என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 118052"

    25 நாட்கள் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப தாக்கம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது‌.
    மதுரை

    கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 25 நாட்க ளாக வாட்டி வதைத்தது. இதன் காரண மாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. 

    103 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் பொதுமக்கள் பகல் நேரங்க ளில் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது.இதன் காரணமாக வெப்பத்தை தணிக்கும் வகையில் நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழ வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

    இந்தநிலையில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பலத்த இடி மின்னலுடன் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. 

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப தாக்கம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது‌.

    கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இதமான காலநிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

     எனவே அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் சில நாட்களில் பருவமழை தொடங்க இருப்பதால் விவசாய பணிகளை தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். 
    மேலும் அடுத்த மாதம் வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்காக பிரதான கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணியும் தொடங்கி உள்ளன.
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.
    • தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.

    பிஜீங்:

    சீனாவில் சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே அதிக வெப்பம் பதிவாகி வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில் வெப்ப அளவு உள்ளது.

    ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை வரை கடுமையான வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதே போல் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை மிக அதிக வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. சுமார் 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகானங்களான ஜெஜி யாங், புஜியனில் 105.8 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

    கடும் வெயிலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் ஜன்னல்களை மூடிவைக்கு மாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் பல நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.

    1873-ம் ஆண்டில் இருந்து சீனாவில் கடந்த மாதம் தொடக்கத்தில் 105.62 டிகிரி வெயில் அடித்தது. தற்போது உச்சப்பட்ச அளவான 105.8 டிகிரி பதிவாகி இருக்கிறது. இது சீனா வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெயில் அளவாகும்.

    கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    • ராமநாதபுரம் நகா் பகுதியில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.
    • கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் சாரல் மழை அவ்வப்போது மழை பெய்து வந்து, வெப்பம் தணிந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் நகா் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.

    இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதே போல் பனைக்குளம், வழுதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் நீண்டநேரம் மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டும் இயல்பை காட்டிலும் குறைவான மழையே பதிவானது. இதனால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் தொடக்கம் முதலே மழை இல்லை. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற்பகலுக்கு மேல் அனல் காற்று வீசுவதை உணர முடிகிறது. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் குடை பிடித்து செல்வதை பார்க்க முடிகிறது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது.

    குறிப்பாக தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை என அனைத்து சாலைகளிலும் தர்பூசணி பழங்கள் சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவதை காண முடிகிறது.

    திண்டிவனம் பகுதியில் இருந்து வாங்கி வரப்படும் இந்த தர்பூசணி பழங்கள் அவற்றின் எடை மற்றும் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த பழங்கள் தாகத்தை தணிப்பதாக உள்ளதால், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
    ×