என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டீசல் விலை உயர்வு"
பெங்களூரு:
கர்நாடக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதல்-மந்திரி குமாரசாமி காங்கிரசின் கருணையால் தான் பதவியில் இருக்கிறேன், மக்களின் ஆதரவில் இல்லை என்று அவர் ஏற்கனவே கூறியதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். குமாரசாமி அரசியல் கட்டாயத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்துகிறார்.
அதே போல் காங்கிரஸ் கூட்டணியில் செயல்படும் மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது. அதனால் மாநில பட்ஜெட், முரண்பாடான பட்ஜெட்டாக உள்ளது. முன்பு சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட் அமல்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி ஒரு விரிவான தகவல் எதுவும் இல்லை.
காங்கிரஸ் உறுப்பினர்களே இந்த பட்ஜெட்டுக்கு அதிருப்தி அடைந்துள்ளனர். மண்டல ஏற்றத்தாழ்வு பிரச்சினைக்கு பட்ஜெட்டில் தீர்வு இல்லை. இது அண்ணன்-தம்பி பட்ஜெட். அவர்கள் சார்ந்துள்ள ராமநகர், மண்டியா மாவட்டங்களின் பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம் கர்நாடக மக்களை குமாரசாமி அவமதித்துவிட்டார். ஆட்சியில் இல்லாதபோது நீர்ப்பாசனத்துறை பற்றி குமாரசாமி அதிகமாக பேசினார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த துறைக்கு முன்னுரிமை கொடுக்க அவர் தவறிவிட்டார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது. வேலை இல்லாத இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். டீசல் விலையை உயர்த்தி இருப்பதால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.
அன்ன பாக்ய திட்டம் மத்திய அரசுக்கு சேர்ந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை 5 கிலோவாக குறைப்பதாக குமாரசாமி அறிவித்துள்ளார். இது ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். மின் கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் குமாரசாமி நேர்மையாக செயல்படவில்லை.
விவசாயிகளின் கடனில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறார். விவசாயிகளுக்கு குமாரசாமி துரோகம் செய்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார். மகளிர் சுயஉதவி குழுக்கள், மீனவர்கள், நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும் அவர் தவறிவிட்டார். இந்த வாக்குறுதிகளை கூறி தான் குமாரசாமி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இது கர்நாடகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #yeddyurappa #Karnatakabudget #kumaraswamy
டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தரைவழி போக்குவரத்து சங்கங்களின் கீழ் உள்ள தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட சங்கங்கள் நேற்று முன்தினம் முதல் லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.
இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பாலான முக்கிய லாரி சங்கங்கள் பங்கேற்காததால் மிகப்பெரிய அளவில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் 10 சதவீத லாரிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னையில் லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக இல்லை. பெரும்பாலான லாரிகள் ஓடுவதால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக வர வேண்டிய 350 லாரிகளில் 220 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதனால் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்கின்றன என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்து விட்ட நிலையில் திடீரென ஒரு சிலர் பொதுமக்களையும், லாரி உரிமையாளர்களையும் குழப்பி ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக் குழுவில் முடிவு செய்வோம் என்றார். #Truckersstrike
டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம், சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் நாடு முழுவதும் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரிகள் ஓடாததால் பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறவில்லை.
முக்கியமான லாரி சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடாததால் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு பிரிவினர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாரிகள் அதிகமுள்ள நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பெரும்பாலான லாரிகள் வழக்கம் போல் ஓடின. சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் அதிகளவு இயக்கப்படவில்லை. அதே போல வெளி மாநிலங்களில் இருந்தும் குறைந்த அளவில்தான் லாரிகள் சென்னைக்கு வருகின்றன.
இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களின் போராட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. அழுகும் பொருளான காய்கறிகள் விலை உடனே உயர்ந்து விட்டது.
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் லாரிகள் இன்று வந்தன. வழக்கமாக தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் வருவது உண்டு. ஆனால் ஸ்டிரைக் காரணமாக 200 லாரிகள் மட்டுமே இன்று வந்துள்ளன.
இதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பீன்ஸ், தக்காளி, உருளை, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
லாரி வாடகையும் உயர்ந்து இருப்பதாக மார்க் கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
லாரிகள் குறைவாக வருவதால் குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பச்சை மிளகாய் போன்றவை விலை உயர்ந்துள்ளது. கேரட், பீட்ரூட், நூல்கோல் ஆகியவை 10 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. நாளையும் லாரிகள் வரவில்லை என்றால் மேலும் உயரும் என்றார்.
டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். 3-வது நபர் காப்பீட்டு தொகையை 30 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.
அதன்படி நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.
ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியதாவது.-
பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்த்தப்படுவதால், சரக்கு லாரிகள் நஷ்டத்தை சந்திக்கின்றன. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவற்றின் விலையை உயர்த்த வேண்டும்.
தேசிய அளவில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, ஒரே தொகையாக பெற வேண்டும்.
வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் ஜீலை 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தில் அங்கத்தினர் என்ற முறையில் தாங்களும் பங்கேற்கிறோம்.
எனவே இன்று நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு நரிப்பள்ளம் ஓடை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் அந்தந்த பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும்.
அதே போன்று இன்று நரிப்பள்ளம் ஓடையில் இருந்து லாரிகள் வழக்கம் போல் இயங்கின.
டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இதனால் 75 ஆயிரம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பு நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் 40, ஆயிரம் மணல் லாரிகள் லோடுகளை ஏற்றி வந்தன. தற்போது ஆன்லைன் வர்த்தகம் வந்த பின் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மணல் லாரிகளுக்கு மட்டுமே லோடு கிடைப்பதால் மற்ற லாரிகள் லோடு கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, 8-ம் வகுப்பு படித்தவர்களுக்குத்தான் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட காரணங்களால் 30 சதவீத லாரிகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் மணல் லாரி தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாரி சங்கங்கள் இரண்டாக செயல்படுகின்றன. இதில் ஒரு சங்கம் இன்றும், மற்றொரு சங்கம் ஜூலை மாதம் 20-ந் தேதியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. லாரி சங்கங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் தான் லாரி தொழிலை காக்க முடியும். எனவே லாரி சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டீசல் விலையை 3 மாதத்திற்கு ஓரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரதமர், பெட்ரோலிய துறை மற்றும் சாலை போக்குவரத்துதுறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் மத்திய அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஏற்கனவே அறிவித்த படி ஜூன் 18-ந் தேதியான இன்று முதல் அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் வட மாநிலங்களில் லாரிகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் முக்கிய சங்கமான 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் இந்த சங்கத்தின் கீழ் இயங்கும் நான்கரை லட்சம் லாரிகள் வழக்கம் போல ஓடின. இதில் சேலம் மாவட்டத்தில் 32 ஆயிரம் லாரிகளும் ஒடியதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் ஜூலை மதம் 20-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்தது தான் எங்களது சங்கம். இந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு நான்கரை லட்சம் லாரிகள் இயங்குகிறது.
இதில் மூன்றரை லட்சம் லாரிகள் தமிழகத்திற்குள் இயங்குகிறது. ஒரு லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் வழக்கம் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள மற்றொரு சங்கத்திற்கு எங்கள் ஆதரவு கிடையாது. அந்த சங்கத்தினருக்கு தமிழகத்தில் மிக குறைந்த அளவே லாரிகள் உண்டு என்பதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:
இன்று தொடங்கியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் எங்களது சங்கம் பங்கேற்கவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரம் லாரிகளும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. #tamilnews
டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டீசல் விலை தினசரி உயர்வு, 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 24-ந் தேதி பிரதமர், பெட்ரோலிய துறை, சாலை போக்குவரத்து துறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் ஜூன் 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம்.
நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், இன்று நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. நாங்கள் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போம். எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.
தமிழ்நாட்டில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன. இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன.
தற்போது டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப லாரி வாடகையும் உயர்த்தப்படுகின்றன. இதனால் முன்பு இருந்ததைவிட லாரி வாடகை அதிகரித்துள்ளது.
காய்கறி உற்பத்தி அதிகமானதால் கடந்த ஏப்ரல் மாதம் வரை சென்னைக்கு காய்கறி வரத்து அதிகமானது. இதனால் காய்கறிகளின் விலை மிகவும் குறைந்தது.
தற்போது டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது. கோடை காரணமாக காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது.
பச்சை பட்டாணி கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இஞ்சி விலை ரூ.80 ஆக உள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் (கிலோ) ரூ.10 முதல் 13 வரை. சின்ன வெங்காயம் ரூ.25-28, தக்காளி ரூ.10-15, அவரை ரூ.20-25, கேரட் ரூ.20-25, பீட்ரூட் ரூ.15-20, முள்ளங்கி ரூ.10-15, கத்திரிக்காய் ரூ.10-15, புடலங்காய் ரூ.10-15, கோவங்காய் ரூ.15-20, நூல்கோல் ரூ.15-20, வெண்டைக்காய் ரூ.15-20, காலிபிளவர் ரூ.20-30, சேனை கிழங்கு ரூ.15-20, 20-22, உருளைகிழங்கு, 20-25, ப.மிளகாய்-ரூ. 15-20, முருங்கைகாய் ரூ.30-35.
இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கோடை காலம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
இதனால் படிப்படியாக டீசல் விலை உயர்ந்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 72.70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதில் முடிவு ஏற்படாவிட்டால் லாரி வாடகை மேலும் உயர்த்தப்பட்டு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படவில்லை. தினமும் டீசல் விலை உயர்வால் சரியாக வாடகை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் தினமும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரிமியம் 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் நீண்ட நேரம் காத்து நின்று செலுத்த வேண்டி உள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கசாவடி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் உள்ள நான்கரை லட்சம் லாரிகளும் பங்கேற்கும். இதனால் சரக்கு போக்குவரத்து முடங்கும் நிலை உள்ளது. இதில் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #petroldiesel
ராமநாதபுரம்:
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களை சுட்டுக்கொன்ற தமிழக அரசை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய் வேந்திரன் தலைமையில் அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா,பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர் காங்கிரஸ் தலைவர் கோபி வரவேற்றார். நகர் காங்கிரஸ் தலைவர்கள் ராஜாமணி, அஜீஸ், வட்டார தலைவர்கள் ஜோதிபாலன், கோபால், ஜெயபாண்டி, சேதுபாண்டியன், கந்தசாமி, முனீஸ்வரன், தன சேகரன், விஜயரூபன், ஜேசு மனோ கரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகுந் தலாதேவி, பெமிளா விஜய குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகா லிங்கம், முத்து ராமலிங்கம், பாலகிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் முருகேசன், ரவி, காமராஜ், விஜயன், அருள், கந்தப்பழம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்