search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
    • ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    இந்த ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அறந்தாங்கியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "நான் சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தேன். அதன் பிறகு அந்த தொகுதியில் ஏகப்பட்ட பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். என்னை சேர்த்து இங்கு 5 பன்னீர்செல்வம் போட்டி போடுகிறார்கள்.

    நான் தேர்தல் ஆணையத்திடம் என்னென்ன சின்னங்கள் கேட்டேனோ அதே சின்னங்களை தான் மற்ற பன்னீர்செல்வமும் கேட்டார்கள். அவர்களெல்லாம் வெறும் ஒ.பன்னீர்செல்வம்தான்... நான் ஓஓ...பன்னீர்செல்வம். ஒரு சின்னத்தை 2 பேர் கேட்டால் அதை குலுக்கல் முறையில் போட்டு தான் சின்னம் தேர்ந்தெடுப்பார்கள். அதில் நமது வெற்றி சின்னமான பலாப்பழம் சின்னம் நமக்கு கிடைத்தது" என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

    • ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்
    • ஓ.பன்னீர்செல்வம் விரும்பிக் கேட்ட வாளி சின்னம், அவர் பெயரிலேயே உள்ள வேறு ஒரு பன்னீர்செலவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் விரும்பிக் கேட்ட வாளி சின்னம், அவர் பெயரிலேயே உள்ள வேறு ஒரு பன்னீர்செலவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மொத்தம் 6 பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்
    • இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    • ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்
    • இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

    • தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • கடந்த தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாவை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
    • பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி ஊராட்சி, அண்ணா பல்க லைக்கழக பொறியியல் கல் லூரி கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை யின் மூலம் டாக்டர் கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் ராமநாத புரம் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி செ. முருகேசன், திருவா டானை ராம.கருமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநா தபுரம் வருவாய் கோட்டத் திற்கு உட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்க லம், திருவாடனை, ராமேசுவ ரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 1028 பயனாளிக ளுக்கு இ-பட்டா வழங்கப்ப டுகிறது.

    இதில் பயன்பெறும் பய னாளிகளில் ஒரு பகுதியினர் தங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இதுவரை பட்டா கிடைக்காமல் இருந்து இன்று கிடைக்கப் பெற்று இருப்பீர்கள். மேலும் இதுவரை பட்டா கிடைக்காமல் வாடகை குடி யிருப்பில் இருந்தவர்க ளுக்கு இன்று பட்டா கிடைக் கப்பெற்று இருக்கும். இப்படி பல்வேறு நிலைக ளில் பட்டா பெறாமல் இருந்த பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முதலமைச்சர் மீனவர் மாநாட்டிற்கு வருகை தந்த பொழுது சுமார் 4,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 5,375 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 1,808 பேருக்கும் பட்டா வழங்கப் பட்டுள்ளது. நத்த பட்டா 1,086 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் இதுவரை வீட்டுமனை பட்டா வேண்டி சுமார் 4000 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அவர்களுக் கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சட்டமன்ற உறுப்பினர் கள் வேண்டுகோளுக்கி ணங்க பொதுமக்களின் கோரிக்கைகளை தங்கள் பகுதிக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றிட கேட் டுக்கொண்டுள்ளார். அதே போல் ஊராட்சி பகுதிக ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்க ளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து 1,028 பயனா ளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராம நாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், புல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் மற்றும் வட் டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடி கிராமத்தில் ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது அந்தப்பகு தியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சீராக கிடைக் கப்பெறுகிறதா என கலெக் டர் கேட்டறிந்தார்.

    அப்போது அவர் தெரி வித்ததாவது:-

    தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொருளாதார ரீதியாக பயன் பெறும் வகையில் மானி யத்துடன் கடனுதவி கள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் மழைக்காலம் தொடங்கியதையொட்டி, கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதியளவு விதைகள், உரங்கள் விவ சாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத்து றையின் மூலம் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி களப்ப ணியில் வேளாண் உதவி திட்ட அலுவலர்கள் ஈடு பட்டு வருவார்கள். விவசா யிகள் தக்க ஆலோசனை களை பெற்று விவசாயப்ப ணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடி தண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்து வர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதே போல் மருத்துவக்குழு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்றின்றி உடல் ஆரோக் கியத்துடன் இருந்திட வேண் டும் என்றார்.

    முன்னதாக புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்தவுடன் காலை உணவு மற்றும் மதிய உணவு குழந் தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதன் விவரம் குறித்து பணியாளர்களிடம் கேட்ட றிந்தவுடன், மழைக்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தை களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந் தால் அரசு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து தேவை யான சிகிச்சை வழங்கி உதவிட வேண்டுமாறு அறி வுறுத்தினார்.

    இதில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, அன்பு கண்ணன், புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் ராமநாதபுரம் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    வழக்கறிஞர் வினோத்குமார் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
    • ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வட்டம், பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கரை வட்டம் ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 2024 வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத் தத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பியவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்தல் தொடர்பான பணி கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்கா ளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கு 5.11.2023 மற்றும் 18, 19-ந் தேதி ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    அதனைத்தொடர்ந்து பட்டணம்காத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக வும் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின்போது வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடை பெறுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு ராம நாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி யில் இருக்கும் வகை யில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்க ளது சொந்த வாகனங்க ளில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், வாடகை வாகனங்கள் மற் றும் இருசக்கர வாகனங்க ளில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    குருபூஜைக்கு வருபவர்க ளின் வசதிக்கென தேவைப் படும் கிராமங்களிலி ருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்து களை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்பு றத்தில் தொங்குவது, மேற்கூ ரையில் அமர்வது, வெடி வெடிப்பது போன்ற விதி மீறல்களிலும் ஈடுபடக் கூடாது. குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில் லாத பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு, சமு தாய ரீதியிலான கோஷங் களை எழுப்பக்கூடாது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன் னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 144 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடும் நபர் களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கை களை கண்காணிக்க ஒவ் வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள் ளும் பிரத்யேக கேமராக்கள், பேருந்துகளில் பாது காப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டிரோன் கேமராக்கள் 3, மொபைல் கேமரா வாக னங்கள் 5, மொபைல் கேமராக்கள் 9 இடங்களிலும் மற்றும் கமுதி மற்றும் பசும் பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கரம் மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படை கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதிமீ றல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த வருடங்களில் நடை பெற்ற தேவர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்டோர்மீது 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் தொகுதியின் துணைத் தலைவர் முஹம்மது மீராசா தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தொகுதியின் செயலாளர் அக்பர் அலி வரவேற்றார்.வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டின் அவசியத்தை கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் சோமு, தொகுதியின் துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பாரூக் ராஜா முஹம்மது, ஜான் முஹம்மது மற்றும் ராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டினம், திருப்புல்லாணி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக தொகுதியின் பொருளாளர் கீழை அஸ்ரப் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது
    • விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் விழிப்புணர்வு பேரணியை அபிராமம் கல்வி பொறுப்பு கழக தலைவர் ஹபீப் முகம்மது தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்திலிருந்து நத்தம் பஸ் நிறுத்தம் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.

    பள்ளி செயலாளர் அஷ்ரப் ஜுனைத், தாளாளர் அகமது நைனார், தலைமை ஆசிரியர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முகமது இக்பால், உதவி திட்ட அலுவலர்கள் அலி அக்பர் ரியாஸ், அப்துல் ஹமீது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    அதேபோல் கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாமில் மாணவர்கள் தூய்மைப் பணி செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×