search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தை கொலை"

    • புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
    • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து அறிவிப்பு.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவிக்குகிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வசந்தி கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார்(28), இவரும் அதே பகுதியை சேர்ந்த வசந்தி(26) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்குகிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வசந்தி கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் வசந்திக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததோடு கடந்த ஆண்டு கணவர் சசிகுமாருடன் சேர்த்து வைத்தனர். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அந்த குழந்தையையும், மனைவி வசந்தியையும் சரிவர கவனிக்காமல் சசிக்குமார் தினமும் மது குடித்து வந்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம்போல் சசிக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார்.

    கோபத்தில் இருந்த வசந்தி குழந்தையை 6அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டுள்ளார். வெளியே சென்று இருந்த சசிகுமார் வீட்டுக்கு வந்த போது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.

    சசிகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வசந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், கணவருக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் குழந்தை தண்ணீர் தொட்டியில் போட்டு மூழ்கடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தளி போலீசார் வசந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிறந்து 35 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×