என் மலர்
செய்திகள்

மாட்டு வண்டியில் சென்று கலெக்டர் அலுவலகம் முற்றுகை - காங்கிரசார் போராட்டம்
உ.பி.யின் மதுராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPrice #Congress #Protest
லக்னோ:
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உ.பி.யின் மதுரா நகரில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோ, டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #PetrolDieselPrice #Congress #Protest
Next Story