search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mango season"

    • சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான்.
    • அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து வெளி ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் வ.உ.சி. பழ மார்க்கெட், மண்டிகளுக்கு மாம்பழம் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மாம்பழ சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரையில் இருந்தது. ஆனால் மாம்பழ சீசன் தற்போது ஏப்ரல் மாதத்தில் தான் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    டவுனில் உள்ள பல்வேறு பல மண்டிகளுக்கு மல்கோவா, சேலம் பெங்களூரா, நடு சாளை, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கிறது.

    சேலத்தை சுற்றியுள்ள குப்பனூர், வேப்பிலைப்பட்டி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி உள்பட பல இடங்களில் உள்ள மாந்தோப்புகளில் இருந்து தினமும் 10 டன் அளவிற்கு பல்வகை மாம்பழங்கள் வருகிறது. இதனை மண்டியிலிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். மல்கோவா, சேலம் பெங்களூரா, இமாம் பசந்த் மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், குண்டு வகை மாம்பழம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், நடு சாலை கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து இன்னும் சேலத்திற்கு மாம்பழம் வரத்து தொடங்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் அங்கிருந்தும் மாம்பழங்கள் வரும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். வருகிற 15-ந் தேதிக்குள் மாம்பழம் வரத்து உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கிறோம்.

    60 நாட்களுக்கு மேலாக சீசன் களைகட்டும். வெளியூர் வியாபாரிகள் பல்வேறு மாம்பழங்களை புக்கிங் செய்து வருகிறார்கள். ஆனால் வியாபாரம் இந்த ஆண்டு நல்ல நிலையில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    மாம்பழம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சேலம் மாம்பழம் தான். அந்த அளவுக்கு சேலத்து மாம்பழம் தனிருசியை கொண்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி களை கட்டி உள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு வரகம்பாடி, வாழப்பாடி, பேளூர், கருமந்துறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

    சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு மாம்பழம், நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அங்கு இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சேலம் வ.உ.சி.மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் ஆர்வமாக மாம்பழங்களை அதிக அளவில் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    மாம்பழத்தின் ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கொல்கத்தா, மும்பை உள்பட முக்கிய நகரங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழங்களின் வரத்து குறைந்துள்ளது. சரியாக மழை பெய்யாதது, அதிகப்படியான காற்று வீச்சு உள்ளிட்ட காரணங்களால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 50 டன் விற்பனையாகும் மாம்பழம், தற்போது 25 டன் என பாதிக்கு பாதி குறைந்துள்ளது. வரத்து குறைவாக இருந்தபோதிலும் மாங்காய் விலை உயரவில்லை.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சேலம் பெங்களூரா, இமாம் பசந்த், மல்கோவா ஆகியவை ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரைக்கும், பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும், கிளிமூக்கு, செந்தூரா வகை மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். 
    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான மாம்பழம் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. அதனை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    ராமநாதபுரம்:

    மாம்பழங்கள் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், கொடைக்கானல், நத்தம், திருச்சி, பகுதிகளிலிருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தினமும் 10 டன் வரை விற்பனைக்கு வருகிறது.

    வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்க பல நாட் கள் ஆகும் என்பதால், காய் பருவத்திலே பறித்து வியாபாரிகள் ரகசியமான இடத்தில் பதுக்கி வைத்து கார்பைட் கற்களை பயன்படுத்தி ஒரே நாளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கின்றனர்.

    இந்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாலையோர வியாபாரிகளும் தலைச்சுமை வியாபாரிகளும் மாம்பழத்தின் நிலை தெரியாமல் மொத்த வியாபாரிகளிடம் மாம்பழங்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். எனவே கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைப்பவர்கள், அதனை விற்பனை செய்பவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடக்கம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

    திண்டுக்கல் அருகே நத்தம் செங்குறிச்சி, வேம்பார்பட்டி, சாணார் பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழைப் பொழிவு இல்லாததால் மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து மா விவசாயம் செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து திண்டுக்கல், காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் மழைப் பொழிவு குறைவாக இருந்ததால் மாம்பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் வரத்து குறைந்துள்ளது. ஆனால் முதல் தரமான செந்தூரம் ஓரளவு தாக்குபிடித்து வரத்து அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் செந்தூரம் மாம்பழங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மாம்பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வறட்சி மற்றும் கஜா புயலால் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் ஓரளவு இருந்த போதும் விலை குறைவாகவே கேட்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஒரு கிலோ மாம்பழம் தரத்துக்கேற்ப ரூ.30-ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்து வருகின்றனர். கோடை காலத்தில் பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

    ×