என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sexually assaulted"
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளார். இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம்போல அந்த சிறுமி சண்முகவேலின் வீட்டிற்கு விளையாட சென்றது. அப்போது குடிபோதையில் இருந்த அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றது. சிறுமியிடம் அவரது பெற்றோர் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது சிறுமி, தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சண்முகவேலிடம் கேட்டனர்.
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
அனைத்து மகளிர் போலீசார் சண்முகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசும், பல்வேறு சமூக அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றங்கள் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாகவே தெரிகிறது.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பளாம் கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை, பள்ளி வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாகன ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. #NewDelhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்