search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு
    X

    பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு

    • சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகரில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அரை குறை பணியுடன் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் செல்லம் பாப்பு நகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தீர்மானம் செய்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பொதுப்பணித்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    Next Story
    ×