என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மார்ச் 31-ந்தேதி வரை விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா செல்ல அனுமதி- இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு அங்கீகாரம்
- சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.
- அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் விசா கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்தும் சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே இனி இந்த 7 நாடுகளில் இருந்தும் இலங்கை செல்ல விசா தேவையில்லை.
பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்