search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
    • புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பலனடைகின்றனர்.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை மட்டும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, நகர பகுதியில் இயங்கும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பாராளுமன்ற தேர்தலில் தவறாது ஓட்டளிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகர பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட கேட்டுக்கொண்டார். அதன்படி, 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

    நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    இந்த காணொலிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

    • கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
    • அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    கோடைகாலம் தொடங்கியதால் புதுவையில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.

    காலை 7 மணி முதல் வெப்பம் அதிகரித்து செல்கிறது. சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முதியோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் வாடிய முதியவருக்கு போலீஸ்காரர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்கால் நெடுங்காடு சந்திப்பு சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் முகமது ஹாஜா, அந்த வழியே காலில் செருப்பு அணியாமல் வந்த மூதாட்டியை பார்த்தார்.


    கடும் வெயிலால் நடக்க சிரமப்பட்டு வந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் மூதாட்டியை நிறுத்தி அருகிலிருந்த கடையில் செருப்பு, குடை வாங்கி கொடுத்தார்.

    தொடர்ந்து மூதாட்டிக்கு இளநீர் வாங்கி கொடுத்தார். அந்த வழியே சென்ற முதியோருக்கும் இளநீர் வாங்கி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போலீஸ்காரரை பாராட்டி வருகின்றனர்.

    இவர் ஏற்கனவே அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை‌.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் 4 பிராந்தியங்கள் உள்ளன.

    இதில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே மாகி பிராந்தியம் உள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது. இது மாகி பிராந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணியில் போட்டியிடும் புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாகியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிக்காமல் பிரசாரமும் செய்யாமல் சுயேட்சைக்கு வாக்களிக்க முடிவு எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மாகி கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூறியதாவது:-

    புதுவை இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பிரசாரம் செய்யவும் வாக்களிக்கவும் இங்குள்ள தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதை புதுவையில் உள்ள கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டோம் நாங்கள் கேரளம் கண்ணூர் மாவட்ட செயலகத்தில் இணைந்துள்ளோம்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை. மக்கள் நீதி மையம் வேட்பாளரைதான் ஆதரித்தோம். இந்த முறையும் காங்கிரசுக்கு வாக்களிக்க முடியாது பிரசாரமும் செய்ய முடியாது. ஏனெனில் இது கேரளாவில் உள்ள காங்கிரசுடன் எங்கள் மோதலை நீர்த்துப் போக செய்யும். அதனால் நாங்கள் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்:-

    மாகி நிலவரத்தை கட்சி தலைமை அறிந்துள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் பிளவு படாமல் இருக்க கட்சி தலைமை வழிவகை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் கூறுகையில்:-

    கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்ய கூடாது. வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாகியில் முயற்சிகள் எடுப்போம் என்றார்.

    • போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகரில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அரை குறை பணியுடன் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் செல்லம் பாப்பு நகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தீர்மானம் செய்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பொதுப்பணித்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    • கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.
    • நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்

    சின்னத்திரை காமெடி நடிகராக லட்சக் கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன.

    அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.

    அனைவராலும் பாராட்டப்பட்ட இதனை செய்தியாக கடந்து விடாமல் கலை சிற்பமாக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் கலை பொம்மையாக மாற்றியுள்ளார்.

    பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி,தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.

     

    இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ்,நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்.இந்த பைக் பொம்மையை பாலாவுக்கு தான் தர விரும்புவதாக கூறியுள்ளார்.

    தான் சென்னைக்கு செல்ல இயலாது என்ற காரணத்தினால் புதுச்சேரிக்கு நடிகர் பாலா எப்பொழுது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
    • மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 வாடகை கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி புதுச்சேரி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற காரின் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த போலீசார் உயிர்தப்பினர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதேன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

    சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
    • 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தனித்து களமிறங்கும் பட்சத்தில் மும்முனை போட்டி சூழல் உருவாகும். அ.தி.மு.க.வில் போட்டியிட 21 பேர் விருப்ப மனு அளித்தனர்.

    வேட்பாளரையும் அக்கட்சி தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. தலைமை ஈடுபட்டுள்ளதால் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    அதே வேளையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்து பட்டியலை தேசிய தலைமைக்கு அனுப்பிவிட்டது. 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது புதுச்சேரி வேட்பாளரின் பெயர் இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


    ஆனால் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கும் பா.ஜனதாவில் இதுவரை வேட்பாளர் யார்? என்பது தெரியவில்லை. தினசரி ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியது.

    அதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபரை வேட்பாளராக நிறுத்த கருத்து கேட்கப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் காரைக்கால் தொழிலதிபரை தேர்தலில் நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

    இதனிடையே நேற்று பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. நிருபர்களை சந்தித்து பேசிய போது, புதுச்சேரி வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் 4 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். அந்த பட்டியலை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில் ஒருவரை கட்சியின் தேசிய தலைமை இறுதி செய்து அறிவிக்கும் என்றார்.


    அதில் 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இதில் ஒருவரை அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி மக்களின் மனநிலை, தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான ரகசிய சர்வேயை மத்திய உளவுத்துறை மூலமாக பா.ஜனதா மேலிடம் நடத்தியுள்ளது.

    அதில் புதுச்சேரியில் மக்களின் ஆதரவை பெற்ற பிரபலமான ஒருவரின் பெயர் வெற்றி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும், வெளிமாநிலத்தவர் 2, 3-ம் இடத்திலும், காரைக்கால் தொழிலதிபர் பெயர் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

    இவர்களில் ஒருவரை கட்சி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்து வைத்து விட்டதால், ஓரிரு நாளில் பா.ஜனதா வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
    • பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.

    அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    • புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் போதைப் பொருள் ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்நீதிகேட்டும், போதைப்பொருள் விற்பனை கேந்திரமாக மாறி இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கப்படுவதை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    பந்த் போராட்டத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலச்செயலர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், அண்ணா சிலையை வந்தடைந்தனர்.

    அங்கு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணைச்செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச்செயலர் காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், தொகுதி செயலாளர்கள் சம்பத், துரை, பாஸ்கர், ஆறுமுகம், மகளிர் அணி விமலா, எழிலரசி, மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்
    • இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

    புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×