search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லடாக்"

    • இந்திய ராணுவத்தின் லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் அறிவிப்பு.
    • மீட்பு நடவடிக்கையின் சில படங்கள் மற்றும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

    யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே மற்றும் ஷியோக் நதிப் பள்ளத்தாக்குக்கு இடையே 17,688 அடி உயரமுள்ள சாங் லா கணவாயில் பனிப்பொழிவின் மத்தியில் சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் மீட்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கையை திரிசூல் பிரிவின் வீரர்கள் மேற்கொண்டதாக இந்திய ராணுவத்தின் லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ப்யூரி கார்ப்ஸ் சமூக வளைதளத்தில் குறிப்பிடுகையில், "அவசர அழைப்பு வந்ததை அடுத்து, திரிசூல் பிரிவின் வீரர்கள் சாங் லாவின் பனிக்கட்டி பகுதியில் போக்குவரத்துத் தடையை அகற்றி, இரவில் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் போராடி, பனிப்பொழிவின் மத்தியில் சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 80 நபர்களுக்கு நிவாரணம் அளித்தனர்" என்றிருந்தது.

    மீட்பு நடவடிக்கையின் சில படங்கள் மற்றும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
    • முதற்கட்ட பேராட்டமே நிறைவு, தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

    லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர்.

    இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான இன்று முடித்துக்கொண்டார்.

    பின்னர் பேசிய அவர், "முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் தொடக்கம்" என்றும் வாங்சுக் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் முன்வைத்தார்.

    பின்னர், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குரிமையை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.

    லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நிமிடங்கள் இடைவௌியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று லேசான தீவிர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் கூற்றுபடி, இன்று மாலை 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் 4.8 மற்றும் 3.8 தீவிரம் கொண்ட இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.

    • நிதியை லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.
    • லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.

    2023-24 நிதியாண்டில் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.36.65 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    யூனியர் பிரதேசம் நிர்வாகம் ரூ.36.65 கோடி நிதியை, அது கிடைத்த நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாட்களுக்குள் லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.

    இந்த காலக்கெடுவிற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

    மேலும் வெளியீடுகளை நிறுத்த மத்திய அரசும் கட்டுப்படுத்தப்படலாம்.

    ரூ.36,65,62,500 கார்பஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் யூனியன் பிரதேசத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள், மாவட்ட சாலைகள் மற்றும் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

    பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.

    பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின், மூன்றாம் கட்டத்தின் கீழ், லடாக்கில் 500 கிமீ கிராமப்புற சாலை வலையமைப்பை அமைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன.

    காயமடைந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், லடாக்கில் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக் விபத்து பற்றிய செய்தியால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என பதிவிட்டுள்ளது.

    • லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் வீரர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

    கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தானர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லடாக்கில் நடந்த சாலை விபத்தில் எங்கள் வீரம்மிக்க வீரர்களை இழந்தோம். இந்த துக்க நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நிற்கிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • ராணுவ வாகனம் லடாக் அருகே சென்ற போது ஆற்றில் கவிழந்துள்ளது.
    • விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் இருந்துள்ளனர்.

    ராணுவ வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியதால், நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் (எட்டு ஜவான்கள், ஒரு ஆணையர்) பயணம் செய்ததாகவும், இவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. 

    • இந்தியா-சீனா இடையே எல்லை பகுதிகளில் பிரச்சினை இருந்து வருகிறது.
    • புதிய சாலையானது இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே எல்லை பகுதிகளில் பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லையையொட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சீனாவை எதிர்கொள்வதற்காக கிழக்கு லடாக் பகுதிகளில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தவும், அப்பகுதியில் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கிழக்கு லடாக்கில் 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. இந்த சாலை பாங்காங்த்சோவின் தெற்கு பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுசுல் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக அமைய உள்ளது. இது இந்தோதிபெத் எல்லை பகுதியில் முக்கிய சாலையாகவும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைக்கும் பணி கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் இந்த சாலை அமைப்பு திட்டத்தை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    கிழக்கு லடாக் பகுதியில் இருந்து நாட்டின் 3 முக்கிய சாலைகள் இணைக்கும் வகையில் இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை கிட்டத்தட்ட சிந்து நதியை ஒட்டியே செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. சுசுல் பகுதியானது பாங்காங் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதே நேரத்தில் டெம்சோக் பகுதியானது இந்திய-சீன எல்லையில் ஜீரோ கோடு வழியாக இந்தியாவின் கடைசி பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இந்த சாலை அமைப்பதற்கான அனுமதியை 2016-ம் ஆண்டு அப்போதைய ஜம்மு-காஷ்மீர் அரசு வழங்கியது. இந்த திட்டம் யூனியன் பிரதேசத்தில் ஷாங்தாங் குளிர் பாலை வன வன விலங்கு சரணாலயம் வழியாக செல்கிறது.

    2017-ம் ஆண்டு இந்த சாலை அமைக்கும் திட்டம் தேசிய வன விலங்கு வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வாரியம் சாலை பணிக்கான ஒப்புதலையும் வழங்கியது. இதைத்தொடர்ந்து 2018-ல் எல்லை சாலைகள் அமைப்பு மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கி உள்ளது.

    இந்த புதிய சாலையானது இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லடாக்கிற்கு மேலும் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.
    கார்கில்:

    லடாக் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும், மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட 4  முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6ம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். லடாக்கில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளூர் இளைஞர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்த வேண்டும், லடாக்கிற்கு மேலும் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

    ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்கத்தின் லே நகர உயர் அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) கூட்டாக இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மார்ச் மாதம் லே மற்றும் கார்கில் ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, இந்த இரண்டு அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இதில், ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்க உயர் அமைப்பில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர், அந்த அமைப்பு முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை எழுப்பியதால் பாஜக ஒதுங்கியது. 

    கேடிஏ மற்றும் ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்கத்தின் உயர் அமைப்புக்கு வெளியே உள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே. அந்த கட்சியின் உள்ளூர் தலைமை, கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் கூட்டுக் கூட்டணியின் அங்கமாக மாறும் என கேடிஏ தலைவர் கர்பாலாய் நம்பிக்கை தெரிவித்தார்.
    ×