என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா
- கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், சுற்றுலாத் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் தொடங்கியது. இந்த பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக சுற்றுலா நாள் 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சுற்றுலாவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் 6ம் வகுபபு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ, மா ணவிகள் கிருஷ்ணகி ரியிலுள்ள அரசு அருங்கா ட்சியகம், கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்க ளுக்கு அழைத்து செல்லப்ப ட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிடும் சுற்றுலா இடங்களை சிறு குறிப்பு எடுத்து, சுற்றுலா குறித்து சிறப்பு கட்டுரையாக எழுத வேண்டும்.
சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும், மகிழ்ச்சி யாகவும், பாது காப்பான முறையில் தங்க ளின் பயணம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஆதிதி ராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்