search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கொலை"

    • கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும், நீதிபதி இளவரசன் சிறை வளாகத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு சிறை காவலுக்கு உத்தரவிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க.வின் மாநில முன்னாள் தலைவரும்-மகளிருமான டாக்டர் தமிழிசை துணை நிலை கவர்னராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற- இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி "பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா…? என கேட்கிறேன்.

    அத்துடன், "உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மை தான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.



    அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை-அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை!

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித் தனமான கொலையையும்-பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க. ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங்கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.
    • இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல் முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், சிறுமியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.


    வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலமானது பாப்பம்மாள் கோவில் மயானத்தை அடைந்ததும் சிறுமியின் குடும்ப முறைப்படி சடங்கு செய்யப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சிறுமி பயன்படுத்திய புத்தகப் பை, பொம்மை, உடைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    • சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.
    • அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 2-ந்தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    சிறுமி மாயமான தினத்தன்று மாலையே சோலை நகர் மற்றும் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் முதலில் அலட்சியமாக விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. 2-வது நாளில் சிறுமியின் வீட்டை சுற்றியே தேடினர். மறுநாள் மோப்ப நாய் வரவழைத்து தேடும் பணிநடந்தது. மோப்பநாய் சிறுமியின் வீட்டில் இருந்து சிறிது துாரம் சென்று நின்று விட்டது.

    சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி கண்ணதாசன் வீதியில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்துள்ள வீட்டில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் தானாக அழிந்துவிட்டது.

    அழிந்துவிட்டதாக கூறப்பட்ட சி.சி.டி.வி.யின் ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட்ட மூலம் காட்சிகளை மீண்டும் ரெக்கவரி செய்து பார்த்திருந்தால் அன்றே கொலை குற்றவாளிகளை கைது செய்திருக்கலாம். ஆனால் அதில் போலீசார் கோட்டை விட்டதாக கூறப்படுகிறது.

    அதுபோல் சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.

    இதனால் உண்மை வெளியே தெரியவில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டது. சிறுமி மாயமான இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு அப்பால் உள்ள சி.சி.டி.வி.க்களில் சிறுமி குறித்து எதுவும் பதிவாகவில்லை என்பதால் சிறுமி வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.

    3-வது நாள் சிறுமி இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அங்குள்ள செப் டிக் டேங்க், குடிநீர் தொட்டி, பிரிட்ஜ்களில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போதும் சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    4-வது நாள் மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் உடல் அழுகிய நிலையில், கழிவுநீர் கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கட்டப்பட்ட மூட்டை வெளியே வந்தது. துர்நாற்றம் காரணமாக சிறுமி உடல் மிதப்பது வெளியே தெரிந்தது. அதன் பிறகே போலீசார் உடலை கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தகவலும் வெளியானது.

    இவை அனைத்தும் சிறுமி மாயமான வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலே நடந்து முடிந்து விட்டது.

    சிறுமி மாயமான 2-ந்தேதி மதியம் முதல் 5-ந்தேதி வரை 4-வது நாளில் சிறுமியை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    சிறுமி மாயமான அன்றே அப்பகுதியில் யார் கஞ்சா பழக்கம் உள்ளவர்கள். யார்? யார்? சிறுமியிடம் நெருங்கி பழகுபவர்கள் என விசாரணையை தொடங்கி இருந்தால் சிறுமியை முதல் நாளிலே கண்டு பிடித்திருக்கலாம்.

    அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    கொலை நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிக்க பகுதி. அருகருகே வீடுகள் உள்ளது. எப்போதும் சாலையில் மக்கள் அமர்ந்திருப்பர். இந்த பகுதியிலேயே துப்பு துலக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டதை காட்டுகிறது.

    கொலையாளிகளும் சிறுமி மாயமான நாள் முதல் சகஜமாக வெளியில் நடமாடியுள்ளனர்.

    • சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
    • வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.

    இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.

    • சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
    • சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.

    சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை சிறப்புக் குழு தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.


    இதற்கிடையே, பெற்றோரிடம் ஒப்படைக்க சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி மாநில டி.ஜி.பி. சீனிவாசன் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    • புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்.

    புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    ஆங்காங்கே போராட்டங்களும் வலுத்து வருகின்றன. புதுச்சேரி மாநில அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆகியோர் பந்த் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
    • சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

    மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு.
    • சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

    பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
    • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து அறிவிப்பு.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
    • தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை காலைத்து வருகின்றனர். pondஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    ×