search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ம.க.வினர்.

    போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    • ராமநாதபுரத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா, உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், செயற்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துராமன் வரவேற்றார்,

    புகையிலை, குட்கா, கஞ்சா, மது போதைப்பொருட்களால் இளைஞர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஆயிஷா பேசினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆடிட்டர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைத் தலைவர் (திருவாடானை தொகுதி) முகமது அலி, மாவட்ட துணைத் செயலாளர் திருஞானம், பசுமைத் தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கவின் ராகேஷ், மாவட்ட தலைவர் சத்யா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ராமநாதபுரம் நகரத் தலைவர் ராஜா ரபீக், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் கனகு, மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் ஜாகிர் உசேன்.

    கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், நகர தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க தலைவர் கார்த்திக், ஆர், எஸ், மங்கலம் ஒன்றிய செயலாளர் ஜிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×