search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"

    • நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
    • ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.

    ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் படுகாயமடைந்து 8 ஆண்டு கோமாவில் இருந்த ராணுவ வீரர் மரணமடைந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் ஹாஜி நகா கிராமத்தில் 2015, நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் இந்திய ராணுவம் ஒரு ஆபரேஷனை நடத்தியது. குப்வாராவின் கலரூஸ் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்னல் கரன்பீர் சிங் நாட் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கர்னல் கரன்பீர் சிங் கோமா நிலைக்குச் சென்றார்.

    தனது கணவர் கண் விழிப்பார் என அவரது மனைவியும், அவரது குழந்தைகளும் 8 ஆண்டாகக் காத்திருந்தனர்.

    இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று கர்னல் கரன்பீர் சிங் நாட் காலமானார். அவர் 20 ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர், கடந்த 1998-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். அங்கு பல்வேறு பிரிவுகளில் 14 ஆண்டு பணிபுரிந்த இவர் அதன்பின் பிராந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை புரிந்தார்.

    கர்னல் கரன்பீர் சிங் நாட் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நாம் பாகிஸ்தானுடன் ஏன் பேசத் தயாராக இல்லை? என கேள்வி எழுப்பினார்.
    • அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என்றார் பரூக் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

    நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.

    அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.

    நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என தெரிவித்தார்.

    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் கண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது ஷபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.

    • ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

    ஜம்மு காஷ்மீர்:

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றனர்.

    • கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.

    லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நிமிடங்கள் இடைவௌியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று லேசான தீவிர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் கூற்றுபடி, இன்று மாலை 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் 4.8 மற்றும் 3.8 தீவிரம் கொண்ட இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு காஷ்மீர் எல்லையில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.
    • கடும் பனிப்பொழிவு காலம் தொடங்குவதற்கு முன் ஊடுருவ அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ஜம்மு:

    தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏவுதளங்களில் சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்களும் ராணுவமும் பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்கிறோம்.

    எல்லையில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர். கண்காணிப்பு பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
    • லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. ஒரு தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்ற போதிலும் ஜம்மு- காஷ்மீர் தலைவர் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். ஆனால், இதே உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது எனத் தெரிவித்துள்ளனர். அது இன்னும் அப்படியே இருக்கிறதா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். ஒருநாள் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதன்பின் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.

    70 ஆண்களுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 200 ஆண்டுகளில் இது மீண்டும் கொண்டு வரப்படலாம். யாருக்கு தெரியும்" என்றார்.

    உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஐந்து பேரில் மூன்று பேர் ஒரே தீர்ப்பையும் மற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார். ஒட்டுமொத்தமாக சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான். அதை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மற்றும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் சடடமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. லடாக்கை யூனியன பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தனர்.

    • மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாகப் பிரித்தது.
    • காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

    16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

    அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
    • நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

    ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் முதல் பெண் இ-ரிக்ஷா ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார் 39 வயதான மீனாட்சி தேவி. கடந்த ஆண்டு இவரின் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை செலவுக்காக மீனாட்சி தேவியின் குடும்ப சூழல் தலைகீழாக மாறிப் போனது. இதன் காரணமாக மீனாட்சி தேவியின் குடும்பம் வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.

    குடும்ப சூழலில் மனம் தளராத மீனாட்சி, நிதி நிலையை எதிர்கொள்ள தானே களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன்படி இ-ரிக்ஷா ஓட்டி வருமானம் ஈட்டலாம் என அதற்கான பணிகளை துவங்கினார். இவரது முடிவுக்கு அவரது உறவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று நண்பர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா கூட்டமைப்பினரும் இவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எனினும், எதிர்ப்புகளை கடந்து செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இ-ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். முதற்கட்டமாக இவரது தொழில் சற்று சுமாராகவே இருந்துள்ளது. ஆனால், தற்போது தினமும் நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

    "முதலில் எல்லாரும் என்ன வேற்றுகிரகவாசி போன்றே பார்த்தனர். ஆனால், எதிர்ப்புகளை கண்டு கவலை கொள்ளாமல், எனது நிலைமையை எப்படி மாற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதால் என்னை யாரும் ஆட்டோ ஸ்டாண்ட்-இல் பார்க்க முடியாது," என்று மீனாட்சி தேவி தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் விவசாயியிடம் காணொலியில் பேசினார்.
    • அப்போது பேசிய மோடி உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களையும், பயனாளிகள் அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக சமீபத்தில் கலந்துரையாடினார்.

    ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி சர்பஞ்ச் பல்வீர் கவுர் பெருமையுடன் கூறினார்.

    அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என தெரிவித்தார்.

    • நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
    • சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

    இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.

    சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×