search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா பானர்ஜி"

    • மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது.
    • இதனால் அதற்கு விண்ணப்பிக்கவே வேண்டாம்.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர் "பா.ஜ.க.-வினர் 400-க்கும் அதிக இடங்களை பிடிப்போம் என கூறி வருகின்றனர், நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், அவர்கள் முதலில் 200 இடங்களில் வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம். 2021 தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் அவர்கள் 200-க்கும் அதிக இடங்களை குறி வைத்து, வெறும் 77 இடங்களில் தான் வெற்றி பெற்றனர்."

    "சி.ஏ.ஏ. தொடர்பான மோடியின் உத்தரவாதம் பூஜ்ஜியத்திற்கு சமம். சி.ஏ.ஏ. சட்டம் குடியுரிமை கொண்டவர்களை வெளிநாட்டவராக மாற்றிவிடும். சி.ஏ.ஏ.-வை அனுமதித்தால் அடுத்து என்.ஆர்.சி. வந்துவிடும். நாங்கள் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.

    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
    • அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்.
    • மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து, மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படும்போது, சிபிஐ/இடி விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது. குறிப்பாக பாஜகவுடன் இணைந்த பிறகு.

    இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது.
    • வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன்.

    மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் "வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன். தேர்தலில் இந்த இரண்டிற்கும் முடிவு கட்ட வேண்டும். நான் மக்களுக்கான இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார்.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அம்மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ்க்கும், மாநில அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரித்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியீடு.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    நெற்றியில் ரத்த காயத்துடன் மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மம்தா விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.

    இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், " மேற்கு வங்க முதல்வரின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது. அவள் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்றார்.

    • மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.
    • தலையில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், மம்தா பானர்ஜி மருத்துவமனையில் நெற்றியில் காயத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன.
    • வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பளர்களை வெளியிட்டார்.

    மம்தாவின் இந்த அதிரடியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டார்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்புவார் என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார். எனவே பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். நான் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் நிற்கவில்லை என்பதுதான் அந்த செய்தியாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விமர்சனம் செய்துள்ளார்.

    • இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
    • இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் தயாராக இருக்கின்றன என தகவல் வெளியானது.

    ஆனால், தனது முடிவில் மம்தா உறுதியாக உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில்தான் நேற்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கூட்டணி இல்லை என முடிவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் "மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள விருப்பமாக உள்ளோம் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    ஜெய்ராம் ரமேஷ்

    பேச்சுவார்த்தை மூலம் இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும முறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் ஒருதலைபட்சமாக அறிவிப்பு ஏதும் வெளியிடுவதில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றாக போட்டியிடுவதைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் விரும்புகிறது" என்றார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில் "இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார். இந்தியா கூட்டணியில் இருந்து அவர் பிரிந்து தனியாக போட்டியிடுவதன் மூலம், என்னுடைய மனவருத்தத்துடன் இருக்க வேண்டாம், நான் பா.ஜனதாவுக்கு எதராக போட்டியிடும் அணியில் இல்லை என்ன செய்தியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார்.

    • மேற்கு வங்காளம் சென்ற பிரதமர் மோடி ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • பிரதமர் மோடியை மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மாநில வாரியாக சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் வந்தாலும் அவர்களை மாநில முதல் மந்திரி சந்திப்பது வழக்கம். எனவே இது ஒரு சம்பிரதாய சந்திப்பு. இந்த சந்திப்பில் எந்த அரசியலும் பேச நான் வரவில்லை. ஏனெனில் இது அரசியல் சந்திப்பு இல்லை என தெரிவித்தார்.

    • மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா- திரணாமுல் காங்கிரஸ்க்கு இடையில் நேரடி போட்டி.
    • பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜனதா.

    மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தல் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2 ஆயிரமாக உயர்த்தும். நாம் சமையல் செய்வதற்கு விறகு சேகரிக்கும் பழைய நடைமுறைக்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். அவர்கள் கட்டித்தரவில்லை என்றால் மே மாதத்திலிருந்து மாநில அரசே அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.

    ஒரு இளைஞரிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் கிடைத்ததா? என்று கேட்டேன். சுமார் ₹30,000 கிடைத்ததாக கூறினார். இவரைப் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் இருந்த தொகை இதுவாகும். 59 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளோம்

    இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 11 லட்சம் வீடுகள் கட்டுக்கொடுக்க இருக்கிறது. இருப்பினும், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான் ஷேக் நேற்று கைது செய்யப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் கூறவில்லை.

    • பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள்.
    • என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். சீக்கியர்களை மோசமாகச் சித்தரிக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடியோவை தனது X பக்கத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் காவல்துறை அதிகாரி, என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில்,"பாஜகவின் பிரிவினைவாத அரசியல் அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.
    • விவசாயிகளின் போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களை பொது மக்கள் பெறாத வகையில், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டையை முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கவனமாக இருங்கள், அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்கிறார்கள்.

    வங்காளத்தின் பல மாவட்டங்களில் பல ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) தேர்தலுக்கு முன் மக்கள் பலன்களைப் பெறக்கூடாது என்பதற்காக ஆதார் அட்டைகளை நீக்குகிறார்கள்.

    ஆனால், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், திட்டங்களின் பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவோம். ஒரு பயனாளி கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.

    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு உத்தரவாதம் அளிக்கக் கோரி நடத்திய போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×