search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டத்திலுள்ள"

    • திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
    • பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து விவேகா னந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்கு வரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டில் பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. சொத்தவிளை பீச், வட்டக்கோட்டை பீச், முட்டம் பீச் பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர்கோவில் மாநக ராட்சி வேப்பமூடு பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    ×