search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    மே மாதம் முடிவடைந்தாலும், வெயில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் ஜூன், ஜூலை வரை நீடிப்பது வழக்கம்தான். இந்நிலையில், வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முலாம் பழம்

    வெயிலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக விளங்குகிறது. ஆரோக்கியமான சுவையான உணவுப்பொருளாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்கிறது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி இவை இரண்டும் அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ப்ளாக் பெர்ரி, ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்றவைகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடல் இழக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யக்கூடியது. வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் ஏற்படலாம். அதை தடுத்து உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கலாம். மீன் மற்றும் இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    இனிப்பு சோளம்

    கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். அதை வேகவைத்தாலும், சுட்டு சாப்பிட்டாலும் இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    அவகேடோ

    ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய உணவுப்பொருளாக அவகேடோ உள்ளது. ஏனெனில் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பப்பெற்றது. இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது.

    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
    • வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகம், புதுவையில் இன்று எந்த ஒரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

    இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டில் அதிகமாக வெப்பம் பதிவான இடங்கள்

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.8, கரூர் பரமத்தி - 97.7, மதுரை விமான நிலையம் - 94.46, பாளையங்கோட்டை - 97.88, தஞ்சாவூர் - 96.8

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 68.9, ஊட்டி - 67.28, வால்பாறை - 78.8

    • அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும்

    இந்தியாவில் நிலவி வரும் அதீத வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களின் உடலை நீரேற்றத்துடன் குளுமையாக வைத்துக்கொள்ள ஜூஸ்களையும் குளிரூட்டயப்பட்ட சாஃப்ட் ட்ரிங்ஸ்களையும் அருந்திவருகின்றனர். அதிலும் முக்கியமாக கரும்பு ஜூஸை அனைவரும் விரும்பி உட்கொள்கின்றனர்.

     

    இதனால் நகரங்கள் மற்றும் டவுன்களில் வீதிக்கு வீதி ஜூஸ் கடைகளும் கரும்புச்சாறு கடைகளும் முளைத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மக்களுக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

     ஆரோக்யமான உணவு முறை குறித்து ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் (NIN) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்புச்சாறு அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடபட்டுள்ளது.

     

    மேலும் அந்த அறிக்கையில், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும், பழத்தை ஜூஸ் போட்டு அருந்தும்போது பழத்தின் மொத்த சத்தில் 100-150 கிராம் அளவு சத்து மட்டுமே உடலில் சேரும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செயற்கை நிறமிகள் சேர்க்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கபடாத பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

     

    • டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.

    டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.

     

    ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.

    • மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது
    • தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

    இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்

    திருத்தணி - 108.5, மீனம்பாக்கம் - 107, வேலூர் - 107, மதுரை விமான நிலையம் - 104, நுங்கம்பாக்கம் - 104, பரங்கிப்பேட்டை - 104, மதுரை நகரம் - 104, புதுச்சேரி - 104, ஈரோடு - 104, நாகப்பட்டினம் - 103, கடலூர் - 103, திருச்சி - 102, தஞ்சாவூர் - 102, தொண்டி - 101, திருப்பத்தூர் - 101, காரைக்கால் - 101, கரூர் பரமத்தி - 100, தூத்துக்குடி - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    குன்னூர் - 76.64, கொடைக்கானல் - 71.6, ஊட்டி - 72, வால்பாறை - 78

      தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

      ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

      இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

      இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

      மே 4 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

      தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

      சென்னை மீனம்பாக்கம் - 106, சென்னை நுங்கம்பாக்கம் - 106, திருத்தணி - 104, வேலூர் - 104, திருப்பத்தூர் - 102, மதுரை நகரம் - 101, பரங்கிப்பேட்டை - 101, மதுரை விமான நிலையம் - 101, புதுச்சேரி - 101, நாகப்பட்டினம் - 101, தஞ்சாவூர் - 100, கடலூர் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

      சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

      குன்னூர் - 77, கொடைக்கானல் - 73.04, ஊட்டி - 73, வால்பாறை - 75.2

      • மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது.
      • ண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

      தமிழகம் முழுவதும் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.

      ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

      இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

      இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

      தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

      சென்னை - 105.08, கடலூர் - 101.12, ஈரோடு - 100.76, மதுரை விமான நிலையம் - 101.12, புதுச்சேரி - 101.12, தஞ்சாவூர் - 102.2, திருத்தணி -100.58, வேலூர் - 103.82, கோயம்புத்தூர் - 90.68, கரூர் பரமத்தி - 97.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

      சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

      குன்னூர் - 77, கொடைக்கானல் - 75.2, ஊட்டி - 74.84, வால்பாறை - 76.1

      • நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
      • ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

      தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

      தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கியது.

      இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் தற்போது கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மழை அலர்ட் கொடுக்கப்பட்டது.

      இன்று நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

      இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 138.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 108.6 மி.மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளது.

      • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது.
      • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 114.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

      தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

      தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

      குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

      இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

      இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 114.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 105.4 மி.மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளது.

      • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
      • நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

      • நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.

      • நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

      • பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

      • பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

      • உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.

      • கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


      • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

      • நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

      • பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

      • நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

      • கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.

      • பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.

      நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

      • தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது.
      • கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர்.

      தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர். அப்போது இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது

      இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.

      இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த மே 9 முதல் 15 வரை இயல்பை விட கூடுதலாக 58% மழை பெய்துள்ளது.

      இந்த குறிப்பிட்ட நாட்களில் 16.4 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 25.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

      • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
      • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.

      தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது.

      இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

      இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

      தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

      திருத்தணி - 102.38, கரூர் பரமத்தி - 102.2, வேலூர் - 101.66, நாமக்கல் - 100.4, சென்னை மீனம்பாக்கம் - 96.8, கோயம்புத்தூர் - 96.26 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

      சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

      குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 69.98, ஊட்டி - 73.76, வால்பாறை - 78.8

      ×