என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவ்தாஸ் மீனா"
- கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார்.
- 20,000 அரசு பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - தலைமை செயலாளர்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார். இதே போன்று விருதுநகரிலும் பேருந்தில் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு துறையானது ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்த பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
- வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
- ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும்.
- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் ஒரு நாள் கிராமங்களில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
"அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகிறதா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றதா? என்பதை களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.
இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,
"மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு எந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
"தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்த முதலமைச்சர் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்," என்று தெரிவித்து இருந்தார்.
இது, 'மக்களிடம் செல்' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
நானும், அரசு எந்திரமும் களத்திற்கு வருகிறோம். குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் நாளை முதல் மாவட்ட கலெக்டர்கள் வட்ட அளவில் நேரடியாக கிராமத்துக்குச் சென்று 24 மணி நேரம் தங்கியிருந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய உள்ளனர்.
இது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
- நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
சென்னை:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர்.
- சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம்:
பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப் படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.
- வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.
வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வழக்கமாக மழை வெள்ளத்தால் பாதிக்காத வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது.
கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி என பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
வெள்ளம் படிப்படியாக குறைந்ததையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதனால் விமானம், ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர் உள்ளிட்ட சில இடங்களுக்கும் தற்போது போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருந்தாலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று 7-வது நாளாகவும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் பணி இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைந்துள்ள சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.
ரெயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
- வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
- கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார்.
அப்போத அவர் பேசியதாவது:-
தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.
தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.
- தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.
சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
* மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
* தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.
* தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது.
* வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
* மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.
* தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.
* ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அடைந்தனர்.
* 300 பேர் ரெயில் ஸ்ரீவைகுண்டம் நிலையத்திலும், 200 பேர் அருகே உள்ள பள்ளி கட்டிடத்திலும் உள்ளனர்.
* தென்மாவட்டங்களில் மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
* மீட்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கின்றன.
* கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
* சென்னையில் இருந்து 10 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருலுவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கால செயல்பபாட்டு அறை
* ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது.
* தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை.
* நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
* வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
* வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.
* மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது.
* 12 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.
* சேவை மைய எண் 1070 என்ற எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* நெல்லை மாவட்டத்தில் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* முக்கிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* 3,732 புகார்கள் இதுவரை வந்துள்ளது. 170 வரை புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.
இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.
- சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது.
18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
சென்னையில் 77 இடங்களில் மின் தடை நீடிக்கிறது. மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.
சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும்.
நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஏரிகள் பாதிக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நெடுஞ்சாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் நீங்கிய பிறகு சேத மதிப்பு மறு ஆய்வு செய்யப்படும்.
திருப்புகழ் கமிட்டி அடிப்படையில் குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு தண்ணீர் தேங்கும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கும் நிலை இல்லை.
மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். விரைவில் மத்திய குழு வரும் என தெிர்பார்க்கிறோம்.
மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.7 கோடி மதிப்பில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
அப்போது பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் 4ஆம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து திருப்பூர் குடிநீர் திட்டம் கோவை தொண்டாமுத்தூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட பணிகளையும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மண்டல இயக்குநர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
- அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் சேவைத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க மண்டல வாரியாக குறுகிய கால ஒப்பந்தம் மூலம் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் சாலை வெட்டுக்கள் முடிக்கப்பட உள்ள இடங்களில் சீரமைக்கப்படவுள்ள 140 சாலைகளிலும் மற்றும் சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 277 சாலைகளிலும் அக்டோபர் 10-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்; இதுதவிர வேறு எந்த சாலை வெட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
மேலும், கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், சேவைத் துறையினரால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதை சிறந்த முறையில் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை புதிய சாலை வெட்டுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்; சாலை சீர் அமைக்கும் பணிக்கு கொண்டுவரும் வாகனங்களுக்கு பகல் நேரங்களில் போக்குவரத்து துறையில் அனுமதி அளிக்க வேண்டும்; எருக்கஞ்சேரி சாலையில் மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா வரை மேற்கொள்ளப்படும் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
மேலும், முகலிவாக்கம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அவை முடிக்கப்பட்ட இடங்களில் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; ஆற்காடு சாலை, ஓஎம்ஆர் சாலை சீரமைக்கும் பணிகள், கொட்டிவாக்கம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், 100 அடி உள்வட்ட சாலையில் மேற்கொண்ட சாலைவெட்டு பணிகள் முடிவடைந்ததாகவும், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்