search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிஞர் அண்ணா"

    • ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும்.
    • தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் ஒரு நாள் கிராமங்களில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    "அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகிறதா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றதா? என்பதை களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

    இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,

    "மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு எந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    "தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்த முதலமைச்சர் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்," என்று தெரிவித்து இருந்தார்.

    இது, 'மக்களிடம் செல்' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    நானும், அரசு எந்திரமும் களத்திற்கு வருகிறோம். குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருந்தது.

    அதன் அடிப்படையில் நாளை முதல் மாவட்ட கலெக்டர்கள் வட்ட அளவில் நேரடியாக கிராமத்துக்குச் சென்று 24 மணி நேரம் தங்கியிருந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய உள்ளனர்.

    இது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    • 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும்
    • பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    நாகர்கோவில், அக்.1-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான அறி ஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வருகிற 7-ந்தேதி காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடை பெறவுள்ளது.

    இந்த போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 8 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    இப்போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு நாகர்கோவில் அண்ண விளையாட்டரங்கத்தில் தொடங்கி, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக டதி பள்ளி சந்திப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக செட்டி குளம் சந்திப்பு, சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ண விளையாட்டரங்கம் வரையும், 17 வயது முதல் 25 வயதிற்குட்ட பெண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் வரையும் நடத்தப்படவுள்ளது.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக டதி பள்ளி சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக செட்டிகுளம் சந்திப்பு, இந்து கல்லூரி வழியாக பீச்ரோடு சந்திப்பு, கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்ட ரங்கம் வரையும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் வரையும் நடத்தப்படவுள்ளது.இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தங்களின் பெயரினை பதிவு செய்து, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் அவர்களின் ரத்தப்பிரிவு போன்ற தகவல்களை அளித்து வழங்கப்படும் உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 7-ந்தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெறும், போட்டி யில் கலந்து கொள்பவர்கள் காலை 5.20 மணிக்கு தங்களின் வருகையினை உறுதி செய்ய வேண்டும்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்க ளுடன் முதல் பரிசுத்தொகை ரூ.5000, 2-ம் பரிசுத்தொகை ரூ.3,000, 3-ம் பரிசுத்தொகை ரூ.2000 மற்றும் 4-ம் பரிசு முதல் 10-ம் பரிசுத்தொகை வரை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்படவுள்ளது.

    மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் பரிசுத்தொகையினை அவர்களின் வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கப்படும். ஆகவே வெற்றி பெற்றவர்கள் தங்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலினை கண்டிப்பாக கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×