search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி காங். வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என கம்யூனிஸ்டுகள் கைவிரிப்பு
    X

    புதுச்சேரி காங். வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என கம்யூனிஸ்டுகள் கைவிரிப்பு

    • கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை‌.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் 4 பிராந்தியங்கள் உள்ளன.

    இதில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே மாகி பிராந்தியம் உள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது. இது மாகி பிராந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணியில் போட்டியிடும் புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாகியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிக்காமல் பிரசாரமும் செய்யாமல் சுயேட்சைக்கு வாக்களிக்க முடிவு எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மாகி கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூறியதாவது:-

    புதுவை இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பிரசாரம் செய்யவும் வாக்களிக்கவும் இங்குள்ள தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதை புதுவையில் உள்ள கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டோம் நாங்கள் கேரளம் கண்ணூர் மாவட்ட செயலகத்தில் இணைந்துள்ளோம்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை. மக்கள் நீதி மையம் வேட்பாளரைதான் ஆதரித்தோம். இந்த முறையும் காங்கிரசுக்கு வாக்களிக்க முடியாது பிரசாரமும் செய்ய முடியாது. ஏனெனில் இது கேரளாவில் உள்ள காங்கிரசுடன் எங்கள் மோதலை நீர்த்துப் போக செய்யும். அதனால் நாங்கள் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்:-

    மாகி நிலவரத்தை கட்சி தலைமை அறிந்துள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் பிளவு படாமல் இருக்க கட்சி தலைமை வழிவகை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் கூறுகையில்:-

    கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்ய கூடாது. வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாகியில் முயற்சிகள் எடுப்போம் என்றார்.

    Next Story
    ×