search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா"

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணை தலைவி ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா அன் பழகன், நித்யா, ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், பூலோகராஜா, ஆட்லின் சேகர், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியா ளர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை அய்யப்பன் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை 3 மாத காலம் அமலில் இருக்கும்.

    இந்த சீசன் காலத்தை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு சுகாதாரம், கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த சீசன் காலங்களில் கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை சிலுவைநகர் வழியாக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதியில் உள்ள பயோ மைனிங் பகுதியில் நிறுத்து வதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் ரூ.5 கோடி செலவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்ப ணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
    • மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர்.

    கடலூர்:

    சென்னை மற்றும் புதுவைக்கு ஏராளமான வெளிநாட்டினர் நேரில் வருகை தந்து, அதன் பின்பு சிதம்பரம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் வழியாக சென்ற வெளிநாட்டினர் கடலூர் உழவர் சந்தைக்கு சென்றனர். பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த பழ வகைகளை வாங்கி ருசித்து பார்த்தனர்.

    காய்கறிகள் வாழைத்தார்கள் போன்றவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை நடப்பது குறித்தும் வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை வெளிநாட்டினருடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டு வெளிநாட்டினருக்கு கூறினார். மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர். 

    • வட்டகோட்டைக்கு 4 ஆயிரம் பேர் உல்லாச படகு சவாரி
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரி யில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னி யாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகு மரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 34 ஆயிரத்து 175 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். வாரத்தின் இறுதி விடுமுறை நாளான கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 100 பேரும், 22-ந்தேதி 9 ஆயிரத்து 925 பேரும், ஆயுத பூஜை தினமான 23-ந்தேதி 10 ஆயிரத்து 100 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையை யொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 6 ஆயிரத்து 50 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    அதேபோல கடந்த 4 நாட்களாக வட்ட கோட்டைக்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி பட்டுக்கோட்டைக்கு கடந்த 4 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.
    • அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் விசா கட்டாயம் இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்தும் சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.

    நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே இனி இந்த 7 நாடுகளில் இருந்தும் இலங்கை செல்ல விசா தேவையில்லை.

    பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மூலம் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    • ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

    இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதை யொட்டி கடந்த 2 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. இதற்கிடையில் கன்னியா குமரி கடல் நடுவில்அமைந் து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகுபழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை கரையேற்றி ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து குகன் படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கடந்த 5-ந்தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு சீரமைக்கும் பணிநடந்தது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று சின்ன முட்டம் துறைமுகத் தில் உள்ள படகு கட்டும் தளத் தில் இருந்து இறக்கி கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி குகன்படகு புதுப் பொலிவுடன் நேற்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.

    இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    • உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்லும் மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்.
    • ஆண்டிபட்டி அருங்காட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்லும் மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்.

    கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் சுற்றுலா குறித்து கலாச்சார அரசியல் மற்றும் பொருளா தார தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி,

    ஆண்டிபட்டி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடு திகளில் தங்கி பயிலும் 90 பள்ளி மாணவ, மாணவிகள், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 90 பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என மொத்தம் 200 பேர் 3 பஸ்களில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்வதற்கான பயணத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ஆண்டிபட்டி அருங்கா ட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட்டு புதிய பஸ் நிலையத்தில் நிறைவடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    • கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், சுற்றுலாத் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் தொடங்கியது. இந்த பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுலா நாள் 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சுற்றுலாவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் 6ம் வகுபபு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ, மா ணவிகள் கிருஷ்ணகி ரியிலுள்ள அரசு அருங்கா ட்சியகம், கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்க ளுக்கு அழைத்து செல்லப்ப ட்டுள்ளனர்.

    சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிடும் சுற்றுலா இடங்களை சிறு குறிப்பு எடுத்து, சுற்றுலா குறித்து சிறப்பு கட்டுரையாக எழுத வேண்டும்.

    சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும், மகிழ்ச்சி யாகவும், பாது காப்பான முறையில் தங்க ளின் பயணம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஆதிதி ராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 2மாதங்களாகதிருவள்ளு வர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப் பட்டவில்லை.

    இதற்கிடையில் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை கரையேற்றி ரூ.10லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து குகன் படகு கன்னியாகுமரி யில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு குகன் படகு புதுபொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன்பிறகு தசரா விடுமுறை சீசனையொட்டி அடுத்த வாரம் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர்மண்டபத்து க்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப் படலாம் என்று தெரிகிறது.

    • திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
    • பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து விவேகா னந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்கு வரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டில் பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. சொத்தவிளை பீச், வட்டக்கோட்டை பீச், முட்டம் பீச் பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர்கோவில் மாநக ராட்சி வேப்பமூடு பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், நகர மன்றத் துணைத் தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அடிப்படை தேவைகள்

    கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேதாச்சலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

    5-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும்.

    இந்த கைலாசநாதர் ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அதிசய எண்கோண வடிவ தெப்பக்குளமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

    சுற்றுலா தலம்

    அதேபோல் தாரமங்கலம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள தாரமங்கலம் ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி தமிழக அரசின் காவிரி உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு உபரி நீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாத காரணத்தினால் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி, தூர்வாரி தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடுகள் செய்து நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஏரியை சுற்றுலா தலமாக்கும் முயற்சிக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தனர்.

    சுகாதார பணிகள்

    14-வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் பேசும்போது, மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்தமாறு கோரிக்கை விடுத்தார்.

    4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய பரிசீலனை செய்து குறைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
    • இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.

    சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.

    குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.

    அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.

    இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"

    போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.

    ×