search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Districts"

    • 4 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் தலைமையில் மருத்துவ முகாம்.

    தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புக்குள்ளானது.

    இந்த 4 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

    அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். 

    அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

    தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

    தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார்.

    அப்போத அவர் பேசியதாவது:-

    தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

    தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • கனமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் ஆலோசனை.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராஜ் பவனில் நடைபெற இருக்கிறது. 

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்.

    • நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதி கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து இரு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. #Rain #TN
    சென்னை:

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது அங்கிருந்து நகர்ந்து 28-ந்தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது.

    அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது.



    25-ந்தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain #TN

    நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது, மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு நிலவுகிறது. #Coalshortage #Powercut
    சென்னை:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில் 5 அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் 1வது நிலை 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது நிலை 1-வது அலகில் 600 மெகாவாட்டும் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2-வது நிலை 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. மொத்தம் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பழுது ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்கும் காற்றாலை மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை.

    தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 14,200 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 2,500 மெகாவாட் அளவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு நிலவுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி துணைமின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கிடைக்கும் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவி வருகிறது.

    தேனி மாவட்டத்தில் 3 முதல் 4 மணி நேர மின் வெட்டு நிலவி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இரவு 3 மணி நேரமும், பகலில் 2 மணி நேரமும் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. நகர் பகுதியில் இரவில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் 4 அல்லது 5 முறை மின்சாரம் தடைபடுகிறது. இரவிலும் மின்தடை செய்யப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் பகலில் 3 முறையும், இரவில் 2 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

    மதுரையில் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பகல் வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதிகளில் மின்வெட்டு காரணமாக அரிசி ஆலைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன் கோவில், புளியங்குடி பகுதியில் விசைத்தறி கூடங்களில் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலை களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மின் வெட்டு நிலவுகிறது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மணிக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    நேற்று மின்சாரம் நிறுத்தம் என்ற பெயரில் கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பொம்மிடி, வெ.முத்தம்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் மாதத்தில் 2 நாட்கள் மின் தடை என்று அறிவித்து மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுகிறது. இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். எனவே மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Coalshortage #Powercut
    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளன.
    சென்னை:

    கல்வி தரத்தில் நெல்லை மாவட்டம் எப்போதும் முன்னணியில் இருக்கும். ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என இதை பெருமையுடன் அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது பின்னோக்கி சென்றுள்ளது.

    பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டம் 10-வது இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 37,702 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 16,241 பேர் மாணவர்கள், 21,461 பேர் மாணவிகள்.

    312 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியவர்களில் 35,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் நெல்லை மாவட்டம் 96,08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவு. இதனால் இம்மாவட்டம் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய 312 பள்ளிகளில் 119 பள்ளிகளில் மட்டுமே 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை 7-வது இடத்துக்கு பின்நோக்கி சென்று விட்டது.

    இந்த மாவட்டத்தை சேர்ந்த 20,923 பேர் (8,510 மாணவர்கள், 11,475 மாணவிகள்) தேர்வு எழுதினர். அவர்களில் 95.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி விகிதத்தை விட குறைவாகும். அதாவது கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் 96.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

    கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரிக்கு உண்டு. ஆனால், நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் 95.08 சதவீதம் பெற்றுள்ளது. இதனால் இம்மாவட்டம் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



    கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,398 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் 10,260 பேர் 58 அரசு பள்ளிகளில் படித்தவர்கள். அதில் 4 ஆதிதிராவிட நல பள்ளிகள் மற்றும் மலைவாழ் நல பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளும் அடங்குவர்.

    பிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தெரிவித்தார்.

    ×