search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா
    X

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

    • கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், சுற்றுலாத் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் தொடங்கியது. இந்த பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுலா நாள் 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சுற்றுலாவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் 6ம் வகுபபு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ, மா ணவிகள் கிருஷ்ணகி ரியிலுள்ள அரசு அருங்கா ட்சியகம், கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்க ளுக்கு அழைத்து செல்லப்ப ட்டுள்ளனர்.

    சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிடும் சுற்றுலா இடங்களை சிறு குறிப்பு எடுத்து, சுற்றுலா குறித்து சிறப்பு கட்டுரையாக எழுத வேண்டும்.

    சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும், மகிழ்ச்சி யாகவும், பாது காப்பான முறையில் தங்க ளின் பயணம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஆதிதி ராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×