என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ramanathapuram"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாவை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
- பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி ஊராட்சி, அண்ணா பல்க லைக்கழக பொறியியல் கல் லூரி கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை யின் மூலம் டாக்டர் கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் ராமநாத புரம் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி செ. முருகேசன், திருவா டானை ராம.கருமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநா தபுரம் வருவாய் கோட்டத் திற்கு உட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்க லம், திருவாடனை, ராமேசுவ ரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 1028 பயனாளிக ளுக்கு இ-பட்டா வழங்கப்ப டுகிறது.
இதில் பயன்பெறும் பய னாளிகளில் ஒரு பகுதியினர் தங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இதுவரை பட்டா கிடைக்காமல் இருந்து இன்று கிடைக்கப் பெற்று இருப்பீர்கள். மேலும் இதுவரை பட்டா கிடைக்காமல் வாடகை குடி யிருப்பில் இருந்தவர்க ளுக்கு இன்று பட்டா கிடைக் கப்பெற்று இருக்கும். இப்படி பல்வேறு நிலைக ளில் பட்டா பெறாமல் இருந்த பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் முதலமைச்சர் மீனவர் மாநாட்டிற்கு வருகை தந்த பொழுது சுமார் 4,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 5,375 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 1,808 பேருக்கும் பட்டா வழங்கப் பட்டுள்ளது. நத்த பட்டா 1,086 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் இதுவரை வீட்டுமனை பட்டா வேண்டி சுமார் 4000 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அவர்களுக் கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் கள் வேண்டுகோளுக்கி ணங்க பொதுமக்களின் கோரிக்கைகளை தங்கள் பகுதிக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றிட கேட் டுக்கொண்டுள்ளார். அதே போல் ஊராட்சி பகுதிக ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்க ளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
தொடர்ந்து 1,028 பயனா ளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராம நாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், புல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் மற்றும் வட் டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புளியங்குடி கிராமத்தில் ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது அந்தப்பகு தியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சீராக கிடைக் கப்பெறுகிறதா என கலெக் டர் கேட்டறிந்தார்.
அப்போது அவர் தெரி வித்ததாவது:-
தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொருளாதார ரீதியாக பயன் பெறும் வகையில் மானி யத்துடன் கடனுதவி கள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் மழைக்காலம் தொடங்கியதையொட்டி, கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதியளவு விதைகள், உரங்கள் விவ சாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத்து றையின் மூலம் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி களப்ப ணியில் வேளாண் உதவி திட்ட அலுவலர்கள் ஈடு பட்டு வருவார்கள். விவசா யிகள் தக்க ஆலோசனை களை பெற்று விவசாயப்ப ணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடி தண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்து வர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதே போல் மருத்துவக்குழு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்றின்றி உடல் ஆரோக் கியத்துடன் இருந்திட வேண் டும் என்றார்.
முன்னதாக புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்தவுடன் காலை உணவு மற்றும் மதிய உணவு குழந் தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதன் விவரம் குறித்து பணியாளர்களிடம் கேட்ட றிந்தவுடன், மழைக்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தை களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந் தால் அரசு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து தேவை யான சிகிச்சை வழங்கி உதவிட வேண்டுமாறு அறி வுறுத்தினார்.
இதில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, அன்பு கண்ணன், புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் ராமநாதபுரம் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வழக்கறிஞர் வினோத்குமார் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
- ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், வட்டம், பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கரை வட்டம் ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 2024 வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத் தத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பியவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்தல் தொடர்பான பணி கள் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்கா ளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கு 5.11.2023 மற்றும் 18, 19-ந் தேதி ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
அதனைத்தொடர்ந்து பட்டணம்காத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக வும் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
- ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடை பெறுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு ராம நாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி யில் இருக்கும் வகை யில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்க ளது சொந்த வாகனங்க ளில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், வாடகை வாகனங்கள் மற் றும் இருசக்கர வாகனங்க ளில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குருபூஜைக்கு வருபவர்க ளின் வசதிக்கென தேவைப் படும் கிராமங்களிலி ருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்து களை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்பு றத்தில் தொங்குவது, மேற்கூ ரையில் அமர்வது, வெடி வெடிப்பது போன்ற விதி மீறல்களிலும் ஈடுபடக் கூடாது. குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில் லாத பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு, சமு தாய ரீதியிலான கோஷங் களை எழுப்பக்கூடாது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன் னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 144 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடும் நபர் களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கை களை கண்காணிக்க ஒவ் வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள் ளும் பிரத்யேக கேமராக்கள், பேருந்துகளில் பாது காப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டிரோன் கேமராக்கள் 3, மொபைல் கேமரா வாக னங்கள் 5, மொபைல் கேமராக்கள் 9 இடங்களிலும் மற்றும் கமுதி மற்றும் பசும் பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.
அத்துடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கரம் மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படை கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதிமீ றல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த வருடங்களில் நடை பெற்ற தேவர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்டோர்மீது 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் தொகுதியின் துணைத் தலைவர் முஹம்மது மீராசா தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தொகுதியின் செயலாளர் அக்பர் அலி வரவேற்றார்.வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டின் அவசியத்தை கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் சோமு, தொகுதியின் துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பாரூக் ராஜா முஹம்மது, ஜான் முஹம்மது மற்றும் ராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டினம், திருப்புல்லாணி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக தொகுதியின் பொருளாளர் கீழை அஸ்ரப் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது
- விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் விழிப்புணர்வு பேரணியை அபிராமம் கல்வி பொறுப்பு கழக தலைவர் ஹபீப் முகம்மது தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்திலிருந்து நத்தம் பஸ் நிறுத்தம் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
பள்ளி செயலாளர் அஷ்ரப் ஜுனைத், தாளாளர் அகமது நைனார், தலைமை ஆசிரியர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முகமது இக்பால், உதவி திட்ட அலுவலர்கள் அலி அக்பர் ரியாஸ், அப்துல் ஹமீது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அதேபோல் கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாமில் மாணவர்கள் தூய்மைப் பணி செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- இல்லம் தேடி இளைஞரணி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள சாத்தான்குளம் ஊராட்சி யில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மாவட்ட இளைஞரணி இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படியும், மாநில இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவு றுத்தலின் படியும், மாநில இளை ஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆலோசனையின் பேரில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் மேற்கு ஒன்றிய பொறுப்பா ளர் கே.ஜே.பிரவீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், கவுன்சிலர் ரமேஷ் கண்ணன்,தௌபீக் ரஹ்மான், கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பா ளரும், நகரசபை துணை தலைவருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் பயாஸ், நயீம், சாத்தான்குளம் தொழிலதிபர் ரம்லி, இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மன்ற தலைவர் யாழினி புஷ்ப வள்ளி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறை வேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப் பட்டது. 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமான குறைகள் கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
பொது மக்கள் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.
- நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
- சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம்:
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 10-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் தினமும் விநாயகர் சிம்ம, மயில், யானை வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனிடையே திருவிழாவின் 6-வது நாளான நேற்று விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 18-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.