search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது
    X

    நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது

    • 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும்
    • பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    நாகர்கோவில், அக்.1-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான அறி ஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வருகிற 7-ந்தேதி காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடை பெறவுள்ளது.

    இந்த போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 8 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    இப்போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு நாகர்கோவில் அண்ண விளையாட்டரங்கத்தில் தொடங்கி, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக டதி பள்ளி சந்திப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக செட்டி குளம் சந்திப்பு, சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ண விளையாட்டரங்கம் வரையும், 17 வயது முதல் 25 வயதிற்குட்ட பெண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் வரையும் நடத்தப்படவுள்ளது.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக டதி பள்ளி சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக செட்டிகுளம் சந்திப்பு, இந்து கல்லூரி வழியாக பீச்ரோடு சந்திப்பு, கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்ட ரங்கம் வரையும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் வரையும் நடத்தப்படவுள்ளது.இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தங்களின் பெயரினை பதிவு செய்து, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் அவர்களின் ரத்தப்பிரிவு போன்ற தகவல்களை அளித்து வழங்கப்படும் உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 7-ந்தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெறும், போட்டி யில் கலந்து கொள்பவர்கள் காலை 5.20 மணிக்கு தங்களின் வருகையினை உறுதி செய்ய வேண்டும்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்க ளுடன் முதல் பரிசுத்தொகை ரூ.5000, 2-ம் பரிசுத்தொகை ரூ.3,000, 3-ம் பரிசுத்தொகை ரூ.2000 மற்றும் 4-ம் பரிசு முதல் 10-ம் பரிசுத்தொகை வரை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்படவுள்ளது.

    மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் பரிசுத்தொகையினை அவர்களின் வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கப்படும். ஆகவே வெற்றி பெற்றவர்கள் தங்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலினை கண்டிப்பாக கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×