search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கொலை"

    • மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
    • சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூடல்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 6 வயதாக இருக்கும் போது உடல்நலக்குறைவால் தாய் இறக்கவே, தந்தை வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிட்டார். உடன் பிறந்த அண்ணனும் கடந்த ஆண்டு ஆற்றில் மூழ்கி பலியானார்.

    பெற்றோர், உடன் பிறந்தவர் என உறவுகளை இழந்த சிறுமிக்கு அவரது பெரியம்மா கைகொடுத்தார். அவர் தனது தங்கை மகளை தன்னுடைய மகளாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். பெற்றோர் இல்லாத குறை சற்றும் தெரியாத அளவுக்கு அவர் மீது அன்பும், பாசமும் காட்டினார்.

    இந்தநிலையில் பள்ளி விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சிறுமி, குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா பலமுறை கதவை தட்டியும் குளியல் அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார். பதறியடித்துக்கொண்டு அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோது, அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுமியின் பெரியம்மா தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து கிடந்த வீட்டின் குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு கிழிந்த நிலையில் சிறுமியின் ஆடைகள் கிடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மதுரையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.

    இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.

    மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .

    இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.

    மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    • கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.
    • சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.

    சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த சிறுமியின் உடலை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால் சிறுமியின் பெற்றோரிடம் முத்தியால் பேட்டை போலீசார், கதிர்காமம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் மூலம் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

    இந்த ரத்த மாதிரிகள் கிருமாம்பாக்கத்தில் உள்ள தடவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    • சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.
    • கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    சிறுமி ஆசைப்பட்டதால் அவரின் தந்தை சிப்பிப்பாறை நாய் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அதற்கு 'ரோசி' என பெயரிட்டு வளர்த்து வந்த சிறுமி தினமும் நாய்க்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிடுவாள்.

    மேலும் சிறுமிக்கு விருப்பமான நூடூல்சை நாய்க்கும் கொடுத்து பழகியுள்ளார். தினமும் இரவு நாய்க்கு சிறுமி நூடூல்ஸ் வைப்பார்.

    சிறுமி இறந்த 2-ந்தேதி முதல் வாய் இல்லாத ஜீவனான அந்த நாய் உணவு உட்கொள்ளாமல் சிறுமியின் வீட்டையே சுற்றி வருவதும் இரவில் அழுவதுமாக உள்ளது. சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.

    கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    சிறுமியை பிரிந்துள்ள நாய்க்கு ஆதரவாக இருக்கும் அந்த பகுதி இளைஞர்கள் யாரை பார்த்தாலும் குரைக்கும். இந்த நாய் கடந்த ஒரு வாரமாக சத்தமின்றி அமைதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இரவு நேரங்களில் நாய் அழுவது அப்பகுதி மக்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
    • விவேகானந்தன் சோப்பை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19) மற்றும் விவேகானந்தன் (57) ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கஞ்சா போதையில் நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தியா கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க., சமூக நல அமைப்புகள் சார்பில் பந்த் போராட்டமும் நடத்தப்பட்டது.

    இதற்கிடையே காலாப்பட்டு ஜெயிலில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைப்பது வழக்கம்.

    ஆனால் அவர்களோடு சேர்த்து அடைத்து வைத்தால் சிறுமி கொலை குற்றவாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியதால், புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விவேகானந்தனும், கருணாசும் தனி அறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதி விவேகானந்தன் தனது சட்டையை கழற்றி அதில் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அதே அறையில் இருந்த கைதி கருணாஸ் கூச்சலிட்டார்.

    இதையடுத்து சிறை வார்டன்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர். சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஏற்கனவே விவேகானந்தன் சோப்பை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

    இதனால் வார்டன்கள் அவரை எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர் அடைக்கப்பட்டுள்ள அறையை கண்காணித்தும் வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க இன்று புதுவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    • புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது.

    இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் ஓட்டல்கள் மற்றும் சிறிய பெட்டி கடைகள் கூட திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வாசலில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவர். நேற்று பந்த் போராட்டம் காரணமாக அந்த உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

    இதை அறிந்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் இணைந்து உணவு தயாரித்து ஆஸ்பத்திரி எதிரில் உணவுக்காக தவித்த நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    மனித நேயமிக்க போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    • பஸ்கள் இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர்.
    • கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    கடலூர்:

    புதுச்சேரியில் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்தபோதும் கடலூரில் இருந்து கன்னியகோயில், மகாத்மா காந்தி, ரெட்டிச்சாவடி வரைக்கும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது.

    பஸ்கள் இயங்காத காரணத்தினால் இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர். இதில் கன்னியகோவிலுக்கு 30 ரூபாயும், மகாத்மா காந்தி கல்லூரி வரை 50 ரூபாயும், ரெட்டிச்சாவடி வரை 80 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு பயணிகளை ஏற்றி சென்று வருவதாக கூறப்படுகிறது.

    ஏராளமான பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.
    • பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்ய காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடந்தது.

    பந்த் போராட்டம் அறிவித்த இந்தியா கூட்டணி கட்சியினர் காலை 10 மணியளவில் ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒன்று கூடினர். அங்கு புதுவை அரசுக்கு எதிராகவும், முதலமைச்சரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென இந்தியா கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, திமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், சண்.சண்முகம், பிரபாகரன், சக்திவேல், தியாகராஜன், கலியகார்த்திகேயன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் நேரு வீதியில் ஆக்ரோஷமாக வந்தது. ஊர்வலத்தை நேருவீதி, மிஷன்வீதி சந்திப்பில் பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதியில் திரும்பினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அவர்களை தள்ளி விட்டு, ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன்வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.


    அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீசார் உட்பட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனாலும் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருநங்கைகள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.

    அவர்களை போலீசார் துரத்தி பாரதிதாசன் சிலை அருகே தடுத்து பிடித்தனர். பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை நோக்கி செல்ல விடாமல் தடுக்கும் வகையில் சுற்றி வளைத்தனர். திடீரென மீண்டும் அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஓடினர். சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.

    கவர்னர் மாளிகை வாசலில் நின்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை வாசல், சுற்றுப்புற பகுதிகளில் களேபரமாக இருந்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 திருநங்கைககளுக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. கைது செய்தோரை போலீசார் வாகனங்களில் ஏற்றி கோரிமேடு கொண்டு சென்றனர்.

    • சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம்.
    • போதைப்பொருகள் புழக்கத்தை தடுக்க தவறியதை கண்டித்தும் போராட்டம்.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

    புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை மயக்கத்தில் வாலிபர் செய்த இந்த வெறிச்செயல், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

    சிறுமி கொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

    சிறுமி கொலையை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டத்தை புதுவையில் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பந்த் போராட்டத்தால் புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை.

    புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்கள்தான் அதிகளவில் இயக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனத்தினர் பஸ்களை இயக்கவில்லை. அதோடு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை.

    தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளில் பயணிகளை இறக்கி சென்றது. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ஆட்டோக்கள், டெம்போக்களும் இயக்கப்படவில்லை.

    நகர பகுதியில் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தது. நேருவீதி, அண்ணா சாலை, மறைமலைஅடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பெரிய மார்க்கெட், சின்னமணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகளும் இயங்கவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தனர். இதன்படி பிளஸ்-2 தேர்வு எழுத மாணவர்களை அழைத்து செல்ல ஒரு சில தனியார் பள்ளி பஸ்கள் மட்டும் ஒடியது. பெரும்பாலான தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

    தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கவில்லை என்றாலும் அவைகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஒரு சில தொழிற்சாலைகளை தவிர பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது.

    பந்த் போராட்டத்தையொட்டி நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்நிலையம், பஸ்நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் வியாபாரிகள், ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையா ளர்கள், தொழிற்சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடமாற்றம்.
    • பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தற்போது மேலும் 11 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

    பணி இடமாற்றம் செய்யப்பட்ட 11 காவலர்கள் முத்தயால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள்.

    மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், சோலைநகர் காவல் நிலைய காவலர்களும் 11 பேரில் அடங்குவர்.

    • சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
    • இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. 

    சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    ×