search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகளுக்கு"

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணை தலைவி ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா அன் பழகன், நித்யா, ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், பூலோகராஜா, ஆட்லின் சேகர், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியா ளர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை அய்யப்பன் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை 3 மாத காலம் அமலில் இருக்கும்.

    இந்த சீசன் காலத்தை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு சுகாதாரம், கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த சீசன் காலங்களில் கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை சிலுவைநகர் வழியாக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதியில் உள்ள பயோ மைனிங் பகுதியில் நிறுத்து வதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் ரூ.5 கோடி செலவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்ப ணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
    • இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் 5-ந் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தினமும் தடுப்பணையில் தண்ணீர் அதிமாக கொட்டி யதால் தொடர்ந்து பொது மக்கள் அணைக்கு செல்ல கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினமும் பொது மக்கள் வந்து ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறை ந்தது.

    இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனால் இன்று காலை குறைந்த அளவே பொது மக்கள் வந்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். அவர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.

    ×