • பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டதாக கட்கரி குற்றச்சாட்டு.

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு பேட்டியில் "கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. கிராமங்களில் சிறந்த சாலைகள் இல்லை. குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை. நல்ல பள்ளிக்கூடம் இல்லை" எனக் குறிப்பிடுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இது நிதின் கட்கரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வீடியோ தனது பேட்டியின் ஒரு பகுதி. அப்படி இருந்த நிலை மாற்றப்பட்டு தங்களது ஆட்சி காலத்தில் சிறந்த சேவையை செய்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தேன்.

    அந்த பேட்டியை திரித்து, சிதைத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் இந்த வீடியோவை நீக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரம், மூன்று நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
    • அதில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம். பெரும்பான்மையான அக்னி வீரர்கள் 4 ஆண்டு சேவைக்குப் பிறகு வேலையில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும். இது அவர்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும்.

    அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது. கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது. தற்கொலை செய்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

    தேசபக்தி மற்றும் வீரம் நிறைந்த ஆயுதப்படை வீர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். எங்கள் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நியாயம் மற்றும் நீதியை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் எனதெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது.
    • விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது. தலைநகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் ஏற்பாடு செய்துள்ளது.

    சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது. விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

    நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். தலைவணங்கவும் மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காங்கிரஸ்காரர்களிடம் இருந்து கட்சியைக் காப்பதற்காகவே பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தேன்.
    • காங்கிரஸ் கட்சியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என தேவகவுடா குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பங்கேற்றார்.

    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , வாழ்நாளின் இறுதியில் தேவகவுடா தனது அரசியல் போக்கை மாற்றிக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கார்கெவின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியதாவது:

    கர்நாடக முதல் மந்திரியாக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க வேண்டும் என நான் கூறியபோது, எனது மகன் குமாரசாமியை முதல் மந்திரியாக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் 13 மாதங்களுக்குள் குமாரசாமியை நீக்கியது யார்? கார்கே அல்ல காங்கிரஸ் தலைவர்கள்.

    என் மகன் காங்கிரசால் நீக்கப்பட்ட போதுதான், நான் என் மகனை பா.ஜ.க.வுடன் இணையுமாறு வலியுறுத்தினேன். இந்த காங்கிரஸ் கட்சி உன்னை வளர அனுமதிக்காது என்று என் மகனிடம் கூறினேன்.

    மல்லிகார்ஜூன கார்கே அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக விரும்புகிறீர்களா? அதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றி நன்றாகத் தெரியும்.

    சுமார் 35-40 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள தூய்மையான மனிதர் மல்லிகார்ஜூன கார்கே. ஆனால் பிரதமர் வேட்பாளருக்காக அவரது பெயரைக் குறிப்பிட்டபோது என்ன நடந்தது? அவரது சொந்த நண்பர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    காங்கிரஸ்காரர்கள் சிலர் எனது கட்சியை அழிக்க நினைத்தபோது, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எனது ஆதரவை பா.ஜ.க.வுக்கு வழங்க முடிவுசெய்தேன். அது ஒன்றே காரணம். தனிப்பட்ட நலனுக்காக நான் அப்படி செய்யவில்லை. இதற்கு பலனாக பிரதமர் மோடி காட்டிய அன்பும், பாசமும்தான் எனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள்.
    • 2024-ல் பா.ஜனதாவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான 2014-ம் ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் மீது விவாதம் நடைபெற்ற பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

    இந்த நிலையில் பா.ஜனதா அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. அதன்படி நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று கருப்பு அறிக்கை வெளியிட்டார்.

    வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது, பெண்களுக்கு அநீதி போன்றவற்றில் அரசின் தோல்விகளை காங்கிரஸ் கருப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

    பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    வேலையில்லா திண்டாட்டத்தின் முக்கிய பிரச்சனையை நாங்கள் எழுப்புகிறோம். இதுபற்றி பா.ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை. ரூ.2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது மோடியின் உத்தரவாதம், ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. தற்போது புதிய உத்தரவாதங்களை கொண்டு வருகிறார்.

    விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் இப்போது ஆட்சி செய்கிற கிறார்கள். என்ன செய்தார்கள் என்று பதில் சொல்ல வேண்டும்.

    கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பா.ஜனதா அல்லாத மாநிலங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.

    விசாரணை அமைப்புகளை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. ஜனநாயகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்தை காங்கிரஸ் உறுதி செய்தது. 2024-ல் பா.ஜனதாவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே கூறியுள்ளார்.

    • பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாஜன சபா என்ற பேரணி மற்றும் கூட்டம் திருச்சூரில் நடந்தது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள 25,177 வாக்குச்சாவடிகளின் பிரதி நிதிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பங்கேற்றார்.

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அரசால் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து செயல்படும் பொருளாதாரத்தை அவர் கற்பனை செய்தார்.

    ஆனால் இன்று மோடி தலைமையிலான அரசு அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது. பொதுத்துறைகள் நலிவடைந்தால் அதை மீட்டுக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் பொதுத்துறையை அழித்து தனியார் துறையை பலப்படுத்துவதில் மோடி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

    பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் கொள்கைகள் சிறுபான்மையினர் மற்றும் பெண்களை அதிகமாக பாதித்துள்ளது. மோடியின் அரசு மாநில அரசுகளை துன்புறுத்துவது மட்டுமின்றி, ஏழை மக்களையும் பெண்களையும் நசுக்குகிறது.

    மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிராக 51 குற்றங்கள் பதிவாகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது.

    மணிப்பூரில் நடந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நாட்டை அவமானப்படுத்தி உள்ளன. அங்கு 9 மாதங்களாக நடந்துவரும் வன்முறைகளுக்கு பிறகும், நிலைமையை தணிப்பதிலும், வடகிழக்கு மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கான சூழலை மீண்டும் ஏற்படுத்துவதிலும் பாரதிய ஜனதா அரசு தோல்வியடைந்துள்ளது.

    பிரதமருக்கு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவும், ஒருநாள் விட்டு ஒருநாள் உரை நிகழ்த்தவும் நேரம் உள்ளது. ஆனால் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நேரமில்லை.

    லட்சத்திவில் விடுமுறைக்காகவும், படங்களை கிளிக் செய்யவும் நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவருக்கு நேரம் இல்லை. இதன்மூலம் பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

    காங்கிரஸ் கட்சி இருந்த போதெல்லாம் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், சமூகநலம், கல்வி மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்துள்ளது. ஜனநாயகம், அரசியல் சாசனம் மற்றும் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க காங்கிரஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

    கேரள மக்கள் எப்போதுமே கொள்கைகள், ஏழைகளின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அரசியல மைப்புக்காக நிற்கிறார்கள். எனவே கேரளாவை வென்றால் இந்தியாவை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13-ந்தேதி சென்னை வருகிறார்.
    • இரு தலைவர்கள் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்) சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார மற்றும் பூத் கமிட்டிகள் வரையிலான நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும் கார்கே தேர்தலுக்காக காங்கிரசாரை முடுக்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

    சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் முதல்கட்டமாக பேசி உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தை நடைபெறும்.

    கார்கே வருவதற்குள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால் கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருக்கிறது.
    • அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ள போதிலும், ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், ஜெ.எம்.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக நிற்கும் வீடியோவை பதிவிட்டு ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், "81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 பேரின் ஆதரவே போதுமானது. ஆனால் 48 பேரின் ஆதரவை கொண்ட சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கும் செயல் அரசியலமைப்பை அவமதிப்பதோடு, பொது ஆணையை மறுப்பதற்கு சமம். ஆளுநர்களால் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்படுகிறது," என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    • அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது.
    • ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள்.

    இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் என்ற பெயரில் மணிப்பூரில் இரண்டாவது யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, தற்போது மேற்குவங்கத்தை அடைந்துள்ளார். அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது. அதனைத்தொடர்ந்து

    மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்க வேண்டி முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றே எழுதியுள்ளார்.

    அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "அஸ்ஸாம் மாநில நடைப்பயணத்தின் போது பல பிரச்னைகளை சந்தித்த நிலையில், சில தவறான ஆட்களால் நடைப்பயணத்தில் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நடைப்பயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்" என கூறியிருந்தார்.

    பாஜக உருவாக்கியுள்ள ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள் என குறிப்பிட்ட, கார்கே நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளை பெற்று தருவதே இதன் நோக்கம் என்றும் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். 

    • இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார்.
    • இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார். அவருடன் மல்லிகார்ஜூன கார்கே பலமுறை பேச முயன்றார். ஆனால் இருவரும் பிஸியாக இருப்பதால், பேசுவதற்கு சூழ்நிலை அமையவில்லை. மல்லிகார்ஜூன கார்கே நிதிஷ் குமாரை பேச அழைக்கும் போது அவர் பிஸியாக இருக்கிறார். நிதிஷ் குமார் பேச அழைக்கும் போது கார்கே பிஸியாக இருக்கிறார்" எனக் கூறினார்.

    மேலும், இந்தியா கூட்டணியின் முதல் இரண்டு கூட்டத்தையும் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்ததாக தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும், அதை நோக்கி உழைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, "அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

    • தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
    • கூட்டணிக் கட்சி தலைவர்களையும் மல்லிகார்ஜூன கார்கே சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த மாதம் 13-ந்தேதி தமிழகம் வர உள்ளார்.

    மக்களவை தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே மல்லிகார்ஜூன கார்கே பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×