search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலைமோதியது"

    • தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
    • நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொது மக்கள் ஜவுளிகடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் வரும் அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது . இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.

    இதே போல கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் குவியும் பெண்கள் தங்களுக்கு பிடித்த தங்கம், வைர நகைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். பட்டாசு கடைகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் குவிந்துள்ளனர். அவர்கள் புதிதாக கு வித்து வைக்கப்பபட்டுள்ள புதிய ரக பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதே போல மளிைக கடைகளிலும் பெண்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய தேவையான எண்ணை, மாவு வகைகள் மற்றும் மளிகை பொருட்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள இனிப்பு கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.

    சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரில் தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதலே தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.

    இதே போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் விடுமுறை எடுத்து கொண்டு தீபாவளி பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சென்னை, பெங்களூரு, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை உள்பட பல ஊர்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

    இதே போல சேலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    • சுற்றுலா தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    ஆயுத பூஜை விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்க னவே கடந்த 8 நாட்களுக்கு முன்பு நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வீடு களிலும், கோவில்களிலும் வழிபாடு நடத்தி வருகி றார்கள்.

    நாளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேப்பமூடு பகுதிகளில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்க ளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயுத பூஜை யையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு போலீ சார் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளனர். நிகழ்ச்சிகள் நடத்தும்போது போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    ஆயுத பூஜை விழா தொடர் விடு முறையையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். எனவே சுற்றுலா தலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற் கொண்டார். அங்கு பாதுகாப்பை அதி கரிக்கவும் அவர் அறி வுறுத்தினார்.

    வெளியூர்களில் இருந் தும் பஸ்கள் மற்றும் ரெயில்க ளில் ஏராளமான பொது மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ள னர். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி வரு கிறது. பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் போலீ சார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். கடை வீதிக ளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பூஜைக்கு தேவை யான காய்கனிகளை பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    எனவே மார்க்கெட்டு களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர் கோவில் அப்டா மார்க்கெட், கனகமூலம் சந்தை மற்றும் மார்த்தாண் டம், தக்கலை, குளச்சல், குலசேகரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. வெள்ள ரிக்காய், பீன்ஸ், சேனை, உள்ளி, பல்லாரி விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் வாழைத் தார்கள் விலையும் இன்று அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடை வீதிகளில் சந்தேகப்ப டும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் போலீ சாருக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    ஓடும் பஸ்களில் பெண் கள் கூட்டத்தை பயன் படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வரு கிறார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையு டன் இருக்குமாறு அறிவுறுத்தி யுள்ளனர்.

    • திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
    • பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து விவேகா னந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்கு வரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டில் பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. சொத்தவிளை பீச், வட்டக்கோட்டை பீச், முட்டம் பீச் பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர்கோவில் மாநக ராட்சி வேப்பமூடு பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    • நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல்...

    மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுப முகூர்த்த நாள் ஆகும். இதனால் சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் இரவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து ஏறினர்.

    ரெயில்களில் கூட்டம் அலைமோதியது

    இதேபோல் சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயிலில் முன்பதிவு இல்லாத ெபாது பெட்டிகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

    அதேப்போல் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் வெளியூரில்களில் இருந்து சேலத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்வோர் எண்ணிக்கையும், வெளியூர்களில் இருந்து சேலத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி இருந்தது.

    குறிப்பாக இன்று சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதைத்தவிர விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை யொட்டி பொருட்கள் வாங்குவ தற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தபடி இருந்தனர். அதே போல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ரெயில்கள், பஸ்கள் மூலமாக சேலம் வந்தபடி இருந்தனர்.

    இதேபோல் கொளத்தூர், மேட்டூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி, நங்கவள்ளி, ஏற்காடு, ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, வீராணம், வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம் உள்பட உள்ளூர் பகுதி மக்களும் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவதற்கு பொருட்கள் வாங்கவும், வெளியூர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் குவிந்ததால் சுவர்ணபுரி, மெய்யனூர் ரோடு, புதிய பஸ்நிலையம், சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் பஸ் நிறுத்தம், கடைவீதி, பழைய பஸ் நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, குகை, அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றது.

    கண்காணிப்பு

    போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தியும், கண்காணித்தப்படியும் உள்ளனர். கூட்டம் அதிக மாக உள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாகர்.சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்
    • ஆவணி முதல் ஞாயிறு

    நாகர்கோவில் :

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழ மை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமை யான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாரா தனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராள மான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண் கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. இத னால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளா கத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர் கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவ தும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சி யளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதான மும் வழங்கப் பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந் தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களை யும் 4 சக்கர வாகனங்களை யும் நிறுத்தி சென்று இருந்த னர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாக ராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    • இன்று ஆடி 2-வது செவ்வாய்
    • சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்

    கன்னியாகுமரி :

    அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடி வீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வை யாரம்மன் கோவில், பெரு மாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில்கள் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 2-வது செவ்வாயையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவி லில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழி பட்டார்கள். கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழி பாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விசுவரூப தரிசன மும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு உஷ பூஜையும், உஷ தீபாராதனை யும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு அம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக் கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாரா தனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜை நடக்கிறது.

    பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந் தந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • பள்ளிகள் திறக்கப்பட்டதால் வெறிச்சோடி கிடந்த கடற்கரை களை கட்டியது
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கூட்டம்

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொ டர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட் டது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகா னந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக்கண்காட்சி கூடம், பாரதமாதாகோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வட்ட கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்தனர். மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப் பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படை யெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா விமர்சையாக கொண்டாடப்படும்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயுத பூஜை விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். கோவில்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் நகரப் பகுதியில் ஆயுத பூஜை விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கு கார் வேன் ஓட்டுநர்கள் தயாராகி வருகிறார்கள்.

    வேப்பமூடு வடசேரி ராணி தோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களிலும் ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை மார்த்தாண்டம் குழித்துறை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை விழா கொண்டாட்டத்தின்போது ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது பூசணிக்காய் சாலையில் உடைக்க க்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆயுத பூஜையை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஆயுத பூஜையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு இன்று கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் அவல் பொரி கொண்டக்கடலை வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்திருந்தனர்.

    இதனால் கடைவீதிகள் களை கட்டியிருந்தது. தக்கலை குளச்சல் அஞ்சு கிராமம் இரணியல் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் நாகர்கோவில் நகரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் காய்கறிகளின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்பட்டது.

    வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு இன்று உயர்ந்திருந்தது.செவ்வாழை,கதலி போன்ற வாழைப்பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆயுத பூஜையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 4 சப் டிவிஷன்களிலும் பாது காப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டு உள்ளார். சுற்றுலா தலங்க ளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1013 விவசாயிகள், பல்வேறு வகையான 4924 காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 247.293 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 55,282 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.69, 11, 292 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.

    இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர். இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

    ×