search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா"

    • அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கவுகாத்தி:

    பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.

    இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
    • கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பஸ், சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.

    மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஹோட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.

    சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை விரைவாக செலுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.

    கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணைதள பக்கத்தில் முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என ஈரான் அறிவித்தது.
    • விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

    சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எக்காரணம் கொண்டும் இதை நீட்டிக்க முடியாது.

    வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.

    சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.

    அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெறவேண்டும்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓய்வுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவார்கள்
    • உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பித்தான் உள்ளது

    கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள முக்கிய சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபார் (Zanzibar).

    இப்பகுதியின் வருவாயில் 90 சதவீதம், இந்திய கடல் பகுதியில் அழகான கடற்கரைகளும் பாரம்பரியமும் உள்ள இதன் தீவுகளில் ஓய்வு எடுக்க வரும் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    கோடை காலம் நெருங்கும் நிலையில், உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் ஜான்ஜிபாருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவது அங்கு வழக்கமான ஒன்று.

    சமீப சில மாதங்களாக இப்பகுதியில் மதுபானங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.


    பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மதுபான தட்டுப்பாட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலையில் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மதுபானம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால் வரும் மாதங்களில் பயணிகள் வருகை குறைந்து விடும் என விடுதி உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

    ஜான்ஜிபார் தீவுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அங்கு மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைகளுக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.

    இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் $12000 ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறை.

    புதிதாக 3 இறக்குமதியாளர்களுக்கு உரிமம் வழங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் தொடரும் சிக்கலில் இறக்குமதியாக வேண்டிய மதுபானங்கள் வருவதில்லை.

    உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுலாவையே நம்பி உள்ளதால் இந்த நிலைமை அவர்களை அச்சுறுத்துவதாகவும், அரசு விரைந்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    கடந்த 2023ல், அதற்கு முந்தைய வருடங்களை விட ஜான்ஜிபாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 16 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    • மாணவர்கள் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
    • விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்.

    குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

    மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

    • பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.
    • உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய வார தொடர் நிகழ்வுகளின் நிறைவாக இன்று இந்திய சுற்றுலாவுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நடைபெற்ற பாரம்பரிய சுற்றுலா நிகழ்வினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

    இந்த சுற்றுலாவில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், இன்டாக் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு பெற்ற இடங்களான திருப்பா லைத்துறை நெற்களஞ்சியம், திருப்புள்ளமங்கை கோவில், திருவையாறு காவிரி படித்துறை, திரிச்சினம்பூண்டி கோவில், ஒரத்தநாடு முத்தாம்பால் சத்திரம், மனோஜிபட்டி உப்பரிகை, ராஜா கோரி கைலாஷ் மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.

    இந்த பாரம்பரிய சுற்றுலாவினை வரலாற்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ், தொல்லியல் பாதுகாவலர் முனைவர் பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் வழி நடத்தினர்.

    • தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
    • சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது.

    தக்கலை, நவ.24-

    தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையின் காரணமாக உதயகிரி கோட்டை பகுதி யில் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது. மேலும் மான்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி யிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு நின்ற மான்கள் கடும் அவதிக்கு ஆளானது. சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மான்களில் நின்று கொண்டிருக்கும் பகுதியில் இருந்து தண்ணீர் மட்டும் சிறிது வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறுவர் பூங்கா மற்றும் செல்பி பாயிண்ட் பகுதியில் தண்ணீர் வடியாத நிலை யிலேயே இருந்து வருகிறது. இன்று காலையில் உதயகிரி கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    ஆனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவ டிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண் ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா இயக்குபவர் , பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆப்ரேட்டர் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

    தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். அப்படி முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு 5 நாட்களுக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
    • விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் 20 விவசாயிகள் மாநிலங்களுக்கிடையேயான பட்டறிவு சுற்றுலாவிற்கு பேருந்து மூலம் அழைத்துசெல்லப்பட்டனர்.

    ஒழுங்குமுறை விற்ப னைக்கூட நடைமுறைகள் மற்றும் மின்னனு தேசிய வேளாண் சந்தை தொடர்பாக பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் 5 நாட்களுக்கு ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மிளகாய் சந்தையான ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்துசெல்லப்பட்டனர்.

    அங்கு ஆந்திராவில் பயிரப்படும் மிளகாய் இரகங்கள், பயிரிடப்படும் பருவங்கள் பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை படுத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் நேரில் கண்டு விவரங்கள் கொண்டு அறியபெற்றனர்.

    விவசாயிகள் மிளகாயை எவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    சந்தைப்படுத்தும் முறைகள்தரம் நிர்ணயம், விளைபொருளுக்கு ஏற்ற விலை நிரணயம் செய்தல் மின்னனு தரம் நிர்ணயம், தர சான்று பெறுதல் தேசிய வேளாண் சந்தை இணைய தளத்தில் பதிவு செய்தல், வியாபாரிகளை எவ்வாறு தொடர்பு கொள்ளுதல், விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினம் தங்குமிடம் மற்றும் இந்த சுற்றுலாவிற்கு உணவு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

    விவசாயிகளை பாபநாசம் வட்டாரம் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி மற்றும் பாபநாசம் தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் திரிபுரசுந்தரி விவசாயிகளை அழைத்து சென்றிருந்தனர்.

    ×