என் மலர்
இந்தியா

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300 பயங்கரவாதிகள்: எச்சரிக்கும் அதிகாரிகள்
- ஜம்மு காஷ்மீர் எல்லையில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.
- கடும் பனிப்பொழிவு காலம் தொடங்குவதற்கு முன் ஊடுருவ அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஜம்மு:
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏவுதளங்களில் சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்களும் ராணுவமும் பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்கிறோம்.
எல்லையில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர். கண்காணிப்பு பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
Next Story






