search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரியில்"

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணை தலைவி ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா அன் பழகன், நித்யா, ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், பூலோகராஜா, ஆட்லின் சேகர், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியா ளர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை அய்யப்பன் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை 3 மாத காலம் அமலில் இருக்கும்.

    இந்த சீசன் காலத்தை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு சுகாதாரம், கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த சீசன் காலங்களில் கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை சிலுவைநகர் வழியாக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதியில் உள்ள பயோ மைனிங் பகுதியில் நிறுத்து வதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் ரூ.5 கோடி செலவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்ப ணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • வாள்-வில் அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது.
    • ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷபூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது. இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான விஜயதசமி நாளான இன்று (செவ்வாய்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகளும் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்பு போன்ற ஆயுதங்களையும் அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1-மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது.

    இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும், கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைஅணிவகுத்து சென்றது. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர். இதனையடுத்து கோவில் ஊழியர் வாள் ஏந்திய படியும், சுண்டன்பரப்பை பரம்பரை தர்மகர்த்தா வில் -அம்பு ஏந்திய படியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரள புகழ் தையம் ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்குபகவதி அம்மன், பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது.

    அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள காரியக்காரன் மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும், அஞ்சுகிராமம் கன்னியாகுமரி சாலையிலும் இன்று பகல் 11 மணிக்கு பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
    • போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வெளியேற்றம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து இடையிடையே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் மதியம் 12.30 மணியில் இருந்து "திடீர்"என்று இடி-மின்ன லுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை பிற்பகல் 2.30 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. அதன்பிறகு மாலை வரை விட்டு விட்டு சாரல் போன்று மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே பயங்கர இடி முழக்கமும், கண்ணை பறிக்கும் வகையில் "பளிச், பளிச்"என்று மின்னலும் ஏற்பட்டது. இந்த கனமழையினால் தெருக்களில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கோவில் மேலாளர் ஆனந்த் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கையின் காரணமாக திருக்கோவில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் கோவிலுக்குள் தேங்கி நின்ற மழையின் நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத் துக்குள் அந்த மழை வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தனர். தொடர்ந்து பெய்த இந்த கனமழையினால் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜில் உள்ள அறைகளி லேயே முடங்கி கிடந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.

    • சீரமைக்க அறங்காவலர் குழு தலைவர் நடவடிக்கை
    • 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மெயின்ரோட்டில் காந்தி மண்டபம் அருகில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறைக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. அரசு அருங்காட்சியகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை இடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த இடத்துக்கு மாதம்தோறும் அருங்காட்சியகத்துறை பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு ரூ.9ஆயிரத்து 795 வாடகை செலுத்தி வருகிறது. இந்த அரசு அருங்காட்சியகத்தில் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல் சிலைகள், திமிங்கலத்தின் எலும்புக் கூடு, டால்பின் மீன் மற்றும் அதன் எலும்புக்கூடு, காடுகளில் வன மிருகங்கள் வசிக்கும் காட்சி, கடல் ஆமை, பழங்கால உலோகப்பொருட்கள், தோல்பாவை கூத்தில் பயன்படுத்தப்படும் தோல் பொம்மைகள், குமரி மாவட்டத்தில் முக்கியமாக பயிரிடப்படும் ரப்பர் தோட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பயன்படுத்தப்பட்டு வந்த பழங்கால தேர் மற்றும் கருட வாகனம் போன்றவை காட்சியகப்ப டுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.

    இந்த அரசு அருங்காட்சியகம் சமீபத்தில் பெய்த கன மழையினால் தண்ணீர் ஒழுகி அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த அரிய பொருட்கள் நாசமடைந்து உள்ளன. இதைத்தொடர்ந்து மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியகத்தை சீரமைக்க வேண்டும் என்று அருங்காட்சியத்துறை அதிகாரிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். அதன் பயனாக குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தை நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 1 மணி நேரம் தாமதம்
    • காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    கன்னியாகுமரி:

    பவுர்ணமியையொட்டி இன்று காலையில் கன்னியா குமரியில் "திடீர்" என்று கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பா கவும் காணப்படுகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறை நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர். இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொ டர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகா னந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது
    • ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்

    நாகர்கோவில் :கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் லிங்கேஸ் வரி, மகேஷ், சுஜா, இந்திரா,ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகா யசர்ஜினாள், சகாயஜூடு அல்பினோ, பூலோக ராஜா, அட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் பேரூராட்சி பொது நிதியில் இருந்தும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்.

    தெருக்களில் உள்ள மின்விளக்குகளை பரா மரித்தல், அலங்கார தரைத்தளம் அமைத்தல், கழிவுநீர் ஓடை சீரமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்ட பணிகளை நிறை வேற்று வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு வரவு-செலவு கணக்குகள் வாசித்து அங்கீகரிக்கப்பட்டன.

    • கன்னியாகுமரியில் 5-வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு
    • 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் பவுர்ண மியையொட்டி கடந்த 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்று 5-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங் கடல் மற்றும் அர பிக்கடல் பகுதியில் கடல் கொந்த ளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப் பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயி லில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவே கானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்த னர். கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இன்று 5-வது நாளாக பாதிக்கப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நிறுத்தம்
    • கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப் பாகவும் காணப்படுகிறது. இன்று 4-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற் றும் அரபிக்கடல்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மாணவ-மாணவிகளை இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ் கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது பஸ்சின் முன்பக்க என்ஜின் பகுதியில் "திடீர்" என்று"டமார்" என்ற சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து அந்த என்ஜின் பகுதியில் "திடீர்"என்று தீப்பிடித்து ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

    உடனே அந்த பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். அந்த பஸ்சில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதன்பிறகு அந்த பஸ்சின் டிரைவர் அந்த பஸ்சில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் கன்னியா குமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பால கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சின் முன் பகுதியில் பிடித்த தீயை டிரைவரும் பொதுமக்களும் சேர்ந்து முழுமையாக அணைத்து விட்டனர். இருப்பினும் மேலும் அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.

    இதனால் தீ அணைக்கும் படை வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது மாணவ-மாணவிகள் பஸ்சில் இருந்து தப்பி வெளியே ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். பள்ளிக்கூட பஸ்சில் தீ பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் ஆத்திரம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் ராமலட்சுமி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பால முத்து (வயது 45). இவர் கன்னியாகுமரியில் போட்டோ எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் (18). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பாலமுத்து தனது மகன் கணேசிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இரு வருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் தனது தந்தை பாலமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பாலமுத்துவின் இடது கண் புருவம், இடது வயிறு பகுதியில் கத்தி குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி துடிதுடித்து க்கொண்டிருந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னி யாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொட ர்பாக கணேசை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • கடலில் ஆனந்த குளியல் போட்டனர்
    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரி, மே.20-

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்ட னர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியா குமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழு கை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலா தலங்க ளான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, விவேகா னந்தபுரத்தில் உள்ள ராமா யண தரிசன சித்திர கண் காட்சி கூடம், பாரத மாதா கோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடு முறை நாளான இன்று சுற்றுலா தலங்கள்களை கட்டி உள்ளது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

    அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.

    ×